Panithuli shankar - இன்று ஒரு தகவல் -பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 2

11


னைவருக்கும் வணக்கம் . வணக்கம் என்ற சொல் பழமையாக இருந்தாலும் தினம் தினம் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் சொல்லும் பொழுது புதுமையாகத்தான் தெரிகிறது . சரி இனி நாம் நேராக விசயத்திற்கு வருவோம் . சில தினங்களுக்கு முன்பு இன்று ஒரு தகவல் என்றப் பகுதியில் பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை என்ற தலைப்பில் பல வியப்பானத் தகவல்களை பற்றி எழுதி இருந்தேன் அதில் முதல் பகுதியில் .

பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 1
ரி இந்த இரயில்வே துறை என்றப் பெயரிலே இத்தனை ஆச்சரியங்களும் வினோதங்களும் இருக்கிறது என்றால் இன்னும் இந்த இரயில்கள் பயணிக்கும் ரெயில் பாதைகள் பற்றிய தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது. இதுவரை நீங்கள் அறிந்திடாத பல மர்மங்களையும், ஆச்சரியங்களையும் பல இரயில்பாதைகள் சுமந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரெயில்பாதைகள் அழுகிறதா..!? என்ன இது என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம்..! உண்மை அதுதான் என்று சொல்லவேண்டும்.

துவரை உலகத்தில் பலர் அறிந்திடாத மர்மங்கள் இந்த ரெயில் பாதைகளில்தான் புதைந்துகிடக்கிறது. எது அந்த ரெயில்பாதை..!?? அப்படி என்னதான் அங்கு நடந்தது.!?? என்பதை அறிந்துகொள்ள அடுத்தப் பதிவிற்காக காத்திருங்கள் என்று முடித்திருந்தேன். சரி அப்படி என்னதான் அங்கு நடந்தது என்பதை இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம் .
ன்று உலகத்தின் சிறந்த சுற்றுலா செல்லும் நாடுகளாக விளங்கும் மலேசியா , சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஒரு காலத்தில் அடர்ந்தக் பெருங்காடுகளாகத்தான் இருந்திருக்கின்றன. அதுமட்டும் இல்லாது உலகத்தின் மிகவும் கொடிய மிருகங்களும் ஒரு காலத்தில் அங்குதான் வசித்து வந்திருக்கின்றன. 18ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ம் நூற்றாண்டின் இறுதியிலும் சஞ்சாய் கூலிகள் என்ற அடிமைகள் சாலைகள், ரெயில் பாதைகள், ரப்பர் தோட்டங்கள் அமைத்து சிறிது சிறிதாக இந்த நாடுகளை வளப்படுத்தத் தொடங்கினர்.
1940-களில் மலேயா தீபகற்பம் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அப்போது மலேசியாவில் தமிழர்கள் கங்காணிகளாக (கண்காணிப்பாளர்கள்) வேலை பார்த்து வந்திருக்கிறார்கள். இவர்களின் மூலம் தமிழகத்தில் இருந்து வேலை செய்வதற்கு ஆட்களைத் திரட்ட ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர். இந்த கங்காணிகளும் அதற்கு தகுந்தாற்போல் தமிழர்களின் வறுமையை பயன்படுத்தி இலவச பயணம், கைகள் நிறைய வருமானம் என்று பல ஆசை வார்த்தைகளைக் கூறி பல லட்சம் தமிழர்களை அழைத்து சென்றனர்.
து நடந்து சில வருடங்களில் இரண்டாம் உலகப்போரில் ஆங்கிலேயர்கள் ஜப்பானியர்களிடம் தோற்றனர். மலேசியா ஜப்பானியர்கள் வசம் வந்தது. அப்பொழுது பர்மா வழியாக இந்தியாவிற்குள் புகுந்து இந்தியாவையும் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர ஜப்பானியர்கள் திட்டம் தீட்டத் தொடங்கினர். அதற்கு வசதியாக தாய்லாந்தில் இருந்து பர்மாவிற்கு ரெயில் பாதை அமைக்க முடிவு செய்தார்கள். இதற்கு பின் நடந்தது என்ன !? ரெயில் பாதை அமைத்தார்களா.. !? இந்தியாவை ஜப்பானியர்கள் கைப்பற்ற முடியாமல் போனதின் மர்மங்கள் என்ன ? என்ற கேள்விகளுக்கு அடுத்தப் பதிவில் பதில்கள் தொடரவிருக்கிறது ரெயில்பாதைகள் வழியாக காத்திருங்கள்.

                                    தொடரும் இந்த மர்ம ரெயில் பாதை

                                                                              
                                                         ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

தரை தொடும் வானம் - பனித்துளிசங்கர் இயற்கை கவிதைகள் -Nature kavithaigal 30 May 2011

12


காற்று வெளியில்
திறந்து வைத்தப் புத்தகத்தின்
வாசித்து முடிக்காத பக்கங்களாய்
படபடத்துக் கொள்கிறது
கற்பனைகளும் ,கனவுகளும் !

ட்டித் தொட்டுவிடும் வானமாய்
பார்க்கும் திசை எங்கும்
சரிந்துகிடக்கிறது மேகங்கள் .

ள்ளம் எழுத நினைத்தும்
எழுத்தாணி இல்லாத விரல்களாய்
ஒரு நீண்டதவிப்புடன்
இதயத்தில் சேமிக்க முயற்ச்சிக்கிறேன்
சற்றுமுன் ரசித்த
அந்த இயற்கைக் காட்சிக்கான
கவிதையை !              

                                                                 ❤ பனித்துளி சங்கர் ❤

  
 
                                                                                     
மேலும் வாசிக்க.. >>

குட்டிக் கவிதைகள் - பனித்துளி சங்கர் - KUTTIK KAVITHAIGAL -Panithuli shankar 29 May 2011

5


 காதல்
ன் காதல் வந்ததால்
ஒரு குவளை தண்ணீரில்
நீந்தத் தவிக்கிறேன் !
உன் ஒரு சொட்டுக் கண்ணீரில்
மீண்டும் பிறக்க துடிக்கிறேன் .!

                                           ❤ பனித்துளிசங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

உயிர் வலி - பனித்துளிசங்கர் கவிதைகள் - Uyir vali Kavithai -Panithuli shankar poem - 28 May 2011

19




றந்துபோன உடலில் எல்லாம்
மீண்டும் உயிர்பிக்கிறது மற்றொரு உடல் .
 கட்டி அனைத்துக்கொண்டு சிரிப்பதா !?
 இல்லைக் கட்டித் தழுவிக் கொண்டு அழுவதா !?
மாண்ட கணவனின் மேல்
மீளும் நினைவுகளுடன் கதறுகிறாள்
 சற்றுமுன் இந்த உலகம் பார்த்த
கைக்குழந்தையுடன் ஒருத்தி !.

யிரம் உறவுகள் ஆறுதல் சொல்லியும்
வற்றிபோகாத கண்ணீர் அருவிகள்
அவளின் விழிகளில் . 
மரணத்தின் முடிவில் இத்தனை இரனங்களா!?
முதல் முறை சுமக்கிறேன்
பணம் தேடிவந்த நண்பனின்
 பிணத்தை வெளிநாட்டில் !!.....

                               ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

கவிதை முகவரி - ( Kavithai Mugavari )- பனித்துளிசங்கர் காதல் குட்டிக் கவிதை- Tamil kadhal kavithai 27 May 2011

11



னது உலகத்தின்
முழுநேர முகவரி
உன் புன்னகைதான்.மறந்தேனும் 
சிரிக்காமல் இருந்துவிடாதே
மறந்துபோகக்கூடும்
எல்லோரும் என்னை !
 
 
                                 ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

பத்தாம் வகுப்பு (SSLC) தேர்வு முடிவுகள்- மே 2011 (Public Exam Results- May 2011)

12

ணக்கம் நண்பர்களே..!! அனைத்து மாணவ மாணவியர்களும், அவர்களது பெற்றோர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே- 2011 (SSLC Exam Results - May 2011) 27.05.2011 வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், தேர்வு முடிவுகளை (Exam Results) இணையதளங்கள் (Websites) வாயிலாகவும், கைபேசி (Mobile) குறுந்தகவல் (SMS) வாயிலாகவும் தெரிந்து கொள்ள பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.

டந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட SSLC தேர்வு முடிவுகள், விடைத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட தொய்வு, மதிப்பெண்கள் பட்டியல் தயாரிப்பதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக தள்ளிப்போக நேர்ந்ததாக பள்ளி்க்கல்வித் துறை தெரிவித்தது.

ற்பொழுது, விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் முழுவதுமாக முடிவடைந்து விட்ட நிலையில், நாளை தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 6,922 பள்ளிகளில் படித்த எட்டு லட்சத்து 57 ஆயிரத்து 956 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


தேர்வு முடிவுகள் காலை 10.00 மணியளவில் வெளியிடப்படும். இதனை
தமிழ்நாடு அரசின் இணையதளங்களான கீழ்கண்ட இணைப்புகளை க்ளிக் செய்து முடிவுகளை காணலாம். 
 
 
 
 
 
மற்றும்
 
 
னது அருமை சகோதர, சகோதரிகளான அனைத்து மாணவ மாணவியர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெற உங்கள் சகோதரன் பனித்துளி சங்கரின் நல்வாழ்த்துக்கள்...!
 * * * * * * *
மேலும் வாசிக்க.. >>

ஜோக்ஸ் சிரிக்கலாம் வாங்க நகைச்சுவை பனித்துளிசங்கர் சிரிப்பு கடி காமெடி துணுக்குகள் -Panithulishankar Tamil jokes +18

15

டிஸ்கி : எல்லோரும் முடிவில்தான் டிஸ்கி போடுவாங்க இவன் என்ன தொடக்கத்திலே போட்டு இருக்கானே என்று பதிவை வாசிக்கும் முன் கேள்வி கேட்க நேர்ந்தால் நீங்கள் நக்கீரன் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் என்று எண்ணிக்கொள்ளுங்கள்..! (ஹி.. ஹி...ஹி...)

'' உலகத்தில் மிகப்பெரிய சந்தோசம் நமது அருகில் இருப்பவர்களை சந்தோசப்படுத்திப் பார்ப்பதுதான்'' என்று எங்கோ படித்திருக்கிறேன். ( நீ எங்கட எங்களை சந்தோசப் படுத்திப் பார்த்த தக்காளி இத்தனை வருடமாக பதிவு என்ற பெயரில கொலை செய்தது போதாதா..!?? என்று மனசுக்குள் கொலை வெறியில் கோடாரியை தூக்குவது நல்லா இங்கு தெரியுது மக்கா..! அவசரப்படாதிங்க எதுவாக இருந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்...!! ஹி..ஹி..ஹி...) அதனால்தான் இதை வாசிக்கும் நீங்கள் அருகில் இல்லையென்றாலும் தூரத்தில் இருந்தே சிரித்து மகிழ இந்த நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்புகள் என சில துணுக்குகளை பகிர்ந்திருக்கிறேன். இவற்றை வாசித்துவிட்டு சிரிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. சிரிப்பு வராமல் யாருக்கேனும் மாறாக அழுகை வந்தால் அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.! ஹி...ஹி...ஹி... (ரைட்டு.... சைத்தான் சைக்கிள்ல வருது..!!!)

* * * * * * *
போடா, நீ முட்டாள் !
குமாஸ்தா : போடா, நீ முட்டாள் !
டைப்பிஸ்ட்: போடா, நீ தான் முட்டாள் !
மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?
நான் ஒருத்தன் இங்கே இருப்பது
உங்களுக்கு தெரியலையா ?
* * * * * * *

சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு.
ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு.
கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு.
சோமு - ராமு : ?!?!?!?!?!?
 
* * * * * * *
"அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட
"செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."
"உடம்பு நல்லா இருந்தா...?"
"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"
* * * * * * *
மணமகள் தேவை ஆணழகன் யானைக்கு சிரிப்பு /மொக்கை
 ஒரு யானை ஒரு எறும்பைப் பொண்ணு பார்க்க போனது . யானை எறும்புப்பெண்ணின் சிற்றிடை கண்டு மயங்கி கட்டினா அதைத் தான் கட்டுவேன்னு நாலு காலிலையும் நின்னது .ஆனா அந்த எறும்பு மறுத்து விட்டது . கேட்டதற்கு அந்த எறும்பு சொன்னது என்னவென்றால் பையனுக்கு கை நீளம் !
* * * * * * *
அப்பாவி மனைவிகள் / தப்பான கணவர்கள் சிரிப்பு / ஜோக்ஸ்

வேலைக்காரிக்கும் ரோஸிக்கும் ஒரு நாள் சண்டை வந்துவிட்டது. வேலைக்காரியை வீட்டைவிட்டு அனுப்புவதென்று முடிவானது. வேலைக்காரிக்கு சரியான கோபம். போவதற்கு முன் நல்லா நாலுவார்த்தை ரோஸியைக் கேட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று முடிவு செய்தாள். ''வீட்டைப் பாத்துக்கிறதுலயும் சமைக்கிறதுலயும் நான் உன்னைவிட பெட்டர்னு உன் புருஷன் என்கிட்ட சொல்லியிருக்கான்.'' ரோஸி கண்டு கொள்ளவில்லை. ''செக்ஸிலயும் உன்னைவிட நான்தான் பெட்டர்னு தெரியுமா உனக்கு?'' ரோஸி அலட்டிக் கொள்ளாமல் கேட்டாள், ''இதையும் என் புருஷன்தான் சொல்லியிருப்பான்.'' வேலைக்காரி சொன்னாள், ''இல்லை, தோட்டக்காரன் சொன்னான்.''
  * * * * * * *
"நேரங்காலம் தெரியாம உன் புருஷன் நடுசாமத்துல கொழந்தைகிட்ட கொஞ்சிகிட்டிருக்கிறாரே ? "
"குழந்தைகிட்ட இல்ல…என்கிட்டதான் அப்படி நடந்துக்கிறாரு "
"அதுக்கு ஏண்டி சமையல் ரூம்தான் கிடச்சதா…பெட் ரூம் என்னாச்சு ?"
"என்னது ?சமையல் ரூமா ? - அங்கே வேலைக்காரில்ல தூங்கினா… "

* * * * * * *
டாக்டர் : காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க ?
நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி .>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன் ..!
* * * * * * *
முட்டாப்பய தேர்வு சங்கம் ஜோக்ஸ் சிரிப்பு
 
ன்னதான் 300 பக்கம் படிச்சாலும் பரீட்சைல 30 பக்கம் தான் எழுத முடியும்” இப்படிக்கு 3 பக்கம் படிச்சு 30 பக்கம் தாண்டி அடிஷ்னல் பேப்பருக்காக கெஞ்சுவோர் சங்கம்
* * * * * * *
டீச்சர் : படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.
சுட்டிப்பைய்யன் : ஸ்கூல்லையா ?? வீட்லையா சார் ??
* * * * * * *
நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
* * * * * * *

கொசுவை ஒழிப்பது எப்படி ஜோக்ஸ் /சிரிப்பு ?

1. முதலில் உயிரோடு ஒரு கொசுவை பிடிக்க வேண்டும்
2. அதை மெத்தையில மேல படுக்க வைக்கவேண்டும்
3. ரெண்டு ரெக்கையும் ரெண்டு கையால் பிடித்துக்கொள்ள வேண்டும்
4. அப்பரம் அதோட வயித்துல கிச்சுகிச்சு மூட்டு
அப்போ கொசு சிரிக்க வாய திறக்கும் அப்போ உடனே அதோட வாயில ஒரு ஸ்பூன் பாய்சனை ஊத்திவிடு….
கொசு செத்துப்போய்டும்
இதையெல்லாம் விட கொசுவை சாகடிக்க இன்னொரு ஈசியான வழி என்னான்னா………………
கொசுவோட காதுல நீ “ஐ லவ் யூ” சொன்னேன்னா அதுவே அவமானம் தாங்காம தற்கொலை பண்ணிக்கும்.

* * * * * * *
 புதுமை பெண் நகைச்சுவை ஜோக்ஸ்

மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்"
" இந்தக் கதையெல்லாம் வேணாம். முதல என் கழுத்துல தாலிய கட்டுங்க"

* * * * * * *
தத்துவம்

ஆறுதல் சொல்ல தோழி இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு

தூக்கி நிறுத்த தோழன் இருந்தால் விழுவதில் கூட சுகம் உண்டு……..!!
* * * * * * *



* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar -இன்று ஒரு தகவல் -பிணங்கள் சுமக்கும் மர்ம ரெயில் பாதை- Mysterious Railways - PART 1

14

னைவருக்கும் வணக்கம். தினமும் நாம் இன்று ஒரு தகவல் என்றத் தலைப்பில் பல அரிய வியப்பானத் தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றி அறிந்து வருகிறோம் . நாம் கொடுக்கும் பதிவின் வாயிலாக யாரேனும் ஒருவராவது பயன்பெற வேண்டும் என்ற வீரிய நோக்கத்தில்தான் இந்த தகவல்களின் சேகரிப்பு மற்றும் பதிவுகள் தினம் தினம் ஒரு புதிய பரிமாணம் பெற்று சிறப்புடன் நகர்கிறது.
 இன்று நாம் பார்க்க இருக்கும் துறை உலகத்தில் மிகப்பெரியத் துறை என்று கூட சொல்லலாம். உலகத்தில் மிகப்பெரியத் துறையா அது என்ன என்று பலருக்கு ஆர்வம அதிகரிக்கும் சொல்கிறேன். இப்பொழுது ஏற்பட்டுள்ள அறிவியல் வளர்ச்சியின் சிறப்பால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு பல ஆயிரம் வகையான வாகனங்கள் உருவாக்கப் பட்டுவிட்டன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதில் முதல் தர வர்க்கத்தினர் எல்லோரும் அதிகமாக இப்பொழுது பயணத்திற்கு விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். என்னதான் விமானங்களின் சேவைகள் துரிதப்படுத்தப் பட்டாலும், உலகத்தில் இன்றும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் ஒரே போக்குவரத்துத் துறை இரயில் என்றுதான் சொல்லவேண்டும். அதற்குத்தான் பதிவின் தொடக்கத்திலியே உலகத்தின் மிகப்பெரியத் துறை என்று கூறியிருந்தேன்,

ம் நண்பர்களே..! உலகத்திலயே அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்யும் துறையும் இந்த இரயில்வேத் துறைதான் என்று சொல்கிறது ஒரு தகவல். அதிலும் இந்தியாவின் இரயில்வேத் துறையில் மட்டும்தான் உலகத்திலயே அதிகமானத் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

ரி இந்த இரயில்வே துறை என்றப் பெயரிலே இத்தனை ஆச்சரியங்களும் வினோதங்களும் இருக்கிறது என்றால் இன்னும் இந்த இரயில்கள் பயணிக்கும் ரெயில் பாதைகள் பற்றிய தகவல்தான் இன்று நாம் பார்க்க இருப்பது இதுவரை நீங்கள் அறிந்திராத பல மர்மங்களையும் ஆச்சரியங்களையும் பல இரயில்பாதைகள் சுமந்து தினம் தினம் அழுதுகொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரெயில்பாதைகள் அழுகிறதா என்ன இது என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். உண்மை அதுதான் என்று சொல்லவேண்டும் .

துவரை உலகத்தில் பலர் அறிந்திராத மர்மங்கள் இந்த ரெயில் பாதைகளில்தான் புதைந்துகிடக்கிறது எது அந்த ரெயில்பாதை அப்படி என்னதான் அங்கு நடந்தது என்பதை அறிந்துகொள்ள அடுத்தப் பதிவிற்காக காத்திருங்கள்.
மேலும் வாசிக்க.. >>

தொடரும் ஞாபகம் (Thodarum Gnapakam ) - பனித்துளிசங்கர் கவிதைகள் 23 May 2011

18


துநாள் வரை என்னைப் பற்றி மட்டுமே
கிறுக்கிய பேனா இனி வரும் நாளெல்லாம்
நம்மப் பற்றியே கிறுக்கும்
வ்வொரு நாட்களையும்,
ஒவ்வொரு நிமிடங்களையும்
புதிதாய் எனக்கு அறிமுகம் செய்தது
உந்தன் காதல்தான்....

ற்பனைகள் கற்றுத் தராதக் கனவுகளை
எல்லாம் நீ என்னைக் கடந்து
செல்கையில் மட்டுமே உணர்ந்துகொள்கிறேன்....

ரு நடைபழகும் குழந்தையாய்
துணைக்கு எப்பொழுதும்
உன் விரல் பிடித்து நடக்க ஆசை.....

ரு காகிதத்திற்குள் மறைத்துவைத்த 
மிட்டாய் ஒன்றை ஆவேசமாய்
பிரித்துப் பார்க்கும் குழந்தை ஒன்றின்
எதிர்பார்ப்புகளுடன் ஒன்றிப்போகிறது
உனக்கான என் காத்திருப்புகள்.....

சின்னஞ் சிறு வயதில்
கருப்பு வண்ணம் பூசிய
சிலேடுகளில் எல்லாம் முதல் வார்த்தை
அம்மா என்றுக் கிறுக்கி ரசித்த ஞாபகங்கள்
இப்பொழுதும் நீள்கிறது
உனது பெயரை எழுதும்பொழுது........

ன்னைப் பற்றிய இந்த நினைவுகள்
நீண்டுபோகட்டும்....
நம்மைப் பற்றிய கனவுகள்
அதில் தினம் தினம் புதிதாய் மலரட்டும் .
தென்றலின் சுவாசம் குடித்து
இந்த தேகம் மட்டும்தான் வளர்க்கிறது...
ஆனால் உந்தன் நேசம் குடித்து மட்டும்தான்
நான் இப்பொழுதும் உயிர் வாழ்கிறேன்.....
நரைத்துப் போயினும் உன்னை ரசித்திருப்பேன்
இந்த உயிர் மறைந்து போயினும்
உன் நினைவுகள் சுமந்திருப்பேன்...!!
                 
                                                                ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

ஜோக்ஸ் நகைச்சுவைகள் சிரிப்புகள்-Tamil Jokes Comedy -பனித்துளி சங்கர் 22 May 2011

17


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி ................

மொக்கையின் மாமியார் செத்துப் போயிட்டாங்க..! மொக்கை திடீர்ன்னு குமுறிக்குமுறி அழ ஆரம்பிச்சாரு.. மிஸஸ்.மொக்கை கடுப்பாயிருச்சு..
"சரிதான் நிறுத்துங்க.. எங்கம்மாவை உங்களுக்கு பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும்.. எதுக்கு இப்போ அவங்க செத்துக் கிடக்கறதைப் பார்த்து உருகி, உருகி ஓவர் ஆக்ட் பண்றீங்க..?"
"இல்லேப்பா.. என் அழுகைக்குக் காரணம் என்னன்னா.. உங்க அம்மா அசையறது போல இருக்கு.. பொழைச்சு எழுந்துடுவாங்களோன்னு பீதியா இருக்கு..!"

ஆசிரியர்:ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாய் போனால் எவ்வளவு??
மாணவன்: ஐந்து ரூபாயில் பெரிய ஒட்டைனு அர்த்தம் சார்.


மொக்கை : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!


மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
 நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"


ஆசிரியர்: எங்கே ஆங்கில எழுத்துக்களை வரிசையா சொல்லு
மாணவன்: பி, சி, டி,எப்
ஆசிரியர்: டே! ஏன்டா முதல் எழுது ஏ விட்ட??
மாணவன்: அது வயது வந்தவங்களுக்கு மட்டும் சார்


ஜோன்ஸ் : படத்தின் முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்
பீன்ஸ் : யார் வில்லனா?? கதாநாயகனா??
ஜோன்ஸ்: தயாரிப்பாளர்


இயக்குனர் :,இந்தப் படத்துல நன்றியுள்ள ஒரு நாய் காணாமப் போயிடுது சார். கடைசியில,
அதுவாவே சில நாய்ங்ககிட்ட விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு வீட்டுக்குத்
திரும்பிடுது!"
 கதாநாயகன் :"படத்தோட பேரு?"
இயக்குனர் "ஜிம்மி ரிடர்ன்ஸ்!"


ஜோன்ஸ் : என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
பீன்ஸ் :இப்பவாது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு.


ஜோன்ஸ் : இன்னிக்கு பேங் லீவு. இல்லைன்னா பணம் கிடைச்சிருக்கும்.
பீன்ஸ் :பேங்க்ல அக்கௌண்ட் வெச்சிருக்கியா...?
ஜோன்ஸ் : ம்ஹூம் பேங்க் கிளார்க் கிட்ட கடன் வாங்குவேன்.


டுத்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
'Addres'


ஜோன்ஸ் : பெண் பார்த்து வந்த பின் அவன் ஏன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.
பீன்ஸ் :துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று யாரோ சொன்னாங்களாம்.



ஜோன்ஸ் : இவர் பழக இனிப்பானர்
பீன்ஸ் :என்ன செய்றார்?
ஜோன்ஸ் : ஸ்வீட் கடை வச்சிருக்கார்.


ஜட்ஜ் சாமி தலையிலிருந்து கிரிடத்தை திருடினாயா?
திருடன் ஆமா எஜமான் சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டி க்கிட்டேன்.


ஜோன்ஸ் : ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கிறீங்க?
பீன்ஸ் :அது வாயில்லா ஜீவன்.


லோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!

இன்றைய நகைச்சுவை பாடல்    சினிமா
Night at the roxbury-What is love? comedy Song


மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு அரியத் தகவல் ; தோல்விகள் தரும் வெற்றிகள் - பனித்துளி சங்கர்-Indru oru thagaval 21 May 2011

20


னைவருக்கும் வணக்கம் தோல்வி என்பது ஒவ்வொரு உயிருக்கும் மகிழ்ச்சியை தருகிறதா!? அல்லது துன்பத்தை  தருகிறதா!? .என்று நம்மிடம் யாராவது ஒருவர் கேட்க்க நேர்ந்தால் நம்மில் பலர் அந்த மனிதரை மனநிலைப் பாதிக்கப் பட்ட ஒருவர் என்றுக் எளிதாக என்னிவிடுவோம் . சரி உண்மையாகவே இந்த தோல்வி ஒவ்வொரு  உயிருக்கும் துன்பத்தை தருகிறதா அல்லது மகிழ்ச்சியைத் தருகிறதா என்றுக் கேட்டால் எனது பதில் மகிழ்ச்சி என்றுதான் சொல்வேன். பலருக்கு குழப்பமாக இருக்கலாம் .முதல் முயற்ச்சியில் ஏற்படும் வெற்றி நமக்கு ஒருவிதமானப் போதையை ஏற்ப்படுத்தி செல்கிறது ஆனால் முதலில்  ஏற்படும் தோல்வி நமக்கு ஒரு புது முயற்ச்சியை பற்ற வைத்து செல்கிறது .நாம் தோல்வியடையும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையை அந்தத்  தோல்வி நமக்கு கற்றுத் தருகிறது என்பதுதான் உண்மை .வெற்றிப் பெற்றவர்களிடம் கேட்டால் அதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்வார்கள் ஆனால் தோல்வியடைந்த ஒருவனிடம் கேட்டால் ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கும் 

 தோல்வி என்பதற்கு வயது வரம்புகள் எதுவும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற மாணவன் தேர்வில் தோல்வியுறுவதில் துவங்கி, வானவியல் விஞ்ஞானி ஏவுகனையை சரியான வட்டப் பாதையில் நிறுத்த தவறுவது வரை அனைவரும் தம்தம் தொழிலுக்கு ஏற்றவாறு தோல்வியுறுகிறோம். இங்கு ‘தோல்வியே’ வாழ்க்கை கிடையாது. தோல்வியுறுவதின் மூலம் புதியனவற்றைக் கற்றுக் கொள்கிறோம். .  


னிதன் நிலவுக்கு சென்றதே மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் .கண்களையும் காதுகளையும் திறந்து வைத்திருந்தால் ஒவ்வொரு தோல்வியும் ஒரு பாடத்தைப் புகட்டும். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்திலுள்ள ஆசீர்வாதங்களே. பின்னடைவுகளும் தற்காலிகத் தோல்விகளும் இல்லாமல் நாம் எவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை ஒரு போதும் அறிய முடியாது.- சரியாக சொல்லவேண்டும் என்றால் தோல்வி ஒன்றுதான் இந்த உலகத்தில் பல வரலாற்று நாயகர்களை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்புவீர்கலாம் . ஆம்  எத்தனை பேருக்கு தோல்விகளால் சாதனை படைத்த இவர்களைப்  பற்றி தெரியும் என்று தெரியவில்லை . தெரிந்துகொள்ளுங்கள்
ணித மேதை ராமானுஜர் குடந்தைக் கல்லூரியில் ஆங்கிலப் பாடத்தில் தோல்வியுற்றார். பின்னாலில் கணிதத்தில் உலகப் புகழ் மேதையாவதை தோல்வி ஒன்றுதான் எனக்குக் கற்றுத்ததந்து என்றார்



ந்த மனிதனை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது . ஆனால் இவர் கண்ட தோல்விகளின் நீளத்தை இதுவரை யாரும் எட்டவில்லை என்று சொல்லலாம் .
வியாபாரத்தை 21 வயதில் தொடங்கினார் - தோல்வி.
மாகாண சட்ட சபைக்கு போட்டியிட்டார் - தோல்வி.
நரம்புத் தளர்ச்சி அவனுள் நாட்டியம் நடத்தியது - உடலளவான தோல்வி.
மறுபடியும் தேர்தலில் குதித்தார் - தோல்வி.
முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார் - தோல்வி.
பிறகு மக்கள் மன்றத் தேர்தலில் போட்டியிட்டார் – தோல்வி.
52வது வயதில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார் - வெற்றி அவரை முத்தமிட்டது.30 வருட காலங்கள் தன் வாழ்நாளில் தோல்வி ஒன்றையே சந்தித்த மாமனிதன் இறுதியாக தன் புகழ் உலகமெங்கும் பரவும் வண்ணம் வெற்றியை சந்தித்தார். அந்த மாமனிதர் தான் அப்ரஹாம் லிங்கன்.

நாடகத்தில் மட்டுமே நடித்து வந்த சிவாஜி கணேசனைப் பார்த்து “பையனுக்கு குதிரை முகம்” என்று படத்தயாரிப்பாளர் ஒருவரால் புறக்கணிக்கப்பட்டவர் பின்னாளில் ‘நடிகர் திலகம் சிவாஜியாக’ மாறினார்.
 வ்வொரு தோல்வியிலும் ஒரு பாடத்தை கற்றுக்கொண்டதாக மகிழ்ச்சியடையுங்கள். அந்த மகிழ்ச்சியே உன்னை வெற்றிக்கு இழுத்துச்செல்ல உதவும் மிகப்பெரும் சக்தியாகமாறிவிடும்!!!

தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள் ,தோல்வியைக் கொண்டாடுங்கள் . வாழ்க்கை என்பதன் மறுபக்கமே தோல்வி என்பதுதான்.இதை நாம் புரிந்துகொள்ளாத வரை அது நமக்கு துன்பமாகிறது . புரிந்துகொண்டால் அதுவே நமக்கு இன்பமாகிறது . எப்பொழுதும் முயற்சிகளுக்கு முறுக்கேற்றி வைய்யுங்கள்.நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள் .

டிஸ்கி : நான் எழுதிய முதல் கவிதை '' தோல்வியைக் காதலிக்கக் கற்றுக்கொள் இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு''
மேலும் வாசிக்க.. >>

முதல் கவிதை இரவு :Muthal kavithai iravu -பனித்துளி சங்கர் முதல் இரவுக் கவிதைகள் 20 May 2011

18



ரு பெண் ஒரு கவிஞரை மணக்கிறாள் .திருமணம் முடிந்த முதல் நாள் இரவு முதல் இரவிற்கு இருவரும் ஒரு அறைக்குள் சிறை வைக்கப்பட்டனர். அப்பொழுது தன் கணவனான கவிஞனிடம் கேட்கிறாள்.இத்தனை கவிதைகள் எழுதுகிறீர்களே..! எனக்காக இப்பொழுது ஒரு கவிதை எழுதினால்தான் நமக்கு முதல் இரவு என்கிறாள் அதற்கு கணவன் எனும் கவிஞன் சொல்கிறான் .


யாருமற்ற அந்த தனிமையில்
நான்கு சுவர்கள் மட்டும் பார்வையாளர்களாய்..
நீ என் அருகில் இருக்கும் பொழுதும்
உன் சுவாசம் என்னை தீண்டும் பொழுதும்
வெளிச்சம் இறந்துபோனப் பொழுதும்
இந்த இரவு உறங்கிபோனப் பொழுதும்
தேகங்கள் இரண்டும் ஆடைகளுக்கு விடுப்பு தந்த பொழுதும்
அந்த நிசப்தத்தை உனது கொலுசொலி கலைக்கும் பொழுதும்
உன் கூந்தல் எறிய பூக்கள் என் விரல்களால் காயப்படும் பொழுதும்
உனது விரல் நகங்கள் எனது தோள்களில் பதியும் பொழுதும்
ஒரு வேளை எழுதிப்போகலாம்
வார்த்தைகள் இல்லாத சில சத்தங்களை
கவிதையென உனக்காக நான்..........!
 
மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு பொங்கும் நகைச்சுவை சொற்பொழிவுகள் - கிருபானந்த வாரியார் - Panithuli shankar jokes speeches

13



னைவருக்கும் வணக்கம் நகைச்சுவை என்பது சிலர் இரத்தத்திலே ஊறி இருக்கும் . சாதாரணமாக சிலர் பேசும் எல்லா வார்த்தைகளுமே சிரிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை . அதில் என்னை மிகவும் கவர்ந்தவர்களில் கிருபானந்த வாரியாரும் ஒருவர்.கிருபானந்த வாரியாரை தெரியாதவர்கள் அதிகம் இருக்க இயலாது என்று சொல்லலாம் . முருகனின் தீவிரப் பக்தர் இவர் என்று சொல்லலாம் .

தைவைத்து சொல்கிறேன் என்றால் இப்படித்தான் ஒரு முறை
திருமுருக கிருபானந்த வாரியார் சொற்பொழிவு செய்யுமிடங்களில் இடையிடையே எளிமையான கேள்விகளைக் கேட்டு அதற்கு சரியான பதிலளிக்கும் குழந்தைகளுக்கு சிறிய அளவிலான புத்தகம் ஒன்றை வழங்குவார். இந்தப் புத்தகம் பெறுவதற்காக இவரது சொற்பொழிவில் முன் வரிசையில் குழந்தைகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஒருமுறை பாரதக்கதை சொல்லும் போது "மகாபாரதத்தில் பாண்டவர்களின் கடைசி தம்பியான சகாதேவன் மிகவும் ஞானி, அறிவாளி, புத்திசாலி என்றார். எப்போதும் வீட்டில் கடைசிப்பிள்ளையாக இருப்பவர்களுக்கு ஞானம் அதிகம்" என்றபடி கூட்டத்தில் இருக்கும் கடைசிப் பிள்ளைகளெல்லாம் கையை உயர்த்திக் காட்டுங்கள்" என்றார்.

ல சிறுவர் , சிறுமிகள் தங்கள் கையை உயர்த்தினார்கள்.
உடனே வாரியார் சுவாமிகள், " குழந்தைகளே...! நீங்கள்தான் கடைசிப்பிள்ளை என்று உங்கள் வீட்டில் நீங்கள் முடிவு செய்ய முடியாது. அது உங்கள் பெற்றோர்கள் செய்ய வேண்டிய முடிவு" என்றார்.
குழந்தைகள் தங்கள் கையைக் கீழே போட கூட்டத்தில் சிரிப்பொலி அடங்க சிறிது நேரமாயிற்று. என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .


மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் : உலகின் மிகப்பெரிய பல்கலைக் கழகம் ( Panithulishankar -Largest university in the world )

12


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். கடந்து ஒரு வாரமாக தேர்தல் முடிவுகள், புதிய முதல்வர், புதிய அமைச்சர் என பல எதிர்பார்ப்புகளுடன் கழிந்து போனது. சரி இனி நாம் விசயத்திற்கு வருவோம். பொதுவாக இப்பொழுது உலகில் ஒவ்வொரு நாடுகளும் தங்கள் நாட்டின் கல்வி வளர்ச்சியில் மிகவும் முனைப்புடன் திகழ்ந்து வருகிறது. காரணம் சிறந்தக் கல்விதான் ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை நாம் அனைவரும் நன்றாக அறிவோம். அந்த வகையில் உலகமே திரும்பிப் பார்க்கும் ஒரு பிரமிப்பை கல்வி சார்ந்தத் துறையில் ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா ரியாத் தலை நகரில் என்றால் நம்புவீர்களா !?

ம் நண்பர்களே..!! இதுநாள் வரை நம் அனைவருக்கும் சவூதி அரேபியா என்றாலே உடனே ஞபாகத்திற்கு வருவது உலகத்தின் மிகப்பெரிய மசூதி என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. அத்துடன் இப்பொழுது ஒரு புதிய சாதனையை பெண்களுக்காக மட்டுமே நிகழ்த்தி இருக்கிறார்கள் சவூதி அரபியர்கள். ஆம்..! உலகத்தில் மிகப்பெரிய பெண்கள் பல்கலைக் கழகம் (World's Largest University Gives Saudi Women Hope for Change ) ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் என்ன சிறப்பு என்றால் இந்தப் பல்கலைக் கழகத்தில் ஒரே நேரத்தில் ஐம்பது ஆயிரம் பெண்கள் பயிலும் அளவில் இந்த பிரமாண்டப் பல்கலைக் கழகத்தை வடிவமைத்து இருக்கிறார்கள்.
து மட்டுமல்லாது இதுவரை உலகத்தில் எங்கும் இல்லாத அளவில் ஒரு பல்கலைக் கழகத்திற்குள் ஆராய்ச்சிக்காகவும், நூலகத்துக்காகவும் இங்கு கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் புத்தகங்கள் கொண்ட நூலகம் அமைக்கப் பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் மாணவிகள் ஒரே நேரத்தில் தங்கிப் படிப்பதற்காக 12,000 அறைகள் கொண்ட தங்கும் விடுதிகளும் அருகில் ஏற்படுத்தி இருக்கிறார்கள். உடற்பயிற்சி, மற்றும் விளையாட்டு, சிறப்பு ஆய்வுகள் என இதன் சுற்றளவு 26 கி.மீ தூரத்தை தாண்டி நீள்கிறது இதன் பரப்பளவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!!

லகத்தில் முதன் முறையாக பல்கலைக் கழகத்தை முழுவதும் சுற்றி வருவதற்கு மெட்ரோ ரயில் அமைத்திருக்கும் ஒரே பல்கலைக் கழகம் இதுதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு பல்கலைக் கழகத்தில் பரப்பளவு விரிந்துக் கிடக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்..!

கால நிலையை மாற்றி அமைப்பதற்காக செயற்கையான முறையில் பல புதுமைகளை ஏற்படுத்தி இருக்கிறது சவூதி அரேபியா. 40000 சதுர மீட்டரில் சூரிய ஒளியின் மூலம் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவுகளையும் ஓரளவு மிச்சப்படுத்தலாம். அதிக குளிர் இல்லாமல், அதிக வெப்பமும் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் வெப்பநிலையை சீராக வைக்க சூரிய ஒளி பயன்படுத்தப்படுகிறது.

துமட்டுமல்லாது தேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும் பொருட்டு 700 படுக்கை அறை கொண்ட ஹாஸ்பிடல், கான்ஃபரன்ஸ் ஹால், பரிசோதனைக் கூடம், நோனோ டெக்னாலஜி சம்பந்தமான ஆராய்ச்சிப் பிரிவு, தகவல் தொழில் நுட்பம், உயிரியியல் போன்றவற்றிற்காக தனித்தனி துறைகள் இயக்கி இருக்கிறார்கள்.

த்தனை சிறப்பு மிக்க இந்தப் பல்கலைக் கழகத்தின் பெயர் நூரா பின்த் அப்துல் ரஹ்மான் பல்கலைக் கழகம் (Princess Nora Bint Abdulrahman University in Riyadh) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 20 பில்லியன் ரியால் தாண்டும் என்கிறது தகவல்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
மேலும் வாசிக்க.. >>

புகைப்பட அதிசயம் - உலகின் உயரமான பெண் -The Tallest Teen Girl in the World 18 May 2011

18














மேலும் வாசிக்க.. >>

காதல் யுகம் - Kadhal Yugam Kavithai -பனித்துளிசங்கர் காதல் கவிதைகள் 17 May 2011

35


 யார் விதைத்தது தெரியவில்லை ஆனால்
திரும்பும் திசை எங்கும்
பூத்துக் கிடக்கிறது இந்தக் காதல் !.

பசி எடுத்தும்
உன்னப்படாத உணவு
தாகம் எடுத்தும்
 குடித்து முடிக்காத தண்ணீர் 
பார்பவர்களின் கண்களுக்கு
பைத்தியம் என்று கூட எண்ணத் தோன்றும் .


கவிஞர் பனித்துளி சங்கர் கவிதைகள்

து மட்டுமா ஆடை உடுத்துகையில்
பொத்தான் இல்லாத இடத்தில் எல்லாம்
என்னதான் செய்கிறதோ விரல்கள் .
அவளை எண்ணிக்கொண்டே
பின் தொடர்ந்த நினைவுகள் திரும்புகையில்தான்
அறியப்படுகிறது எனக்காக
நான் இல்லாத நிஜங்கள் !.

ள் கடல் தொலைத்த இதயமாய்
திரும்பும் திசை எங்கும்
அலைமோதுகிறது ஒரு எதிர்பார்ப்பு .

த்தனை முறைதான் என்னில்
பறித்து செல்வாய் இன்றாவது
சரியாக கொடுத்துவிடு
சொல்லாமல் சொல்கிறது அவளுக்காய்
மீண்டும் பறித்த ரோஜா ஒன்று !

வளைப் பற்றி எண்ணிக்கொண்டே
பின்னிரவில் உறங்கி
முன்னிரவில் எழுத்து
தினம் அவளுக்கான முற்றுசந்தின்
காத்திருப்பில் உணரும் மகிழ்ச்சியை
சொல்லி தீர்க்க இந்த கவிதை போதாது
இன்னும் சில யுகங்கள் வேண்டும் !!..

                                            ❤   பனித்துளி சங்கர் ❤ 


மேலும் வாசிக்க.. >>

தமிழக அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறைகளும் - பனித்துளி சங்கர்- முதல்வர் பதவி ஏற்பு விழா 16 May 2011

10


 மிழகம் ஆவலுடன் எதிர்பார்த்த முதல்வர் பதவி ஏற்பு விழா இன்று பரபரப்புடன் நடைபெற்றுகொண்டிருக்கிறது . செல்வி ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. 33 எம்.எல்.ஏ.க்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். அமைச்சர்களின் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான துறைகளும் வெளியிடப்பட்டு இருக்கிறது .

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் காலை 12.15 மணிக்கு பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெறும்' என தலைமைச் செயலாளர் எஸ்.மாலதி தெரிவித்துள்ளார். இதையடுத்து, பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் ஆளுநர் செய்து வைக்கிறார்.


அமைச்சர்கள் பட்டியல் மற்றும் துறைகளும்
ஜெ யலலிதா---முதல்வர்---இந்திய ஆட்சிப் பணி,
போலீஸ் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய்
அலுவலர்கள், லஞ்சத் தடுப்பு, காவல், உள்துறை.

ஓ.பன்னீர்செல்வம்---நிதித் துறை

கே.ஏ.செங்கோட்டையன்---வேளாண் துறை

த்தம் ஆர். விஸ்வநாதன்---மின்சாரத் துறை

கே.பி.முனுசாமி---நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறை

சி.சண்முகவேலு---தொழில் துறை

ஆர்.வைத்திலிங்கம்---வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத் துறை

க்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி---உணவுத் துறை

சி.கருப்பசாமி---கால்நடைத் துறை

பி.பழனியப்பன்---உயர்கல்வித் துறை

சி.வி.சண்முகம்---பள்ளிக் கல்வித் துறை

செல்லூர் கே.ராஜு---கூட்டுறவுத் துறை

கே.டி.பச்சமால்---வனத் துறை

டப்பாடி கே.பழனிச்சாமி---நெடுஞ்சாலை மற்றும்
சிறு துறைமுகங்கள்.

ஸ்.பி.சண்முகநாதன்---இந்து சமய அறநிலையத் துறை.

கே.வி.ராமலிங்கம்---பொதுப்பணித் துறை.

ஸ்.பி.வேலுமணி---சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம்.

கே.டி.எம்.சின்னய்யா---பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை.

ம்.சி.சம்பத்---சிறுதொழில்கள் துறை.

பி.தங்கமணி---வருவாய்த் துறை.

ஜி.செந்தமிழன்---செய்தி மற்றும் விளம்பரத் துறை.

ஸ்.கோகுல இந்திரா---வணிகவரித் துறை.

செல்வி ராமஜெயம்--சமூகநலத் துறை.

பி.வி.ரமணா---கைத்தறி மற்றும் துணி நூல் துறை.

ர்.பி.உதயகுமார்---தகவல் தொழில்நுட்பத் துறை.

ன்.சுப்பிரமணியன்---ஆதிதிராவிடர் மற்றும்

ழங்குடியினர் நலத் துறை.

வி.செந்தில் பாலாஜி---போக்குவரத்துத் துறை.

ன்.மரியம் பிச்சை---சுற்றுச்சூழல் துறை.

கே.ஏ.ஜெயபால்---மீன்வளத் துறை.

.சுப்பையா---நீதித் துறை.

புத்திசந்திரன்---சுற்றுலாத் துறை.

ஸ்.டி.செல்லபாண்டியன்---தொழிலாளர் நலத் துறை

வி.எஸ்.விஜய்---சுகாதாரத் துறை.

ன்.ஆர்.சிவபதி---விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை.


மேலும் வாசிக்க.. >>

சில நிமிடங்கள் சிரித்தால் பல வருடங்கள் வாழலாம்-நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு :Panithuli shankar Tamil jokes 15 May 2011

13


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


panithuli shankar tamil jokes comedy nagaichuvai mokkai kadi lollu sirippu cinima kadi

குடும்பம் நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு

ருவர்: கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
மற்றவர்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம் அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...



ப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...



நீதிமன்றம் ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு

நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
கணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..



அரசியல் நகைச்சுவை ஜோக்ஸ்

ஒருவர்: என்னது தலைவர் உங்க குழந்தைக்கு ‘சனியன்’ னு பேர் வைத்து விட்டாரே...?
மற்றவர்: ஆமாங்க... மணியன்னு பேர்வைக்க இருந்த சமயத்திலே சம்மனைக் கொண்டு வந்து கொடுக்கவும் சனியன்னு வச்சிட்டார்.
 
 
லைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘குழந்தைக்கு ‘அசின்’னு பேர் வச்சதை மாத்தி, அனாசின்னு வச்சிட்டார்..!



சினிமா நகைச்சுவை சிரிப்பு

டிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
நடிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
நடிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
நடிகர் வடிவேலு: அப்ப சரி!!!



ஆசிரியர் மாணவன் நகைச்சுவை ஜோக்ஸ் சிரிப்பு  

ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
ஆசிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.


ஆசிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.
ஆசிரியர் : ??????????


ஆசிரியர் : மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.


ஆசிரியர்: நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!





சர்தார்ஜி ஜோக்ஸ் சிரிப்பு 
ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்






இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.

மேலும் வாசிக்க.. >>

முதல்வர் பதவி ஏற்பு செல்வி ஜெயலலிதா; அமைச்சர்கள் பட்டியல் வெளியீடு :பனித்துளி சங்கர் May 14 2011

13

  அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வாக்குகள் எண்ணப்பட்டன. காலை 10 மணி அளவில் அல்லாம் அதிமுக வெற்றி உறுதி செய்யப்பட்டது என்பதை அனைவரும் அறிவோம் . இதுவரை வரலாற்றில் ஏற்படாத மாற்றத்தை இந்த தேர்தலில் தமிழக மக்கள் ஏற்படுத்தி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கொடுத்திருக்கிறார்கள் .
திமுக தலைமையிலான கூட்டணி தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பொதுச்செயலர் செல்வி ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வராகப் நாளை பதவியேற்கிறார்.

அ.தி.மு.க. 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் தனித்து ஆட்சி அமைக்கிறது. தேமுதிக போட்டியிட்ட 41 தொகுதிகளில் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைக்க 118 இடங்களே தேவை என்ற நிலையில், அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் தனித்தே ஆட்சியைப் பிடிக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக 61 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

துநாள் வரை தமிழகத்தை ஆட்சி செய்ய இரண்டு பெரும்  கட்சிகளால் மட்டுமே முடியும் என்பதை பொய்யாக்கி 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது திமுக . திமுகவை பின்னுக்குத் தள்ளி தற்போது எதிர்க்கட்சி தலைவர்  என்ற பதவியை ஏற்கும் நிலையில் நடிகர் விஜயகாந்த் முன்னிலை ஆலோசனை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

ட்சி அமைப்பது, அமைச்சர் பட்டியல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.தி.மு.க.,வை காட்டிலும், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச் சரவை விசாலமாக இருக்கும். 35 பேர் வரை அமைச்சர் பட்டியலில் இடம் பெறக்கூடும். மாநில நிர்வாகிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டாலும், மாவட்ட செயலர்களில், சீனியர், எந்தவித புகாருக்கும் இடம் தராமல், கட்சி தாவாமல், ஒதுக்கிய தொகுதிகளில் வெற்றிகளை தேடித்தந்தவர்களுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கவும் செல்வி ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன .

துவரை வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையின் தொகுதிகள் வாரியாக யார் யார் எங்கு எவளவு ஓட்டுக்கள் பெற்று  வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியலை வாருங்கள் அறிந்துகொள்ளலாம் .



பட்டியலுக்கு நன்றி தினமணி .

மேலும் வாசிக்க.. >>

தமிழ் நாடு தேர்தல் முடிவுகள் மே13 - 2011 : பனித்துளி சங்கர் -Election results May 13 2011 tamilnadu !

13
னைவருக்கும் வணக்கம். இது வரை எப்பொழுதும் இல்லாத அளவில் இந்தியாவின் ஒவ்வொரு இதயங்களும் இன்று முதல் சற்று வேகமாக துடித்துகொண்டிருக்கும் என்பது உண்மை. அதற்கு முக்கிய காரணம் நாளை வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகள் (Election results ) என்றுதான் சொல்லவேண்டும்.

துநாள் வரை சீரியல்கள் பற்றி மட்டுமே சீரியசாக பேசிவந்த எல்லோரும் இன்று தேர்தல் முடிவுகள் (Election results) பற்றி பேசுவது இன்னும் ஒரு சுவாரஸ்யம் என்றுதான் சொல்லவேண்டும் அந்த அளவிற்கு திரும்பும் திசை எங்கும் நாளைய தேர்தல் முடிவுகள் பற்றிய ரிதங்கள் மட்டுமே ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தேர்தல் என்றாலே இந்தியாவின் மொத்தப் எதிர்பார்ப்புகளும் ஒன்றாய் குவியும் ஒரே மாநிலம் முக்கியமாக தமிழ்நாடு என்பது அனைவருக்கும் நன்றாக தெரிந்ததே. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைபோல் எப்பொழுதும் தமிழ் நாட்டை இரண்டு கட்சிகளே ஆண்டு வருகிறது அதில் ஒன்று திமுக-DMK கலைஞர் கருணாநிதி மற்றொன்று அதிமுக-ADMK செல்வி செயலலிதா என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றபோதிலும். அடுத்த ஐந்து ஆண்டுகள் தமிழ் நாட்டை சொரண்டப் போறவர் யார்..?? மன்னிக்கவும். ஆளப்போறவர் யார்..?? என்று அறிந்துகொள்ள இன்னும் ஓர் இரவு மட்டுமே மீதம் இருக்கிறது. இதற்கிடையில் தேர்தல் கமிசனின்((Election commission ) இன்றைய அறிக்கைகள் பலருக்கு பீதியை கிளப்பி இருக்கிறது.

ட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் கமிஷனர் (election commission ) பிரவீன் குமார் தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் ஓட்டு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வீடியோ காமிரா பொறுத்தப்பட்டு ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பிடிக்கப்படும் என்றார். இந்த புதிய முறையின் காரணமாக ஓட்டு எண்ணிக்கை பணி சற்று தாமதமாகும் என்றார். ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார். ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று முதலில் தபால் ஓட்டுக்கள் எண்‌ணப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட 5948 வழக்குகளில 1262 வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் எந்த மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்று கூறி இருப்பது பணம் கொடுத்தவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

டிஸ்கி : ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அரசியல்வாதிகளின் கண்களுக்குத் தெரியும் ஒரு காட்சிப் பொருளாக வாக்காளர்களாகிய நாம் இருக்கும் வரை இந்தியாவில் ஆட்சி இலவசங்களாலும் , சில நூறு ரோபாய் நோட்டுக்களாலும் மட்டுமே நிர்ணயிக்கப்படும் என்பது யாரும் மறுக்க இயலாத உண்மை !

மேலும் வாசிக்க.. >>

காதல் கனவுகள் : பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -Tamil Love Poem 11 May 2011

19

தயம் களவு போனதால்
இந்த உலகம் மறந்துபோனது.
ஒற்றைப் பார்வையில்
பற்றி எரிகிறது தேகம்..!
ற்றை நிலவு
ஓராயிரம் விண்மீன்கள்
எல்லாம் கொட்டிக் கிடக்கிறது
நினைவுகள் எங்கும்..!
விரல் தொட்ட
ஒற்றை வண்ணத்துப் பூச்சி
உன்னால் உலகமாகிப்போனது..!

ரு குவளையில்
ஊற்றி வைத்த மகிழ்ச்சியாய்
இதயமெங்கும் நிரம்பி வழிகிறது
ஒரு வெட்கம்..!

த்தனை நாட்களாய்
என்னுடன் உறங்கிய தலையணை
இப்பொழுதெல்லாம்
உன் தேகமாய்....!

தேதோ பேசிக்கொண்டு
கண்ணாடி முன் நின்று சரி செய்யும்
ஆடை எல்லாம்
வெட்கப் படுகிறது ...!

தெருவில் கடந்து செல்லும்
உடல்களில் எல்லாம்
உனது பிம்பங்கள்..
உற்றுப்பார்த்து
ரசிக்க நினைக்கையில்
களைந்து போகிறது
காட்சி பிழைகள்...!

காதலிப்பதாக சொல்லி இருப்பேன்
ஒருவேளை உன்னைக் கண்ட
அந்தக் கனவு இன்னும்
சிறிது நேரம் நீண்டிருந்தால்...!


                                              - ❤ பனித்துளி சங்கர் ❤


மேலும் வாசிக்க.. >>

வியக்க வைக்கும் தகவல்கள் : ஓவியங்களால் வரலாற்றை மாற்றிய Vincent வான்கா PART 1

19

னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் ஓவியம் பற்றியது. நம்மில் பலர் சொல்லிக் கொள்வதுண்டு எனக்கு ஓவியம் நன்றாக வரையத் தெரியும். எதைப் பார்த்தாலும் அப்படியே வரைந்துவிடுவேன் என்று. அது ஒவ்வொருவரும் தங்களின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. ஆனால் ஓவியம் என்பதற்கு இதுவரை எந்த தனிப்பட்ட விதிமுறைகளும் விதிக்கப்படவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஒரு சமூகத்தின், பண்பாட்டின், கலாசாரத்தின் மேன்மையை உணர்த்தும் அரிய சாதனமான இந்தக் கலைதான் மிருகங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்தி, அவனை மேலும் பண்புள்ளவனாக மாற்றித் தருகிறது. இனம், மொழி, தேசம் கடந்து மனிதம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் மகத்தான பொருளாகவும் விளங்கு கிறது.

சிலர் மனதில் தோன்றுவதை கற்பனையில் வரைவார்கள் அதையும் ஓவியம் என்று சொல்கிறோம். இன்னும் சிலர் உருவங்களே இல்லாத ஏதேனும் ஒன்றை வரைந்து அதற்கு ஏதேனும் ஒரு புதுமையான கதைகளை சொல்லி அனைவரையும் ரசிக்க வைக்கும் ஓவியர்களும் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்னும் சில ஓவியர்கள் வரையும் சில கிறுக்கல்கள் கூட பல அர்த்தமுள்ள ஓவியங்களை வெளிப்படுத்தும் திறமை உள்ளவை. இப்படி ஒவ்வொரு ஓவியனுக்குள்ளும் வார்த்தைகள் எதுவும் இல்லாத பல புதுமைகளும் ரசனைகளும் ஓவியங்களாக துரிகைகளின் தீண்டலில் உயிர்ப் பெறுகின்றன. மூன்று மணிநேரம் நாம் பார்க்கும் சினிமா படங்கள் ஏற்படுத்தாத ஒரு தாக்கத்தை ஒரு சிறந்த ஓவியம் ஏற்படுத்துவிடும் என்பது ஓவியங்களின் வண்ணங்களுடன் தங்களின் எண்ணங்களை பொருத்தி ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் இது நன்கு தெரியும்.


லகத்தில் எப்பொழுதும் இளமை மாறாத பொக்கிஷம் ஓவியங்களும் புகைப்படங்களும்தான் என்று எங்கோ வாசித்த ஞாபகம். உலகத்தில் இதுவரை அதிகம் விற்கப்பட்ட அனைத்து துறை சார்ந்த பொருட்களிலும் முதல் பத்து இடங்களுக்குள் ஓவியமும் இருக்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சரி..! நாம் இனி விசயத்திற்கு வருவோம்..!
வியம் என்றாலே நம் அனைவருக்கும் அதை வரைந்தவரின் பெயர் அறிந்து கொள்வதில்தான் ஆர்வம் அதிகம் இருக்கும். ஓர் ஓவியத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அதை வரைந்த கலைஞனின் வாழ்வைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு ஓவியங்களைப் பார்ப்பது, ரசப்பதே ஓர் சுகமான அனுபவமாக இருக்கும். அந்த வகையில் ஓவியர் வான்காவைப் பற்றி அறியாதவர்கள் ஒரு காலத்தில் குறைவாகவே இருந்திருக்க வேண்டும். அந்த அளவிற்கு தனது ஓவியத்தினால் பல லட்சம் ரசிகர்களின் இதயங்களிலும் வண்ணங்களை பூசி சென்றவர் என்று கூட சொல்லலாம்.




சில வியப்பான விஷயங்களை நாம் கேட்கும்போழுதோ அல்லது வாசிக்கும்போழுதோ நம்மில் பலர் பெருமூச்சு விடுவதுண்டு. ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையைப் பற்றி வாசிக்கும் ஒவ்வொரு நொடிகளும் எனக்கு பெருமூச்சாகவே நீண்டது என்றால் நம்புவீர்களா...!? ஆம் நண்பர்களே..!

தயங்கள் சிறைபிடிக்கப் படுவதற்கும் சிறைப்பட்டுப் போவதற்கும் இருக்கும் வித்தியாசத்தை இவர் கடந்த வாழ்க்கைதான் எனக்கு வேறுபடுத்திக் காட்டியது. அப்படிப்பட்ட மனிதரின் வாழ்க்கையை பற்றி இன்றையத் தகவலில் பதிவு செய்வதில் ஆயிரம் மத்தாப்பூக்கள் ஒன்றாய் பற்றவைத்த வெளிச்சமாய் உள்ளம் எங்கும் ஒரு சந்தோசத்தில் குதிக்கிறது. அப்படிப்பட்ட மகோன்னதமான கலைஞர்களில் ஒருவன்... வின்சென்ட் வான்கா (Vincent van Gogh  ) !
லைகளில் சிறந்த ஓவியத்தை தன் வாழ்வின் ஆதார மூச்சாகக்கொண்டு அதற்காகவே வாழ்ந்து, 37 வயதுக்குள் தன் கதையைத் துப்பாக்கியால் முடித்துக்கொண்டவன் வான்கா! இவர் 19ம் நூற்றாண்டின் இணையற்ற ஓவியர். இவரின் சிறப்பை சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் இவர் முழுமையாக வரையாமல் அரைகுறையாக விட்டு சென்ற ஓவியங்கள் கூட இன்று கோடிக் கணக்கில் விலை போகிறது.தினந்தோறும் வாழ்வின் ஒவ்வொரு மூச்சையும் ஒவியத்திற்காக அர்ப்பணித்தவன் . ஆனால் இவர் வாழ்நாள் முழுவதும் வறுமையின் கொடுமையை அனுபவித்தே இறந்தவர் என்றால் நம்புவீர்களா..!?

வின்சென்ட் வான்கா (Vincent van Gogh  ) 1853 மார்ச் 30ம் தேதி ஹாலந்து நாட்டில் பிறந்தவர்தான் இந்த ஏழை ஓவிய சிகரம். இதே நாளில் பிறந்து இறந்துபோன இவரின் அண்ணனின் நினைவாகவே இவருக்கு இந்தப் பெயரை வைத்தனர் அவர் பெற்றோர்கள். ஆனால் இது வான்காவிற்குப் பிடிக்கவில்லை இவருக்கு இறந்த பெயர் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது. இவரின் தந்தை ஒரு மதபோதகர் அவரிடம் இருந்து ஓவியர் வான்காவிற்கு அதிக அறிவுரைகள்தான் கிடைத்ததே தவிர ஒரு வளமான வாழ்வுக் கிடைக்கவில்லை. வான்காவின் குடும்பம் முழுவதும் வறுமை மட்டுமே ஒட்டிக் கிடந்தது இவரின் ஓவியத்தின் வண்ணங்களைப் போல....


வியர் வான்கா சிறு வயதில் இருந்தே படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்தார். வேறு வழியின்றி அவரின் பெற்றோர்கள் வான்காவை வெளியூரில் ஓவியக் கூடம் வைத்து நடத்தி வரும் தனது உறவினரின் வீட்டிற்கு எடுபிடி வேலை செய்ய அனுப்பி வைத்தனர். அப்பொழுது வான்காவிற்கு பதினாறு வயது. அப்பொழுதுதான் தன் வாழ்நாளில் முதன் முதலாக ஓவியம் என்பதையே தனது கண்களினால் பார்த்து பிரமித்து போய் நின்றார். தனது வாழ்வின் பின்னாளில் என்னவாக ஆவது என்ற ஒரு தீர்க்கமான முடிவுகள் எதுவும் இன்றி அவரின் மனம் அலைமோதிக்கொண்டே இருந்தது.

தற்கிடையில் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலிக்கத் தொடங்கினார். அந்தப் பெண்ணும் இவரை பிடிக்கவில்லை என்று சொல்லி உதாசீனப்படுத்தி சென்றுவிட்டால். மனம் மிகவும் நொந்துபோன வான்கா வேறு வழியின்றி விலை மாதர்கள் இருக்கும் இடத்திற்கு தஞ்சம் புகுந்தார். இறுதியாக விலைமாதர்களில் ஒரு பெண்ணையே திருமணமும் செய்துகொண்டார். அந்த பெண்ணோ வான்காவை மிகவும் கொடுமைப்படுத்தத் தொடங்கினார். வேறு வழியின்றி வான்காவின் அந்த திருமண பந்தமும் முறிந்துபோனது. இத்தனை பிரச்சினைகளை அவர் கடந்தபோது அவருக்கு அப்பொழுது 33 வயது. அப்பொழுதுதான் ஒரு நாள் சோகத்தின் சுமை தாங்க முடியாமல் தீக்குளித்து இறந்துபோவதெனே முடிவெடுத்தார்.

றுமையின் கொடுமையால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த இந்த ஓவியர் வான்கா (Vincent van Gogh  ) பின்பு எப்படி வரலாற்றை புரட்டிப்போடப்போகும் ஓவியங்களை வரைந்தார் என்ற மிகவும் சுவராஸ்யமான தகவல்களை அறிந்துகொள்ள தொடரும் பதிவில் பின் தொடருங்கள்.
 
                                தொடரும் இந்த ஓவிய சரித்திரம்
மேலும் வாசிக்க.. >>