அரிய தகவல்கள் ஆயிரம் : கைக்குட்டை தோன்றியக் கதை : interesting world articles :30+01+2011

28


னைத்து நண்பர்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இன்று ஒரு தகவலின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஆடைகளே இல்லாமல் இருந்தான் மனிதன் ஒரு காலத்தில் அதை நாகரிகமற்ற கற்காலம் என்றோம். பின்பு உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் இலை தழைகளைக் கொண்டு தன்னை மறைத்துக் கொண்டான். ஆஹா..! சிந்திக்கத் தொடங்கிவிட்டான் மனிதன் என்று சொன்னோம். பின்பு இன்னும் வளர்ச்சி அடைந்து ஆடைகள் என்ற பெயரில் பல துணிகளை உடல் முழுவதும் சுற்றிக்கொண்டான். ஆஹா..! மனிதன்தான் நாகரிகத்தின் உச்சம் என்றோம். சுற்றிய ஆடைகளை சற்று தேவைகளுக்கு ஏற்ப அழகு படுத்த தொடங்கினான். ஆஹா..! மனிதன்தான் ரசனையின் உச்சம் என்றோம். அதே ஆடை இன்று மெல்ல மெல்ல குறையத் தொடங்கி மீண்டும் ஆதிகாலத்திற்கு சென்று விட்டது.

 கைக் குட்டை அளவில் உடுத்திக் கொள்வதுதான் இன்றைய அதி நவீன வளர்ச்சியின் அழகான மகத்துவம் என்று ரசிக்கத் தொடங்கிவிட்டோம். இனி வரும் காலங்களில் ஆடை என்ற ஒன்று முகவரி இழந்து எங்கேனும் தொலைந்து போகும் நிலை வரலாம். சரி இது ஒருபக்கம் இருக்கட்டும் இன்றையத் தகவலுக்கும் இந்த ஆடைக் குறிப்புக்கும் என்ன இருக்கிறது என்று பலரின் உள்ளங்களில் கேள்விகள் எழலாம். உலகத்தில் இதுவரை உருவாக்காப்பட்ட ஆடைகளின் வடிவமைப்பை கணக்கெடுக்கத் தொடங்கினால் பல நூற்றாண்டுகளைப் பிடிக்கும் என்று ஒரு தகவல் கூறுகிறது. இதுதான் உண்மையும் கூட என்று சொல்லவேண்டும் காரணம் காலத்தின் வேகத்தை மிஞ்சும் அளவிற்கு மனிதனின் புதுமைகள் அதிவேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய அவசர உலகத்தில்.

ன்று வட்டமாக இருக்கும் ஆடை ஒன்று நாளை சதுரமாக மாறிவிடுகிறது. நாளைக்கு சதுரமான ஆடை எந்த வடிவத்தில் உருவம் பெரும் என்று யாரும் யூகிக்க முடியாத அளவில் மனிதர்களாகிய நாம் ஆடைகளில் தினமும் ஒரு புதுமையை உருவாக்கி கொண்டே இருக்கிறோம். சரி இனி விஷயத்திற்கு வருவோம். என்னதான் இந்த உலகத்தில் இதுவரை ஒவ்வொரு ஆடையும் பல வடிவங்களைக் கொண்டு திகழ்ந்தாலும் இன்னும் உலகத்தில் ஒரே வடிவத்தை மட்டுமே அதிகமானவர்கள் பயன்படுத்தும் ஒன்று உள்ளது என்றால் அது கைக் குட்டை ஒன்றுதான் என்று சொல்லவேண்டும். சரி இந்த கைக் குட்டையில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கத் தோன்றலாம். நமது மனித இனத்தில் பலர் ஆடைகளை பயன் படுத்துவதற்கு முன்பாகவே இந்த கைக் குட்டைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது உலகில். ஒரு காலத்தில் இன்று மொபைல் போன்களைப் போல அனைவரின் கைவசம் இந்தக் கைக்குட்டைகள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்றும் பயன்படுத்தப்பட்டும் வருகிறது. சரி இதன் வடிவத்தில் என்ன சிறப்பு என்று நாம் பார்க்கலாம். பொதுவாக இதுவரை கைக் குட்டைகள் அதிகமாக சதுர வடிவத்தில்தான் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஒரு மிகப்பெரிய காரணமும் அடங்கி இருக்கிறது என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை தெரிந்துகொள்ளுங்கள். உலகத்தில் இவ்வளவு மாற்றம் கண்ட நமது நாகரீக துணி வகைகளில் நாம் பயன்படுத்தும் கைக் குட்டை மட்டும் இன்னும் அதிக மாற்றங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு மன்னன்தான் காரணம் என்றால் நம்புவீர்களா..?!!! ஆம் நண்பர்களே..!!. பிரஞ்சு மன்னன் ஒருவர் உலகத்தில் ஆடைகளில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அப்பொழுது மனிதன் உடுத்தும் ஆடைகளில் ஒரு போதும் நாம் மாற்றம் ஏற்படாத வகையில் செய்ய இயலாது என்ற எண்ணிய மன்னன்,

முதன் முதலில் மனிதர்களாகிய நாம் பயன்படுத்தும் கைக்குட்டைகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி கைக்குட்டைக்கு என்று முதன் முதலில் சதுர வடிவத்தில்தான் இருக்கவேண்டும் என்று 1785 ஆம் ஆண்டு இதற்காக ஒரு சட்டமே இயற்றி இருக்கிறார். ஒருவேளை யாரேனும் இதை மீறி வேறு வடிவத்தில் கைக் குட்டைகளைப் பயன்படுத்தினால் அவர்கள் இறக்கும் வரை சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற பயங்கர தண்டனையையும் அறிவித்து இருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த சட்டத்திற்குப் பிறகுதான் சர்வதேச கைக் குட்டை தயாரிப்பாளர்களும் கைக் குட்டைகளை சதுர வடிவில் மட்டுமே தயாரிக்கத் தொடங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடு மட்டும் இல்லாது ஜப்பான் , இலங்கை போன்ற நாடுகளில் கைக்குட்டை வைத்திருப்பது நன்கு படித்தவர்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் என்ன நண்பர்களே..!! இன்றைய தகவல் உங்கள் அனைவருக்கும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று நம்புகிறேன்.மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .
 
 
ந்தப் பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம் , இன்டலி , மற்றும் தமிழ் 10 -ல் குத்தவும் .
 
மேலும் வாசிக்க.. >>

குடியரசு தந்த சுதந்திர வறுமை : பனித்துளி சங்கர் கவிதைகள் ஜனவரி 26

32

யரத்தில் பறக்க கொடி தைக்கும் எனக்கு
உடலில் உடுத்த ஒரு உடை இல்லை .
குடியரசு தினம் கொண்டாடும் நம்மில் பலருக்கு
குடியிருக்க வீடில்லை !.
வீடுள்ள நம்மில் பலர் ஏனோ இந்தியாவில் இல்லை
ஆண்டுக்கு ஒரு முறை அழகான அணிவகுப்பு
ஆடையில் குத்திக்கொள்ள அழகழகான கொடிகள்
நல்ல வியாபாரம் நாட்டில் !

கொடியேற்ற வருபவனுக்கோ கோட்டையில் இடம் இருக்கு
ஆனால் இந்தக் கொடியை தைக்கும் எனக்கோ
குடிசையில் கூட இடமில்லை !.

றந்தவனும் ,இருப்பவனும்
என் நாட்டில் இருப்பதையெல்லாம் சுருட்டிகொண்டான்
இன்னும் எஞ்சி இருப்பது இந்த ஒட்டுப்போட்ட கொடியும்
இன்னும் ஓட்டுப் போட்டு ஒட்ட இயலாத
கிழிந்து போன இதயமும்தான் !

டுப்பில் கட்டி இருக்கும்
கோவணமும் பறிக்கப்படுமுன்
பாடையில் படுத்துவிட்டால்
சுதந்திரம் பெற்றுவிடும் எனது வறுமை !......
* * * * * * *
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

அசத்தல் நகைச்சுவை கொண்டாட்டம்:கலக்கல் ஜோக்ஸ் காமெடி சிரிப்பு சிந்தனை களம் : ! 25+01+2011 !

31


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி

ன்னங்க, நீங்க வேலைக்காரியைக் கட்டிப் பிடிச்சிட்டிருந்த மாதிரி நைட் கனவு கண்டேன்..!
தெளிவா சொல்லு... கண்டது கனவுதானா? இல்லை, தூக்கத்துல எழுந்து சமையலறையை எட்டி கிட்டி பார்த்துட்டியா..?


ப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.


தேர்வு முடிந்ததும்
வாடா போய் ஒரு டீ அடிக்கலாம்.
இப்போ தானடா காபி அடிச்ச. அதுக்குள்ளயா?


ஒருவர் : மூன்றாவது முறையாக ஐஸ்கீரிம் வாங்கி சாப்பிடுகிறாயே அசிங்கமாக இல்லையா?
மற்றொருவர் : நான் உனக்கு வேண்டும் என்று சொல்லித் தானே வாங்குகிறேன்.


ஆசிரியர் : நாளைக்கு நம்ம பள்ளியில ன்ஸ்பெக்ஷன். யார கேள்வி கேட்டாலும் உடனே டக்குன்கு பதில் சொல்லணும் பிள்ளைகளா...
மாணவன் : எந்த கேள்வி கேட்டா டக்குன்னு சொல்லணும் சார்?
ஆசிரியர் : ?????


தாய்: ஏ‌ன்டா தம்பியை உதைத்தா‌ய்! அழுகிறான் பார்!
 சிறுவன்: நீதானே தம்பியை வைத்து பந்து விளையாடு என்றாய்! தாய்: அதற்காக! சிறுவன்: ப‌ந்தை உதை‌க்க‌த்தானே செ‌ய்வா‌ர்க‌ள்.


ஜோ  : "என்ன கதை புக் இது? கதையில வர்றவங்க பேர் மட்டும்தான் இருக்கு?"
லைப்ரரியன் : "டெலிபோன் டைரக்டரி எடுத்துட்டு போனது நீ தானா?"


ன் கணவரை எதுக்கு எடக்கு மடக்கா திட்டினே ?
நான் போன் பண்ணினா நாய் குரைக்கிற மாதிரி செல்போன்ல ரிங்டோன் செட் பண்ணி வெச்சிருக்கார் ஆதுதான் .


ன்னையா இராவணன் மனைவியை ராமன் தூக்கிட்டு போறதா எழுதியிருக்க?
எழுத்தாளர் :புதுமையா ஏதாவது எழுதுன்னு நீங்க தானே சொன்னீங்க...!




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்



மேலும் வாசிக்க.. >>

தனிமை பிரபஞ்சம் : பனித்துளி ஷங்கர் காதல் கவிதைகள் : 22+01+2011

22


றந்து போவதில் இல்லாத வலியை
உன்னை மறந்து போவதில் உணர்கிறேன்..!.

கிழித்து எறியப்பட்ட
காதல் கடிதங்களால்
நிரம்பி வழிகிறது
உனக்கும் எனக்குமான ஒற்றை பிரபஞ்சம்..!

தீண்ட மறுத்து தேம்பி அழுவும்
இசைக் கருவி ஒன்றின் சோகத்தின்
மௌனத்தில் மெல்ல கை கோர்த்து
வலிகள் சுமக்கிறது உனக்கான
 தேகமொன்று ..!!

மொத்தத்தில் முட்களில் மோதி
கிழிந்து போகும் இதழ் ஒன்றின்
துன்புறுத்தலின் உச்சமாய்
ரணப்படத் துடிக்கிறது
நீ இல்லாத
தனிமை..!



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .


மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் கவிதைகள் : கண்ணீர் இரவுகள் ! ( Love Poem )

36



ழிந்து போகும் இளமையென சிறியமுள்..!
துரத்திப் பிடிக்கும் முதுமையென பெரியமுள்..!
ஒரு கடிகாரமாய் வட்டத்திற்குள்
சுற்றி சுற்றி வருகிறது வாழ்க்கை..!!

காலத்தின் வேகத்தில்
புதுப்பிக்க முயற்சித்து
தோற்றுப் போகிறது இளமை..!

உறக்கத்தில் உயிர் பெரும் கனவுகளாய்
ஆயிரம் ஆசைகள்,
ஆயுதமின்றி போர் தொடுக்கிறது
உறங்கிக் கிடக்கும் உணர்வுகளுடன்...

தூக்கி எரியும் குப்பையென சில நாட்கள்,
துரத்திப் பிடிக்கும் பட்டமென சில நாட்கள்
நிரந்தரமின்றி நகர்கிறது வாழ்க்கை....!!!

சாயம் பூசிய புன்னகைகளிலும்
சாட்டை வீசும் வார்த்தைகளிலும்
காட்சிப் பிழையென அவ்வப்பொழுது
எட்டிப் பார்க்கிறது கண்ணீர் துளி...!

களைந்து போகாத ஆடை,
குறைந்து போகாத புன்னகை,
அவிழ்ந்து போகாத மவுனம் - என
மீண்டும் ஒரு இரவிற்குள்
சத்தமின்றி கசியத் தொடங்கிவிட்டது
இவளின் கண்ணீர்த் துளிகள்...!!
 
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் . 




மேலும் வாசிக்க.. >>

வயிறு குலுங்க சிரிக்க நகைச்சுவை திருவிழா :PART 2 காமெடி ஜோக்ஸ்மொக்கை லொள்ளு சிரிப்பு அரட்டை கடி

20


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரிசாந்தி : என் மாமியார் முன்னே மட்டும் என் புருஷனை அடிக்க மாட்டேன்


சுமதி: ஏன்?..
சாந்தி: என்னால ஒரே நேரத்துல ரெண்டு பேர அடிக்க முடியாது.


ணவன் : உன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி சொர்க்கம், நரகம் இதுமேலெல்லாம் நம்பிக்கை இல்லாம இருந்துச்சு!
மனைவி : இப்ப?
கணவன் : நரகத்தை முழுக்கப்பார்த்துட்டேன், இனிமேதான் சொர்க்கத்த செட்-அப் பண்ணனும்!


ரோக்கிய சாமி : பச்சை கலர் மாத்திரை ஒரே கசப்பு. சிவப்பு கலர் டியூப் மாத்திரை சப்புனு இருக்கு. டானிக் நல்லா இனிக்குது.

டாக்டர்: இதை ஏங்க என்கிட்ட வந்து சொல்றீங்க?
ரோக்கிய சாமி :நீங்க தானே மருந்து சாப்பிட்டு எப்படி இருக்குன்னு வந்து சொல்ல சொன்னீங்க...அதான்!


மா ப்‌பி‌ள்ளை
மருத்துவத் துறையில் 10 வருஷமா இருக்கறதா சொல்லி ஏமாத்திட்டாரு.
அவரு 10 வருஷமா பேஷண்ட்டா இருக்காறாம்!


கார் டிரைவர்: சாரி சார். பெட்ரோல் சுத்தமா தீர்ந்து போச்சு..இனிமேல் ஒரு அடி கூட முன்னால நகராது.
ஓனர் : சரி ரிவர்ஸ் கியர் போட்டு எடு, அப்படியே வீட்டுக்கு போய்டலாம்!
டிரைவர் :..............!!!!!!!!!!!!!???


பூகம்பம்

திடீரென பூகம்பம் ஏற்படுகிறது. இதில் ஒரு பெண் கீழே விழுந்துவிடுகிறாள். பிறகு வீட்டிற்கு வரும் கணவனிடம் நடந்ததை விளக்குகிறார்.
மனைவி - என்னங்க.. திடீர்னு பூகம்பம் ஏற்பட்டுச்சுங்க.. நான் அப்படியே கீழ விழுந்துட்டேன்.
கணவன் - நல்லா யோசிச்சுப் பாரு... பூகம்பம் வந்த பிறகு நீ கீழ விழுந்தியா இல்ல நீ விழுந்த பிறகு பூகம்பம் வந்துச்சா?


ணவன் : நாம் வாழ்ந்த இந்த 2 வருஷத்துல நீ இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பார்த்ததேயில்லை!
னைவி : பின்ன இருக்காதா . . . நீங்கதான் இன்னிக்கு வெளிநாட்டுக்கு கிளம்புறீங்களே!
கணவன் : ?!?!?

ங்க பொண்ணு டெஸ்ட் டியூப் பேபியா இருக்கலாம் அது‌க்காக இ‌ப்படியா?
ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு
கல்யாணத்த வீராணம் குழாய்லதான் வச்சுக்கணும்னு சொல்றது கொ‌ஞ்சமு‌ம் நல்லால்ல.



காதல்ங்கறது சைக்கிள் மாதிரி கல்யாணங்கறது கப்பல் மாதிரி!
அது எ‌ப்படிடா ம‌ச்சா‌‌ன்?
நமக்கு சைக்கிள் பிடிக்கல்லேன்னா இறங்கிடலாம், நடுக்கடலுக்கு போன பிறகு கப்பல் பிடிக்கலன்னு இறங்க முடியாது பாரு!
எனக்கு கப்பல் வேண்டாம் சைக்கிள் போதும்.



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
மேலும் வாசிக்க.. >>

பொங்கலோ பொங்கல் : பனித்துளி சங்கர் சிறப்புக் கவிதை

18

பூமித் தாயே பெருமிதம்கொள்
ஆயிரம் விதைதான் விதைத்தோம்
ஆனால் நீயோ ஆயிரம்பேர்
உண்ண உணவு கொடுக்கிறாய் .
எங்கள் அறிவியல் உலகம்கூட
இன்னும் இந்த விந்தையின்
வியப்பிலிருந்து மீளாமல்தான் உள்ளது .!

ண்பட்ட கலாச்சாரத்தின்
விதைகளை ஆழ உழுது வை .,
உழவர்கள் இல்லையேல் இந்த
விந்தைகள் எதுவும் இல்லை
என்பதை சிந்தையில் தை
இதோ இதோ வந்துவிட்டது தை .!

வாருங்கள் இந்த இனிய திருநாளில்
புரிதலின் உறவுகள் கொண்டு
பிரிந்த இதயங்களை ஒன்றாய் இணைத்து ஆழ உழுது
இறந்த இதயங்களில் புது சோலைகள் அமைப்போம் .
பணம் என்னும் காகிதம் மணம் என்னும்
 மகுடத்தின் வேற்றுமை அறிந்து
ஆதிப்பிறப்பிடம் களிமண் கொண்டு
மனிதன் உயிர்க்கொடுத்த மண்பானைகள்
திங்கள் பார்த்து பொங்கி வழியும்
பொங்கல் பானைகளாக நம் அனைவரின்
இதயங்களிலும் சந்தோசம் பொங்கி வழியட்டும் .



ன்பின் உறவுகள் அனைவருக்கும்,பனித்துளி சங்கரின் இதயம் கனிந்த " இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் !




மேலும் வாசிக்க.. >>

உலக சுவராஸ்யமான தகவல்கள் : அறிஞர் அண்ணா-வின் பேச்சாற்றல் ( Panithuli shankar Articals 13 January 2011 )

25


னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த உலக சுவராஸ்யமான தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இன்று நாம் பார்க்க இருக்கும் தகவல் பேச்சாற்றல் பற்றியது. பேச்சாற்றல் பலருக்கு இதன் அர்த்தம் தெரிவதில்லை. நம்மில் பலர் எல்லோரும்தான் பேசுகிறோம் இதில் என்ன சிறப்பு என்று தவறான கண்ணோட்டத்தில் இன்றும் இந்த பேச்சாற்றல் பற்றிய குறுகிய கண்ணோட்டத்தில் வர்ணிப்பதுண்டு. பொதுவாக நம்மில் பலருக்கு நன்றாகப் பேசத் தெரியும். ஆனால் அதே பேச்சை பலர் முன்போ அல்லது மேடைகளிலோ அரங்கேற்றி பேச அழைத்தால் நம்மில் பலருக்கு பயம் என்ற ஒன்று பக்கத்தில் உருட்டுக் கட்டைகளுடன் நிற்பது போன்ற ஒரு உணர்வு பலருக்கு தோன்றும். இன்னும் சிலர் எப்பொழுதும் அமைதியாகவே இருப்பார்கள். பார்ப்பவர்களின் கண்களுக்கு இவர் மிகவும் பயந்த சுபாவம் உள்ளவர் என்று கூட எண்ணம் தோன்றும். இது போன்ற மனிதர்கள் மேடைகளில் பேச தொடங்கினால் இடி முழக்கதைப் போன்ற ஒரு பேச்சாற்றல் படைத்தவர்களாக எண்ணத் தோன்றும். அந்த அளவிற்கு அனைவரின் கவனத்தையும் தனது வார்த்தைகளின் ஜாலத்தால் வசியம் செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். இன்னும் நம்மில் பலர் எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டே இருப்போம். ஆனால் அருகில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பேசுகின்றோம் என்றே புரியாத அளவிற்கு ஐந்து நிமிடங்களில் ஐநூறு பக்கம் வாசிக்க சொன்னால் ஏற்படும் வேகத்தில் பேசுவார்கள். இதுபோன்றவர்களைப் பார்க்க நேர்ந்தால் அடுத்த தெருவில் விழுந்து ஓடி தப்பித்துவிடத் தோன்றும் அந்த அளவிற்கு பயங்கரமான அறுவை பேராளியாக இருப்பார்கள். இன்னும் சிலர் பேசுகின்றேன் என்ற பெயரில் உதடுகளை மட்டுமே அசைப்பார்கள். என்னங்க சத்தமே வரவில்லை என்று கேட்டால் நான் எப்பொழுதும் மென்மையாகத்தான் பேசுவேன் என்று சொல்லி கேட்பவர்களை கொலைவெறியாக்குபவர்களும் உண்டு.

ன்னும் சிலர் பேசினால் அவர்களின் கேள்விகளுக்கு யாரும் எதிர்த்து பதில் சொல்ல இயலாத வகையில் ஒவ்வொரு வார்த்தைகளையும் தெளிவாக ஆராய்ந்து பொருள்பட பேசுவார்கள். இவர்களைப் போன்றவர்கள் பிறர் தவறு என்று சொல்லி வாதிடும் வார்த்தைகளைக் கூட, தங்களின் பேச்சுத் திறமையால் தன் வசப்படுத்தி, மீண்டும் சரிதான் என்று சொன்னவர்களே உணரும் அளவிற்கு மிகவும் தெளிவான மதி நுட்பத்துடன் வாதிடும் திறமைப் படைத்தவர்கள் என்று சொல்லலாம். உதாரணமாக தமிழக முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களும் இந்த வகையே என்று சொல்லலாம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால், நம்மைப் போன்றவர்களிடம் அதிக கூட்டம் நிறைந்த இடத்தில் யாரேனும் ஒருவர் நமது தவறை சுட்டி காட்டி ஏதேனும் கேள்வி எழுப்பினால் நாம் பயந்து போய்விடுவோம் அல்லது என்ன சொல்வது என்றே தெரியாமல் வேறு ஏதாவது உளறி வைப்பவர்களும் உண்டு. ஆனால் அறிஞர் அண்ணாவோ இதுபோன்ற சவாலான கேள்விகளுக்கு அனைவரும் உறைந்துபோகும் அளவிற்கு பதில் அளிப்பதில் கை தேர்ந்தவர். அப்படி அவரின் பேச்சில் என்னதான் சிறப்பு இருக்கிறது என்று உங்களில் பலருக்கு வினா எழலாம் இதோ சொல்கிறேன்.

ப்பொழுது அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்று தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி செய்த காலம். அப்பொழுதுதான் ஹிந்திக்கு எதிராக பல எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்திலும் இந்தியாவிலும் அரங்கேறிய சமயம் என்றுதான் சொல்லவேண்டும். ஒருவழியாக ஹிந்தி ஆட்சி மொழியாக ஏற்றுகொள்ள முடியாது என்று புறக்கணித்து அதைப் பற்றிய பேச்சே வேண்டாம் என்று இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. அப்பொழுது நமது அறிஞர் அண்ணா அவர்கள் டில்லிக்கு (தற்போது புதுடெல்லி) ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்தாராம். அனைவரும் பேசி முடித்தப் பிறகு அறிஞர் அண்ணாவை பேச அழைத்தார்களாம். அப்பொழுது அந்தக் கூட்டத்தில் ஹிந்தி மொழிக்கு ஆதரவான பல ஊடகங்கள் குவிக்கப்பட்டு இருந்ததாம். அப்பொழுது பேசத் தொடங்கிய அறிஞர் அண்ணாவிடம் ஒரு பத்திரிக்கையாளர் எழுந்து நீங்கள் இந்தக் கூட்டத்தில் பேசுவதை விட எங்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்டு இருக்கிறார். அதற்கு எதுவும் மறுப்பு சொல்லாமல் அறிஞர் அண்ணாவும் பதில் அளிக்க சம்மதித்து இருக்கிறார்.

ப்பொழுது அந்த பத்திரிக்கையாளர் ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாககூடாது என்று மறுக்கிறீர்கள்.?” என்று கேட்க அறிஞர் அண்ணாவோ ”நீங்கள் எதற்கு ஹிந்தியை ஆட்சி மொழியாகவேண்டும் என்று எண்ணுகிறீர்கள்.?” என்று திருப்பி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

தற்கு பத்திரிக்கையாளரோ ”இது ஒரு பொதுவுடமையான நாடு. இங்கு யாருக்கு அதிக பெரும்பான்மை இருக்கிறதோ, அவர்களுக்குத் தான் முன்னுரிமை. அந்த வகையில் இந்தியாவில் அதிகமான மக்கள் பேசும் மொழி ஹிந்திதானே..!? அப்படியென்றால் ஹிந்திதானே தேசிய மொழி..?” என்றுக் கேட்டு இருக்கிறார். ஒருவேளை நம்மை போன்றவர்கள் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஓடியே வந்திருப்போம். ஆனால் பேரறிஞர் அண்ணாவோ சிறிதும் தயங்காமல் அடுத்த வினாடியில் பதில் கொடுத்தாராம். ”நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் நமது இந்தியாவில் மயில்களின் எண்ணிக்கையைவிட காக்கைகளின் எண்ணிக்கைதானே அதிகம் நாம் காக்கைகள் அதிகமாக இருப்பதால் அதை தேசியப் பறவையாக வைக்கவில்லையே மயிலைத்தானே தேசியப் பறவையாக வைத்திருக்கிறோம் என்றாராம்”.
ந்த பதிலைக் கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் வியந்து கைதட்டும்ஓசை நிற்க, பல நிமிடங்கள் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நமது பேரறிஞர் அண்ணாவின் பேச்சாற்றலின் மகிமையை. என்ன நண்பர்களே..! இன்றைய தகவல் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் என்று எண்ணுகிறேன். மீண்டும் ஒரு அரியத் தகவலுடன் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லவும்.



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

ஞாபகச் சிறை : காதல் கவிதை : பனித்துளி சங்கர் 11 January 2011

33



ரணத்தில் சுமக்கும்
அத்தனை வலிகளையும்,
உன் மௌனத்தில் சுமக்கின்றேன்..!
ரணம் பட்ட இதயமாய் உனக்கும் சேர்த்து
வலிகள் சுமக்கிறது எனது தனிமை..!
களைந்து போகும் கனவுகளில் கூட
உந்தன் பிரிதலை எண்ணி,
உடைந்துபோகிறது உள்ளம்...!!
களைய மறுக்கும் மௌனத்திலும்,
கடந்து போகும் நிமிடத்திலும்,
இன்னும் என்னில் எஞ்சியிருப்பது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் மட்டுமே..!!
 




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
மேலும் வாசிக்க.. >>

அடடா சுவைடா கலக்கல் நகைச்சுவைடா : Tamil comedy joke siripu nagaichuvai mokkai Tamil kadi jokes

25



சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.



ப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...


நீதிபதி: ஏன் உங்க மனைவியை விவாகரத்து செய்யணும்னு நினைக்கிறீங்க?
ணவன்: 6 மாசமா அவன் என்கிட்டே பேசுறதே இல்லை
நீதிபதி: நல்லா யோசிச்சுப் பாருங்க! இப்படியெல்லாம் ஒரு வாய்ப்பு மறுபடியும் கிடைக்கிறது கஷ்டம்ங்க..


டிகர் பார்த்திபன்: என்ன காலையில குரங்கு கூட வாக்கிங்கா?
டிகர் வடிவேலு: ஹலோ இது குரங்கு இல்லை.நாய்
டிகர் பார்த்திபன்: நான் நாய்கிட்ட கேட்டேன்.
டிகர் வடிவேலு: அப்ப சரி!!!


சிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது
மாணவன் : தெரியாது சார்
சிரியர் : பென்ஜின் மேல் ஏறி நில்லுடா
மாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்.


லைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பாப் போச்சா... ஏன்?’’
‘‘குழந்தைக்கு ‘அசின்’னு பேர் வச்சதை மாத்தி, அனாசின்னு வச்சிட்டார்..!


சிரியர் : ஒரு கல்லை நாம் மேலே தூக்கிப் போட்டால் அந்தக் கல் ஏன் மீண்டும் பூமியை நோக்கியே வருகிறது?
மாணவன் : ந‌ம்மல தூ‌க்‌கி‌ப் போ‌ட்டவ‌ன் தலைமேல ‌விழலா‌ம்னுதா‌ன்.
சிரியர் : ??????????


ஒரு ரயில் விபத்தும் சர்தார்ஜியும்

நூற்றுக்கும் மேலானோர் இறந்த ஒரு ரயில் விபத்து குறித்து, விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒருவரும், ரயிலின் ஓட்டுனருமான சர்தார்ஜியிடம் விசாரணை நடந்தது. விபத்துக்கு என்ன காரணம்? என்று நீதிபதி கேட்டார். தண்டவாளத்தில் நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவன் தான் காரணம் என்று சர்தார்ஜி சொல்லவே, நீதிபதி கடும் கோபம் கொண்டார். அந்த ஒருவனுக்காகவா இவ்வளவு பேரையும் கொன்றாய்?. நியாயப்படி நீ அவனைத் தான் கொன்றிருக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லவே, சர்தார்ஜி சொன்னார். நீதிபதி அவர்களே, நானும் அவனைக் கொல்லவே முடிவெடுத்தேன், ரயில் பக்கத்தில் வந்த உடன் அவன் தண்டவாளத்தை விட்டு இறங்கி சென்றுவிட்டான். நான் விட வில்லை நடுவர் அவர்களே, ரயிலை தண்டவாளத்தை விட்டு இறக்கி நியாப்படி அவனைத்தான் கொன்றேன். மற்றபடி விபத்துக்கு அவன் தான் காரணம் என்றார்


சிரியர் :  மூன்றாம் உலகப் போர் வந்தால் என்ன ஆகும் ?
மாணவி : (சோகமாக) வரலாறில் இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கும்.


 ஆசிரியர்:  நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,

அவர் தலையில் ஒரு ஆப்பிள் விழுந்தது. அவர் புவியீர்ப்பு
விசையைக் கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
மாணவன்:
இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது!!



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

காதல் வந்தால் - காதல் கவிதை Panithuli shankar love poem 05 +01+2011

28




ந்தக் காதல் வந்தால்
 உறக்கம் பறிபோகும்.,
உணவு மருந்தாகும்
கண்ணாடி காதலனவான் ,
 பனித்துளி சுடும்
வெயில் குளிரும்
கடிகாரம் எதிரியாய்த் தோன்றும் .
கண்களை திறந்துகொண்டே கனவுகளில் மிதப்பாய்
காகிதத்தில் அவனின் நினைவுகள் கவிதைகளால் நிரப்பப்படும்
அவனுக்கான காத்திருப்பின் தருணத்தில்
கைகளில் கிடைக்கும் அனைத்தும் காயம்படும் .
பிறர் கேட்கும் கேள்விகளுக்கு மவுனத்தால் மட்டுமே பதில்கள் உதிர்ப்பாய்
 சர்க்கரை கசக்கும்,
எங்கோ துரத்தல் மெல்லக் கேட்கும்
அவனது குரல் மட்டும் உனக்கு இனிக்கும் .
ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
அவன் உன் அருகில் இருக்கும் அந்த நொடி
 இறந்துபோகத் நினைப்பாய் !
அவன் அருகில் இல்லாத மறு நொடி உலகையே வெறுப்பாய்
 இதுதான் காதல் !



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

அறிந்துகொள் அரியத் தகவல்கள் ஆயிரம் : உலகில் அழகு உள்ளத்தில் ( சாக்ரடீஸ் - 03*01*2011 )

29


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் புது வருடத்தின் முதல் வாரத்தில் இன்று ஒரு தகவல் பதிவின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நாம் அனைவரும் பார்க்க இருப்பது அழகு பற்றிய ஒரு தகவல்தான்.
ரி உலகத்தில் என்னதான் ”அழகு” என்ற வார்த்தைக்கு ஆயிரம் விளக்கங்கள் தந்து தெளிவுபடுத்தி இருந்தாலும், இன்னும் நாம் புற அழகு ஒன்றே சிறந்த அழகாக எண்ணி அந்த நிரந்தரமற்ற அழகிற்கு மேலும் அழகு சேர்க்க பல ஆராய்சிகளும், ஆபரணங்களும் தினந்தினம் ஒரு புதுமையை நம்மில் புகுத்திக் கொண்டுதான் இருக்கின்றது. அழகு என்பதே ஆபத்தான ஒன்றுதான் என்ற போதும் அதை ரசிக்க மறுக்கும் இதயம் நம்மில் யாருக்கும் இல்லை என்றே சொல்லவேண்டும் . ”அழகு” என்ற வார்த்தையை நாம் அழகாக உச்சரிப்பதே ஒரு அழகுதான். சரி. இந்த அழகிற்கும் இன்றைய இன்று ஒரு தகவலுக்கும் என்னதான் தொடர்பு என்று பலருக்கு கேள்விகள் எழலாம் இதோ சொல்கிறேன்.
 இப்படித்தான் ஒரு முறை தத்துவ மேதை சாக்ரடீஷிடம், ஒரு பெண் சென்று ”உலகத்தில் சிறந்த அழகென்பது எது?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதில் கொடுத்த தத்துவ ஞானி சாக்ரட்டீஸ் ”ஒரு பானை நிறைய சோறு இருக்கிறது. அதை எடுத்து உண்பதற்கு நமக்கு பயன்படுவது தங்கக் கரண்டியா !? இல்லை மர கரண்டியா !?” என்றுக் கேட்டாராம். அதற்கு அந்தப் பெண் ”அதெப்படி சோற்றை எடுப்பதற்கு தங்கக் கரண்டியை பயன்படுத்துவது. மர கரண்டியைதான் பயன்படுத்துவோம்” என்று அந்தப் பெண் சொன்னாராம்.

தற்கு பதில் தந்த சாக்ரடீஸ் ”உலகத்தில் எந்த ஒன்று பயனுள்ளதாக இருக்கிறதோ, அதுவே சிறந்த அழகு..!” என்று அந்தப் பெண்ணின் வினாவிற்கு விளக்கம் தந்தாராம். என்ன நண்பர்களே..! இன்றைய இன்று ஒரு தகவல் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய சிறந்தத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>