பதிவர்கள் வாசகர்கள் அனைவருக்கும் "நன்றி" : Thanks for Blog support 2011

37


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள்.
குறுகிய காலத்தில் ஆயிரம் (1248 )  பின் தொடர்பவர்களையும் தினமும்
ஆயிரத்திற்கும் அதிகமான ஹிட்ஸுகளை வழக்கி என்னை உற்சாகப்படுத்தி 6 லட்சம் ஹிட்ஸுகளை கடக்க செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும், பதிவர்களுக்கும் என் இதயம் கலந்த ஆயிரம் , ஆயிரம் நன்றிகளை மகிழ்ச்சியுடன் சமர்பிக்கிறேன் !

"நன்றி" வளர்ந்து வரும் நாகரீகத்தில்
மறைந்து வரும் ஒரு அழகிய தமிழ் சொல்
 யார்யாற்கோ எதற்காகவோ எப்படியோ எல்லாம்
தினம் தினம் நன்றி சொல்கிறோம் -ஆனால்
நம்மை பெத்ததற்காய் நம் பெற்றோரிற்கு
என்றாவது நன்றி சொல்லி இருக்கிறோமா?
இல்லை நமக்கு கல்வி அறிவு ஊட்டிய
ஆசான்களுக்கு சொல்லி இருக்கிறோமா ??
இன்னும் காலம் முழுவதும் நம்மோடு
கலந்து வாழ வைக்கும் தென்றல் காற்று..
வாழும் போதும் மாளும் போதும்
நம்மை தாங்கும் பூமித்தாய் ...
நாளெல்லாம் ஒளிதரும் கதிரவன்...
நாம் வாழ உணவுதரும் விவசாயி
இப்படி எத்தனையோ ...நன்றிகளை
சொல்ல வேண்டிய ;சொல்ல மறந்த
நன்றிகளை ஒருதரமேனும்
சொல்ல வேண்டுமென நீ
நினைத்து பார்த்ததுண்டா??
இயன்றால் சொல்லிவிடு இன்றே
இனி வரும் தலைமுறைகள்
நன்றியா ! அப்படி என்றால் ? என்று
உன்னைப் பார்த்துக் கேட்குமுன் .!



மேலும் வாசிக்க.. >>

சிரிக்க சிந்திக்க ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி :Tamil Jokes, Tamil cinima Funny Jokes, Tamil Kadi Jokes, Tamil Humour comedy + 18 வியாழன் (24+02+2011)

26

ன்ன இது எப்பப் பார்த்தாலும் ஒரே கவலையில் இருக்கிறது இந்த உள்ளம் . கவலையை விடுங்க ! சோலியை முடிங்க  !  ஜாலியா சிரிங்க !


வேகமாக காரோட்டியதற்காக சர்தார் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அதிக வேகம் 50 கி.மீ ன்னு போட்டிருக்கே பார்க்கலியா..?"
 இல்லையே... 70 ன்னு தானே எல்லா எடத்திலேயும் போட்டிருக்கு.."
 யோவ்... அது Nh 70. இந்த நெடுஞ்சாலையோட பேரு.. சரி பொழைச்சு போ..
சிங்குங்கறதாலே சும்மா விடறேன்.. சரி ஏன் உங்க வீட்டுக்காரம்மா இப்படி
பேயறைஞ்சது மாதிரி வியர்த்துப் போய் உக்காந்து இருக்கு..?"
" கொஞ்சம் முன்னாலே Nh 140 லே வந்தேன்... அதான்..!"
ணவன்: கெட்டுப்போன உணவைப் பிச்சைக்காரனுக்குக் கொடுக்காதேன்னு சொன்னேனே கேட்டியா?
னைவி: ஏங்க...?
ணவன்: கன்ஸ்யூமர் கோர்ட்டுக்குப் போய் உனக்கு நோட்டீஸ் விட்டிருக்கான்.



சிரியர்: பொய் சொல்லக்கூடாது, பிறர் பொருள் மேல் ஆசை வைக்கக் கூடாது,பிறர் மனம் நோகப் பேசக் கூடாது.
மாணவன்: இந்த உலகத்திலேயே வாழக் கூடாதுன்னு சொல்லிடுங்க சார்...


டாக்டர்: இன்னும் நான் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
ந்தவர்: உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்...



ருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....
மற்றவன்: ஏன்?
ருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன
சொருகிடுறாங்க.




டாக்டர்: என்னங்க...எக்ஸ்ரேயில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
ந்தவர்: நீங்க தானே டாக்டர் தினம் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க...


ன் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..? ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!



ருவர்: அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா! ற்றவர்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய் சேர்த்திருக்காங்க...?
ருவர்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.



ருவர்: என்னப்பா இட்லி மல்லிகைப் பூ போல இருக்கும்னு சொன்னே... நீலக் கலரா இருக்கே?
ர்வர்: சொட்டு நீலம் கொஞ்சம் அதிகமாயிடுச்சு சார்...



ரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று கேட்டார்.

சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.
"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.


மேலும் வாசிக்க.. >>

தேகப் பிழை : கவிதைகள் : Love feeling kavithai in tamil + புதன் (23+02+2011)

21

பார்வை இல்லாத இரவுகளின் நிசப்தத்தில்
தேகங்கள் உரசும் சத்தம் நடு நிசி எங்கும்...
மெல்ல அணைந்துபோனது வெளிச்சம்
அவன் என்னை அணைத்துக்கொள்கையில்...
முடியாது என்பதும் சில நொடிகள்தானோ..!?
முரட்டுக் கரங்களின் தீண்டலில்
முற்றுபுள்ளி எட்டியது அதுவும்...!
அவனின் மோகம் தந்த தாகத்தில்
ஆடைகள் எல்லாம் அனுமதியின்றி
எடுத்துக்கொண்டது விடுமுறை..!
காமம் தீண்டிய மறு நொடி
கறைபட்டுப் போனது  காதல் !..

அவனின் ஞாபகங்களின் சுமைதாங்கி
ஒவ்வொரு நொடியும்
அவனுக்காய் இறக்கத் தொடங்கிவிட்டேன்...!
இனி உன்னைக் காதல் செய்வது
இறந்து போவதிலும் புதிதே..!!


மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் : தற்கொலை புறா : Indru oru thagaval Articles of Suicide birds +18 Tuesday (22+02+2011)

21


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். ”தற்கொலை” இந்த வார்த்தைக்கும் ”இயலாமை” என்ற வார்த்தைக்கும் அதிக தொடர்பு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். எப்பொழுது இதற்கு மேல் எதுவும் இயலாது என்ற எண்ணத்தை கையாளத் தொடங்கிவிடுகிறோமோ அப்பொழுது இந்த உலகத்தைப் பற்றிய எந்த எண்ணமும், முயற்ச்சியும் இன்றி ஒரு குறுகிய வட்டத்திற்குள் சென்று நின்றுவிடுகிறது மனசு. சரி இந்த தற்கொலை என்பது மனிதர்களாகிய நமக்கு மட்டும்தான் சாத்தியமா என்ற பலரின் சந்தேகங்களுக்கு இந்தப் பதிவு பதில் தரும் என்று நம்புகிறேன். தற்கொலை என்பது மனிதர்களாகிய நாம் மட்டும் செய்துகொள்வதில்லை. நம்மை விட பறவைகள் அதிக அளவில் தற்கொலை செய்துகொள்கின்றன என்று கண்டு பிடித்து இருக்கிறார்கள். சரி மனிதர்கள் தற்கொலை செய்துகொள்ள கையாளும் முயற்சிகள் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். அதெப்படி இந்தப் பறவைகள் தற்கொலை செய்துகொள்கின்றன என்பதை அறிந்துகொள்வதற்கு அனைவருக்கும் சிறு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


ரி இனி நாம் விஷயத்திற்கு வருவோம். பறவைகள் அதிக வயதை எட்டிய பொழுதோ அல்லது தங்களால் இனி சுயமாக இரை தேடி உயிர் வாழ இயலாது என்ற நிலை ஏற்ப்படும்பொழுதோ, பறவைகள் மேலும் வாழ விருப்பம் இல்லாமல் தற்கொலை செய்துகொள்வதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்து இருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் கோழியை அறுத்து அதன் இரை பையைப் பார்த்தால் அதில் சிறு சிறு கற்களாக பல கற்கள் இருப்பதை பார்க்கலாம். இதற்கு காரணம் நமக்குத் தெரிந்து கோழிகள் இரை என்று நினைத்து கற்களையும் சேர்த்து விழுங்கிவிடுவதாக்கத்தான் இதுநாள் வரை எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால் கோழிகள் மற்றும் பறவைகள் உணவுடன் சேர்த்து கற்களை தெரிந்தே உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். எதற்காக இந்த கோழிகள் மற்றும் பறவை இனத்தில் சில கற்களையும் சேர்த்து விழுங்குகிறது என்ற ஆராய்ந்துப் பார்க்கையில் மிகவும் விசித்திரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
  

ம் நண்பர்களே..! கோழிகள் தாங்கள் உண்ணும் தீனி நன்கு ஜீரணமாவதற்கு சற்று அதிக உறைவுக் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே இப்படிக் கற்களை உணவுடன் சேர்த்து உண்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்த கோழிகள் தான் தங்களின் உணவு ஜீரணத்திற்காக கற்களை உண்கிறது என்றால் இன்னும் ஒரு அதிர்ச்சியான தகவலை பறவைகளின் ஆய்வில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் என்றால் நம்புவீர்களா 1?. ஆம் நண்பர்களே..! புறா போன்ற சிறியப் பறவைகள் தங்களின் உயிரை தாங்களே மாய்த்துக்கொள்ள கற்களை உண்ணுவதாக விசித்திரமான முறையில் தற்கொலை செய்துகொள்ளும் விதம் பற்றி பறவை ஆராய்ச்சியாளர்கள் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள்.



 யர்ந்த மரக்கிளையில் வாழும் புறா போன்ற பறவைகள் தங்களின் வாழ்நாட்களின் இறுதி கட்டத்தில் உயரமான இடத்தில் தங்களின் இருப்பிடத்தை அமைத்து சிறு சிறு கற்களை சேமித்து வைத்துக்கொள்கின்றனவாம். இதற்கு காரணம் பறவைகளின் இளமை முடிந்து முதுமை ஏற்பட்டு, இனி தங்களால் பறந்து சென்று இறை தேட இயலாது என்ற நிலை வரும்பொழுது அந்தக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக விழுங்கி வருகின்றன.

 இறுதியில் இரைப்பையில் அதிக கற்கள் சேர்ந்து பாரம் அதிகமான நிலையில் தங்களின் இருப்பிடத்தில் இருந்தே பறக்க முயற்சி செய்யாமல் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வதாகவும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும், பறவையின் அடிப்படை இயற்பியல் அறிவினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

டிஸ்கி.- இப்படியெல்லாம் பறவைகள் தாங்களே கற்களை தின்றுவிட்டு தற்கொலை செய்வது அறிந்துதானோ என்னவோ நம்ம ஊர் நியாயவிலைக் கடைகளில் கல்லைக் கலந்து மக்களை போட்டுத் தள்ளப் பார்க்கிறார்களோ...???!!!! என்னக் கொடுமை சார் இது...!!

ன்ன நண்பர்களே..! இன்றைய தகவலும் உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
 
 
மேலும் வாசிக்க.. >>

சிறந்த தமிழ் பொன்மொழிகள் :Great thoughts of great people :( Saturday 19+02+2011)

30

சிறப்பாக வாழ்ந்து காட்டிய தத்துவ மேதைகளும் , அறிஞர்களும் தங்களின் அனுபவத்தில் உணர்ந்து எழுதி  நமக்காக விட்டு சென்ற சில சிறந்தப் பொன்மொழிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் .

நா‌ம் ந‌ம்முட‌ன் இரு‌க்கு‌ம் நப‌ர்க‌ளிட‌ம் அ‌ன்பு செலு‌த்த முடியாம‌ல் போனா‌ல், ந‌ம்மா‌ல் பா‌ர்‌க்க முடியாத கடவு‌ளிட‌ம் எ‌ப்படி அ‌ன்பு செலு‌த்த முடியு‌ம்? - ‌அ‌ன்னை தெரசா
எ‌ல்லோருமே உலக‌த்தை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்றுதா‌ன் எ‌ண்ணு‌கிறா‌ர்கள‌ே‌த் த‌விர, ஒருவரு‌ம் த‌ன்னை எ‌ப்படி மா‌ற்‌றி‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று எ‌ண்ணுவ‌தி‌ல்லை. - ‌லியோ டோ‌ல்‌ஸ்டோ‌ய்         
‌நீ‌ங்க‌‌ள் வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ல் அதை‌ப் ப‌ற்‌றி யாரு‌க்கு‌ம் ‌விள‌க்க வே‌ண்டியது ‌இ‌ல்லை. ஆனா‌ல் ‌நீ‌ங்க‌ள் தோல‌வி அடை‌ந்தா‌ல், அதை ப‌ற்‌றி ‌விள‌க்க அ‌ங்கே ‌நீ‌ங்க‌ள் இரு‌க்க‌க் கூடாது. - அட‌ல்‌ப் ஹ‌ி‌ட்ல‌ர்
             
ருவ‌ர் தா‌ன் எ‌ப்போதுமே எ‌ந்த‌த் தவறு‌ம் செ‌ய்த‌தி‌ல்லை எ‌ன்று கூறுவாரேயானா‌ல், அவ‌ர் எ‌ப்போது‌ம் பு‌திய ஒ‌ன்றை முய‌ற்‌சி‌த்த‌தி‌ல்லை எ‌ன்று அ‌‌ர்‌த்தமாகு‌ம். - ஐ‌ன்‌ஸ்டீ‌ன்

வெ‌ற்‌றி பெற மூ‌ன்று வ‌ழிக‌ள்
ஒ‌ன்று.. ம‌ற்றவ‌ர்களை ‌விட அ‌திகமாக தெ‌ரி‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.
இர‌ண்டு.. ம‌ற்றவ‌ர்களை அ‌திகமாக ப‌ணியா‌ற்று‌ங்க‌ள்
மூ‌ன்று... ம‌ற்றவ‌ர்களை ‌விட குறைவாக எ‌தி‌ர்பாரு‌ங்க‌ள்.
-‌வி‌ல்‌லிய‌ம்‌ஸ் ஷே‌க்‌ஸ்‌பிய‌ர்
‌நீங்க‌ள் எ‌ப்போது‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் 4 ‌விஷய‌ங்களை ம‌ட்டு‌ம் உடை‌த்து‌விடா‌‌தீ‌ர்க‌ள். அதாவது, ந‌ம்‌பி‌க்கை, ச‌த்‌திய‌ம், உறவு, இதய‌ம். ஏனெ‌னி‌ல், இ‌தி‌ல் எதையாவது உடை‌த்தா‌ல் அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்காது ஆனா‌ல் வ‌லி அ‌திகமாக இரு‌க்கு‌ம் - சா‌ர்ல‌ஸ்
எ‌ல்லோரையு‌ம் ந‌ம்புவது ‌பய‌ங்கரமானது. ஆனா‌ல் யாரையுமே ந‌ம்பாம‌ல் இரு‌ப்பது ‌மிகவு‌ம் பய‌ங்கரமானது - அ‌‌ப்ரகா‌ம் ‌லி‌ங்க‌ன்.
‌நீங்க‌ள் எ‌ந்த ‌பிர‌ச்‌சினையையுமே ச‌ந்‌தி‌க்காம‌ல் அமை‌தியாக செ‌ன்று கொ‌ண்டிரு‌ந்தா‌ல், உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை‌யி‌ல் தவறான பாதை‌யி‌ல் செ‌ன்று கொ‌‌ண்டிரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ம் - சுவா‌மி ‌விவேகா‌ன‌ந்த‌ர்.
திவு பிடித்திருந்தால் மறக்காமல் தங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.
மேலும் வாசிக்க.. >>

* முத்த வெட்கம் : காதல் குட்டிக் கவிதை : பனித்துளி ஷங்கர் +18 (16+02+2011)

44

வெட்கம்

ட்டி அணைத்து
நீ தந்த ஒற்றை முத்தத்தில்
நம்மைப் பார்த்து
சிலிர்த்துகொண்டது
மழையில் நனைந்த
சாலையோர மரங்களெல்லாம் 
 வெட்கத்தில்..!
* * * * * *
மேலும் வாசிக்க.. >>

பனி விழும் தேகம் : PANITHULI SHANKAR காதல் கவிதைகள் 10.+02+2011

22


ரு உடல்களுக்கு இடைப்பட்ட தூரத்தை
 பார்வைகள் அளக்கத் தொடங்கிவிட்டது .
சுவாசம் தொடும் தூரத்தில்
பார்வைகளின் உரையாடல்.!
முத்தம் இட்டு
இடைவெளி தந்த தருணத்தில்
 சத்தமின்றி இளைப்பாறத் தொடங்கிவிட்டது இதழ்கள் .
உடைந்த வானம்
கொட்டித் தீர்த்த மழையிலும்
நனைய மறுத்து துள்ளிக் குதிக்கிறது
மீண்டும் தரை தொடத் துடிக்கும் மழைத்துளியென
நம் காதல்...!!!
* * * * * *
மேலும் வாசிக்க.. >>

தமிழ் ஜோக்ஸ் நகைசுவைகள் காமெடி சிரிப்பு மொக்கை நையாண்டி கடி + 18 (08+02+2011)

25



சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி


ஆசிரியர் : புத்தர் சொன்னது போல் நாம் நமது ஐம்புலன்களை அடக்கினால் என்ன ஆகும் ?
மாணவண் : ஆம்புலன்ஸ் வரும் சார்..
 

ன்ன சார் கார் டேங்கை ஓபன் பண்ணிட்டு
சிரிக்கிறீங்க?
மனசு விட்டு சிரிச்சா ‘ஆயில்’ கூடுமின்னு சொன்னாங்க…
அதான்!



வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.
வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?
மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்..
 


சார், என் wife -பை காணோம்..!
இது போஸ்ட் ஆபிஸ், போலீஸ் ஸ்டேஷன்
இல்லை..!
சாரி சார்…சந்தோஷத்துல என்ன செய்யறதுன்னு
தெரியாம இங்கு வந்துட்டேன்!
 



ரவு மூணு மணிக்கு நல்லா தூங்கிட்டு இருந்த பொண்டாட்டிய புருஷன் தட்டி எழுப்பினான்.
பொண்டாட்டி:- என்னாங்க, இந்த நேரத்துல..
புருஷன்:- ஒரு அதிசயம் நடந்துருச்சிடி..
பொண்டாட்டி:- என்னா அதிசயம்?
புருஷன்:- ஒண்ணுக்கு இருக்கலாம்னு பாத்ரூம் கதவ திறந்தேனா, தானாவே லைட் எரிஞ்சுதுடி. அப்புறம் ஒண்ணுக்கு இருந்துட்டு கதவை மூடினா தானா லைட் நின்னுடுச்சி. என்னா அதிசயம் பார்த்தியா?
பொண்டாட்டி:- அறிவுகெட்ட முண்டம், தூக்க கலக்கத்துல பாத்ரூம்ன்னு நினைச்சி பிரிட்ஜ திறந்து ஒண்ணுக்கு இருந்துட்டு கதை சொல்றியா, மூடிகிட்டு படு..
புருஷன்:- !!!!!!!??????????????


 
சிரியர் : மனுசனா பொறந்தா ஏதாவது சாதிக்கனும்.
மாணவர் : சாரி சார் நாங்க குழந்தையா தான் பிறந்தோம்..  



சிரியர் : ஏண்டா பார்முலாலாம் விரல்ல எழுதி வச்சுருக்க
மாணவன் : எங்க டீச்சர் தான் சொன்னாங்க பார்முலாலாம் "ஃபிங்கர் டிப்ஸ்ல இருக்கனும்னு.



ல்லோ யார் பேசுறது ?
 நான் செல்லமா பேசுறேன்.
 நாங்க மட்டும் என்ன கொவமாவா பேசுறோம்
 பேரை சொல்லுமா !?


 ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

மேலும் வாசிக்க.. >>

அமீரக குறும்படம் சித்தம் அறிமுகம் : SITHAM (Short Film)

21


னைத்து நண்பர்களுக்கும் வணக்கம் உங்கள் அனைவரையும் இந்த அறிமுக குறும்படம் என்ற பதிவில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அவசரமான உலகத்தில் மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பல ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் இதயம் என்னும் சிறு குடுவைக்குள் நிரப்பி, அதை எப்படியும் தன்வசப் படுத்திக்கொள்ள தினமும் பல புதிய எண்ணங்களை சிந்தைகளில் விதைத்து அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். என்னதான் தினமும் மனிதர்களாகிய நாம் நிற்காமல், சுழலும் இயந்திரமாக உழைத்தாலும் நமது இதயங்களையும் புதுப்பிக்கும் அதிசயமாக நம்முடன் பொழுதுபோக்கு என்ற ஒரு பொக்கிஷமும் வளர்ந்து வருகிறது.

ம்மில் பலருக்கு விளையாடப் பிடிக்கும் இன்னும் சிலருக்கு வாசிக்க பிடிக்கும் இன்னும் சிலருக்கு எழுதுவது பொழுது போக்காக இருக்கலாம். ஆனால் இறுதியாக எடுக்கப் பட்டக் கருத்துக்களின் படி உலகத்தில் அதிகமானவர்கள் தங்களின் நேரத்தை செலவிடுவதற்கு பயன்படுத்தும் ஒரே பொழுது போக்கு சினிமா என்று உறுதி செய்திருக்கிறார்கள். இன்று நாம் பார்க்க இருப்பதும் ஒரு குட்டி சினிமா பற்றிதான். அது என்ன குட்டி சினிமா (short movie)...!?

வாய்ப்புகளை தேடி செல்லாமல் தாங்களே தங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு சாதனை உலகம்தான் இந்த குறும்பட சினிமா என்று சொல்லவேண்டும். எண்ணங்களையும் ஏக்கங்களையும் எந்த எதிர்பார்ப்புகளும் இன்றி தங்களின் சிந்தைகளில் பூக்கும் பூக்களை மக்களாகிய நம்மீது அள்ளி வீசுவதில் இன்றைய நிலையில் இத்தகைய குறும்படங்கள் முதன்மை வகிக்கிறது என்று சொல்லலாம். பல கோடிகள் செலவு செய்து பல மணி நேரங்களை கரைத்து புரிய வைக்க இயலாத பல உணர்வுகளை சில நிமிடங்களில் சிறப்பாக சிந்தையில் தைக்க செய்கிறது இந்தக் குறும்படங்களின் தொகுப்புகள். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் அமீரகத்திலிருந்து ஒரு புதிய லாரன்ஸ் என்ற நட்பின் உறவொன்று அழைப்பிதழில் வந்தது பேசத் தொடங்கிய சில நிமிடங்களில் சந்திக்கத் தூண்டிய ஒரு அழகிய தருணம் என்ற என்னை உணர வைத்தது அவரின் உரையாடல். அறிமுகத்தில் துவங்கிய எங்களின் உரையாடல் மெல்ல சினிமா என்ற ஒரு கலை உலகத்திற்குள் மெல்ல நடைபோடத் துவங்கியது. அப்பொழுது நாங்கள் ஒரு குறும்படம் short movie தயாரித்து இருக்கிறோம். ”சித்தம்” என்ற பெயரில் என்று அவர் சொன்னபொழுது முதலில் ”சித்தமா அப்படியென்றால் என்ன ??” என்ற ஒரு கேள்வி மெல்ல எழுந்தது. எங்களின் உரையாடல் இடைவெளியொன்றில் குறும்படம் என்றாலே ஒரு இனம் புரியாத மோகம் எனக்கு. அதிலும் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் இயக்கி இருக்கிறார் என்று சொல்லும்பொழுது பார்க்காமல் இருக்க இயலுமா..!? எனது ஆர்வத்திற்கு சில தினங்கள் தடை போட்டு வைத்தது நண்பரின் பதில் தற்போதுதான் இணையத்தில் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருக்கிறது. நாளை தருகிறேன் நண்பரே என்று சொல்லிவிட்டார். அவர் சொன்னது போலவே மறுநாள் சித்தம் என்ற குறும்படத்தில் ஒரு அழகிய அறிமுகத்துடன் இணைப்பு மடலில் வந்திருந்தது. இது வரை நான் குறும்படங்களில் ஒரே பகுதியில் கதை அனைத்தையும் சுருக்கி முடித்து இருப்பதைத்தான் பார்த்து இருக்கிறேன். ஆனால் முதல் முறையாக இரண்டு பகுதிகளாக ஒரு குறும்படம் பார்த்த அனுபவத்தின் பரவசத்தை சொல்ல வார்த்தைகள் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்.
 
 ஆம் நண்பர்களே..! சினிமா துறை சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத ஒரு நபர் தனது கையில் கிடைத்த ஒரு கேமராவை வைத்து இந்த சமுதாயத்திற்கு என்போன்றவர்களாலும் சில சிந்திக்க வைக்கும் குட்டி சினிமா ஒன்றை தர இயலும் என்ற ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதை அவரின் வார்த்தைகளிலும் அந்த குறும்படத்தை பார்த்த பொழுதும்தான் உணர்ந்துகொண்டேன். மொத்தத்தில் இந்த நண்பர் தயாரித்திருக்கும் ”சித்தம்” என்ற குறும்படம் விழிப்புணர்வின் உச்சம் எனலாம். நண்பர்களே..! நீங்களும் இந்தக் குறும்படத்தை பார்த்துவிட்டு


சித்தம் குறும்படத்தின் PART -1

சித்தம் குறும்படத்தின் PART -2
 
ங்களின் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். உங்களின் கருத்துக்கள் மட்டும்தான் மீண்டும் ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று முழுமையாக நம்புகிறோம்.
 
 
மேலும் வாசிக்க.. >>

இரகசிய நினைவுகள் : பனித்துளி ஹைக்கூ கவிதைகள் படைப்புகள் +18 (02+02+2011)

24



ந்த ஒற்றைக் குடைக்குள்
உன் நினைவுகளை சுமந்து துள்ளித் தெறிக்கும் மழையை ரசிப்பதில்தான்
எத்தனை சந்தோசம் !





தழ்கள் சொல்லாத
உன் இதயத்தின் இரகசியம் ஒன்றை
காதல் என காட்டிக் கொடுக்கிறது என்னிடம் .
நீ காகிதத்தில் கிறுக்கியக் கவிதையொன்று !
ட்டி அணைக்க இயலாத எழுத்துக்களிலும்,
மறைத்து வைக்க இயலாத ஊடல்களிலும்
மெல்ல மெய்மறந்து உறங்கிபோகிறேன்
உன் கவிதை தீண்டிய மயக்கத்தில்
 காதல் உண்ட மங்கையென !


திவு பிடித்திருந்தால் மறக்காமல் உங்களின் கருத்துக்களையும் ஓட்டுக்களையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்

மேலும் வாசிக்க.. >>