புத்தாண்டு சிறப்புக் கவிதை : இதயம் ஒரு வெற்றுக் காகிதம் 2011

38

தயம் ஒரு வெற்று காகிதம்தான்
வருடத்தின் இறுதி நாள் இன்று .
இதுவரை நிறைவு பெறாத
ஆசைகளும் , கனவுகளும் மட்டுமே
இதில் நிரப்பப்பட்டு இருந்தது இதுநாள் வரை .
அவற்றிற்கும் விடுமுறை கொடுக்கும்
தூரம் அருகில் வந்துவிட்டது . இன்னும்
சில மணி நேரங்கள் மட்டுமே மீதம் உள்ளது . !
னவுகள் கூட கணக்கத் தொடங்கிவிட்டது
இனியும் போலியாய் உறங்குவதில் என்ன நியாயம்?
இதுநாள் வரை நிழல்களுடன்
நிஜங்களாக வாழ்ந்தது போதும்.
இனியும் நிழலில் நிஜங்களை
இழக்க விருப்பம் இல்லை.!

சைகளை மட்டும் அடுக்கி அடுக்கி
நிறைவேறவில்லையே என்று தினம்
எண்ணி எண்ணி பாதி தாகம் தீர்த்த
அந்த அவல நாட்கள் இனியும் வேண்டாம்.!
கவலைகளை மட்டுமே எண்ணி எண்ணி
இரவுகளில் எல்லாம் விழிகள் தூக்கம் தொலைத்த
அந்த இரவுகளைக் கூட
நான் எண்ணிப் பார்க்க விரும்பவில்லை !.

நாளை நாளை என்று தினங்களும்,
வாரங்களும் ,மாதம் கடந்து, இன்று
வருடம் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டது.!
துப்பும் எச்சில் கூட
தூரம் சென்று விழவேண்டும்
என்று எண்ணுகிறது மனது.
ஆனால் தோல்விகளை மட்டும்
தோள்களில் சுமக்க எப்படித்தான்
விரும்பியே ஏற்கிறதோ தெரியவில்லை.!

னி வரும் நாட்களில் முடிவுரைகள் கூட
முற்றுப்புள்ளியின்றிதான் எழுதப்படும்.
இதுநாள் வரை தோல்விகள் சுமந்த
இந்த தோள்கள் இனி வரும் நாட்களில்
இமயம் தாண்டும் சாதனைகளை சுமக்கும்.!

துநாள் வரை உதடு சுழித்து
உதறித் தள்ளிய பணிகள்
எல்லாம் பனித்துளி வசிக்க புதிதாய்
புன்னகையுடன் ஒரு பூந்தோட்டம் அமைக்கும்.

ல்விக்காக மூடியக் கதவுகளை
தட்டி தட்டி முற்றுப்புள்ளி எட்டிய
கனவுகளுக்கு எல்லாம் இனி விடுமுறை !
இனி வரும் நாட்களில் ஏழைகள்
இமை திறக்கும் திசையெல்லாம்
கல்விக் கூடங்கள் திறந்தே இருக்கும்.!

நாம் சாலை கடக்கும் நேரம் எல்லாம்
பசியால் கையேந்திய ஏழைகளை இனி
பார்ப்பது கூட கடவுளை
பார்ப்பது போல் தோன்றும் நிலை வரும்.!

ஏற்றத் தாழ்வுகள் என்ற வார்த்தைகளே
உலக அகராதியில் இருந்து நீக்கப்படும்.
இனி வரும் நாட்களில் எல்லாம்
எல்லோருக்கும் ஏற்றம்தான் என்ற
புதுமை வார்த்தைகள் ஒவ்வொருவரின்
சுவாசக் காற்றிலும் அச்சிடப்படும் !.

இப்படி புதிதாய் பல இலட்சியங்களை
நான் நிரப்பத் தொடங்கிவிட்டேன்
இன்று என் இதயம் ஒரு வெற்று காகிதம்.!

திர்காலத்திற்கு என்று எண்ணி எண்ணி
சேர்த்து , நிகழ்காலத்தில் வாழாமல்
வசந்தமின்றியே இறந்துவிட்டது வாழ்க்கை.
இனியும் அறிந்தே இந்த தவறுகள் வேண்டாம்.

நாளை முதல் உங்களின் இதயங்களும்
ஒரு வெற்று காகிதம்தான் .
அதில் நிரப்பத் தொடங்குங்கள்
பல இலட்சிய எண்ணங்களை .
இது நாள் வரை விலை கொடுத்து
வாங்கிய புன்னகை எல்லாம்
இனி உங்களின் இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும்.

நீங்கள் தொலைத்த வெற்றிகள் எல்லாம்
இனி உங்களுக்கு
ஒரு புது முகவரி தேடித் தரும் .

புன்னகையே உங்களுக்காக இதழ்களின்
பக்கத்தில் காத்து கிடக்கும் பொழுது
புதிதாய் பிறக்கும் இந்த புத்தாண்டு காத்திருக்காதா என்ன .?
நம்பிக்கையுடன் அடியெடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.!



திவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நட்பின் உறவுகளுக்கும் என் இனிய ADVANCE புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!


இது கடந்த வருடத்திற்கு நான் எழுதிய மீள் கவிதை


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

! காதல் எழுதும் கடிதம் : காதல் கவிதை

14


ரு இதயங்கள் பேசிய உரையாடல்
கவிதையென கசிகிறது காகிதத்தில் .
அவள் வார்த்தைகளில் கரைந்து போவதிலும் ,
பார்வைகளில் உறைந்து போவதிலும்
 ஏதோ  உலகம் வென்ற  சந்தோசம்
உள்ளம் எங்கும் !.... 


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு திருவிழா : நகைச்சுவை ஜோக்ஸ் கலக்கல் கடி காமெடி சிரிப்பு சிந்தனை துளிகள் PART -7 (28*12*2010 )

21



சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


ஹாய் சார், ஐ எம் கிருஷ்ணன்நான்...இத சொல்லியே ஆகனும்....





question paper அவ்வளவு கஷ்டம்....இங்க எவனும் இவ்வளவு கஷ்டமா ஒரு...
பேப்பரை பார்த்து இருக்கமாட்டாங்க.
and i think

இந்த வாட்டியும் exam ஊத்திகிச்சு

பாடல்:

முன் தினம் படித்தேனே, படித்ததும் மறந்தேனே
சலடை கண்ணாளே உள்ளமும் புண் ஆனதே.
இத்தனை நாளாக bookயே பாராமல் விளையாடி இருந்தேனோ
படிப்பும் வீணானதே !


                        ************     ***********


கோழி பண்ணையை நடத்தி வந்தவர் அதனை சுற்றி பார்க்க வந்தவரிடம் தான் கோழிக்களுக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற விலை உயர்ந்த பொருட்களை தீனியாக போடுவதாக கூறினார் உங்களுக்கு நல்ல வருமானம் வருவதால் தான் கோழிகளுக்கு விலை உயர்ந்த தீனிகளை கோடுகிறீர்கள் ஆதலால் நீங்கள் அதிக வரிகட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக வரி வசூல் செய்தார் காரணம் வந்தவர் வருமான வரி அதிகாரி.


மறுநாள் வந்தவரிடம் கோழி பண்ணையில் தான் கோழிகளுக்கு விலைகுறைந்த தீனிகளை தான் போடுவதாக கூறினார். கோழிகளுக்கு தரமில்லாத தீனிகளை போடுகிறீர்கள், ஆதலால் நீங்கள் அதிக அபராதம் கட்ட வேண்டும் என கூறி அவரிடம் அதிக பணம் வசூல் செய்தார், காரணம் வந்தவர் வனவிலங்கு அதிகாரி.

மறு நாளும் ஒருவர் வர அவரிடம் சார் நான் ஒவ்வொரு கோழியிடமும் தினசரி ரூ. 50 கொடுத்து விடுவேன். ஒவ்வொரு கோழியும் தனக்கு பிடித்த படி சாப்பிட்டு கொள்ளும் என்றார்


                       **************      **************


ம்ம ஓட்டல் சரக்கு மாஸ்டருக்கு தொழில் பக்தி அதிகம்...!

எப்படி?
நெற்றியில் சந்தனத்துக்கு பதிலா சாம்பாரை தடவியிருக்காரே!



துக்கு டீச்சர் அந்த பையனை அடிக்கறீங்க?

இந்தியாவின் தேசியப் பறவை எதுன்னு கேட்டா ’கொசு’ங்கிறான் !



னைவி: என்னங்க நமக்கு கல்யாணம் ஆகி 10 வருஷம் ஆச்சு. நான் போகாத இடத்துக்கு என்ன அழைச்சுகிட்டு போறீயா?

ணவன்: சரி வா... சமையல்கட்டுக்கு போவோம்!


றிலும் சாவு, நூறிலும் சாவு, கொய்யால சிம்பு படத்த பாத்தா அப்பவே சாவு !


 
                                *******          ********

 
ம்ம தமிழ் படத்துல வந்த இந்த டயலாக்குக்கு எல்லாம் RDX அந்நியன் முன்னாடி பேசினால் அவர் என்ன சொல்லுவாரு வாங்கப் பார்க்கலாம்


"சிட்டிசன்"
(கோர்ட் சீன்)
ஜித்: அத்திப்பட்டினு ஒரு ஊர் இருந்ததே அது தெரியுமா உங்களுக்கு?
நீதிபதி RDX: எருமையாகம்பட்டினு ஒரு ஊர் இருக்கே அது தெரியுமா உங்களுக்கு?
ஜித்: தெரியாதே...
நீதிபதி RDX: அப்ப அதுக்கும் இதுக்கும் சரியாப்போச்சு...


"காக்க காக்க"

ஜீவா: அவளைத் தூக்கறன்டா... உனக்கு வலிக்கும்டா... நீ அழுவடா...
சூர்யா: அவளைத் தூக்கினா உனக்குத் தாண்டா வலிக்கும்... அவ 120 கிலோ டா...


"கௌரவம்"

சிவாஜி: கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சு... அதனால பறந்து போயிடுச்சு...
த்மினி: ரெக்கை முளைச்சா பறந்து போகாம பின்ன என்ன நீந்தியா போகமுடியும்?


"நாயகன்"

மல்: அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்!
டிராபிக் போலீஸ்: அவன் போறப்ப கிரீன் சிக்னல், இப்ப ரெட்!



"வல்லவன்"
சிம்பு: நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்னு ஆசைப்படற... நான் அம்பானியாவே ஆகணும்னு ஆசைப்படறேன்!
மக்கள்: இந்தக் கொடுமையெல்லாம் கேட்க்ககூடாதுன்னு தாண்டா அம்பானி போயிட்டாரு!

"தவசி"
விஜயகாந்த் : புயல் அடிச்சுப் பொழைச்சவன் இருக்கான் ஆனா இந்த பூபதி அடிச்சுப் பொழைச்சவன் இல்லடா!!!
ளவரசு: நீங்க அடிச்சுப் பொழைச்சவன் கூட இருக்காங்களாம்... ஆனா உங்க படத்தத் தியேட்டர்ல பார்த்துப் பொழைச்சவங்க யாரும் இல்லையாம்!!
   
 



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும் .
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு அரிய தகவல் : குழந்தைகள் பிறந்தவுடன் அழுவது ஏன் !? (27.12.2010)!

32


னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் இந்த அரிய குட்டித் தகவல்கள் பதிவின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக நாம் மணிக்கணக்கில் வாசிக்கும் அல்லது கேட்கும் தகவல்களை விட  ஓரிரு வரிகளிலோ அல்லது ஒரு சில நிமிடங்களிலோ, எங்கேனும் யதார்த்தமாக வாசிக்கவோ அல்லது கேட்கவோ நேரிடும் குட்டித் தகவல்கள் மிகவும் ரசிக்கும் வகையிலும், வியப்பூட்டும் வகையிலும் அமைவது நாம் அனைவரும் அறிந்த உண்மை. அதுபோலத்தான் இன்றையத் தகவலும் உங்களை ரசிக்க வைக்கும் என்பது திண்ணம்.
ந்த தகவலை வாசிக்கும் ஒவ்வொருவரின் பார்வையிலும், இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுகொண்டிருப்பதை நாம் பார்த்திருக்கலாம். இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால்  பலருக்கு காரணங்கள் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. சரி அப்படி எதற்குத்தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும்பொழுது தனது தாயின் இதயத்துடிப்பை பத்து மாதங்கள்  கேட்டு கேட்டு மெய்மறந்து, அந்த இதயத்துடிப்பின் இசையில்  பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிருக்குமாம். இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால்தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றனவாம். அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக்கொள்ளும் பொழுது குழந்தை  மீண்டும் அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே இப்பொழுது குழந்தைகள் பிறந்தவுடன் அழுவதற்கான காரணத்தை  இந்தத் தகவலின் வாயிலாக அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். மீண்டும் ஒரு அரிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி .



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும் .
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்




மேலும் வாசிக்க.. >>

முதல் முத்தம் காதல் யுத்தம் : குட்டிக் கவிதைகள் :பனித்துளி சங்கர் (26.12.2010) !

37


துநாள் வரை உனது முத்தத்தால்
சாயம் பட்டதாய் உணர்ந்த என் இதயத்தில்
முதல் முறை
காயம் பட்டதாக உணர்கிறேன் .
நீ
தந்தக் குட்டி முத்தத்தில்
ஒட்டிக்கொண்டதோக் காதல் !????







புதைத்து வைப்பதுதான் கல்லறை என்றால்
உயிர்கொண்ட உடல்கள் சுமக்கும்
ஒவ்வொரு இதயமும் கல்லறையே !!!..............



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

சிரி சிரி சிரி நகைச்சுவை விருந்து சரவெடி காமெடி கடி மொக்கை ஜோக்ஸ் சிரிப்பு : PART - 6 ( 25:12:2010) . !

24


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.

ராமசாமி  : என் மனைவிக்கு என் மீது கொள்ள பிரியம்
குப்புசாமி : பரவாயில்லை என் மனைவிக்கு என்னை கொல்ல தான் பிரியம்.



நோயாளி : டாக்டர் என் காதுக்குள் பல்லி போயிருச்சி சார்?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்தாய்?
நோயாளி : எற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.

 
ருண் : சார் என் மனைவியை இரண்டு நாளா காணோம்.
போலிஷ் : இரண்டு நாளா என்னய்ய பண்ணிணே? எங்க திரும்பி வந்துடுவாளோன்னு பயந்து கிட்டிருந்தேன் சார்.



பர் 1 : இந்த டாக்டர் ரொம் மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
பர் 2 :நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன் போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.



ஜோசியர் : உங்களுக்கு இருந்த தோஷமெல்லாம் உங்க கல்யாணத்துக்கப்புறம் நீங்கிடுச்சாமே?
ந்தவர் : ஆமா! கடைசியா இருந்தது சந்தோஷம் இப்ப அதுவும் நீங்கிருச்சி.



மனைவி : பால் எல்லாவற்றையும் பூனை குடிக்கும்வரை என்ன பண்ணிட்டீருந்தீங்க?
ணவன் :: இந்த பூனையும் பால் குடிக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.



மனைவி: ஏங்க! நான் கார்ல போறப்ப நாலு அஞ்சு தடவை இந்த டிரைவர் ஆக்சிடென்ட் பண்ணப் பார்த்தான்! உடனே மாத்துங்க!
ணவன்: விடும்மா! இன்னும் ஒரே ஒரு சான்ஸ் கொடுத்துப் பார்ப்போம்!



டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட்டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
டாக்டர் : அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?

 

திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

! சிகரெட்டின் சீக்ரெட் கவிதைகள் : பனித்துளி சங்கர் (Cigarete kavithaigal )

26


தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு..!
நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ..!.
உன்னை சுவாசித்த நானோ...
னம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்.
புற்று நோய் முற்றிப்போனதாம்,
மருத்துவர் சொன்னார்..!

றிவுரை சொல்லும் பொழுது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன பொழுது அழுகிறது
புகைத்தலின் உச்சம்தான் இறத்தலோ.. !?
முதல் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!

மெல்ல உயிர் குடிக்கிறது.
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உள்ளுக்குள்
புற்றுநோய் (கேன்சர்) என்ற பெயரில்..!!
 
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் . நண்பர்களே உங்களுக்கான கிறிஸ்மஸ் பரிசு மற்றும் மடல் இங்கே இணைக்கப்பட்டுள்ளது



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 
 

மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் : மகாகவி பாரதி பேசிய இறுதி உரை

51



னைத்து நண்பர்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு சிறப்பானத் தகவலுடன் இன்று சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இது வரை நாம் இன்று ஒரு தகவல் என்ற தொடரில் பல துறைகளிலும் உள்ள பல அரிய அதிசயத் தகவல்கள் பற்றி அறிந்துகொண்டோம். அதுபோல் பல உயர்ந்த மனிதர்களின் சிறப்புகள் பற்றியும் பல பதிவுகளின் வாயிலாக அறிந்துகொண்டோம். அந்த வகையில் இன்று நாம் அறிந்துகொள்ள இருக்கும் தகவல் .

 இன்று நாம் அனைவரும் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு தனது எழுச்சிமிகு கவிதைகளின் வாயிலாக ஒவ்வொரு  உள்ளங்களிலும் விடுதலை தீ மூட்டி சுதந்திரம் ஒன்றே தனது உயிர் மூச்சு என்று தமிழுக்காகவும் , தமிழர்களுக்காகவும் தனது கவிதைகளின் வாயிலாக சமதர்மம் போதித்த முதல் கவிஞன் . தமிழகத்தில் முதலில் பெண்ணுரிமையைப் பேசியது பாரதியாகத்தான் இருக்கமுடியும். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே என பெண்ணுரிமையை ஏத்தினான். போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான் என்ற பாரதி பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றான். பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டான்.உலகத்தில் இல்லை என்ற சொல்லே இல்லையென்று செய்வேன் என்று மேடைகளில் முழங்கிய முதல்வன்.

  "கவிதை எழுதுபவன்  கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன்,
வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி - பாரதி."
நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் - பாரதி

 முறுக்கு மீசை மிரட்டும் தேகம் விரட்டும் முண்டாசு என வெள்ளையர்கள் அனைவருக்கும் காட்சி பயத்தை இதயங்களில் பதிய செய்த பெருமைக்குரியவர். இன்றும் அனைவரின் உள்ளங்களிலும் எண்ணங்களிலும் எழுச்சி பெற்று விளங்கும் முண்டாசு கட்டிய பாரதியார் பற்றிய ஒரு தகவல் தான் இன்றையப் பதிவு ..

ரி பொதுவாக நம் எல்லோருக்கும் பாரதியாரைப் பற்றி நான்றாகத் தெரியும் . அப்படி என்ன இந்தப் பதிவில் சிறப்பு இருக்கிறது என்று பலருக்கு வினாக்கள் எழலாம் சொல்கிறேன். பொதுவாக யாரேனும் ஒருவரிடம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு தேசத் தலைவர் பற்றியோ அல்லது ஒரு சாதனையாளர் பற்றியோ அவர் எப்பொழுது பிறந்தார். அவர் மறைந்த தேதி அல்லது அவர் இறுதியாக வாழ்ந்த இடத்தின் பெயர் என இப்படி ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கேட்டால் அனைவருக்கும் பதில் தருவது எளிதான ஒன்றுதான் ஆனால் ஏதேனும் ஒரு தலைவர் அல்லது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான மனிதர் இறுதியாக எங்கு எப்பொழுது பேசினார் என்று யாரிடமாவதுக் கேட்டால் இதற்கு நம்மில் பலருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அந்த வகையில் எழிச்சி மிகு கவிதைகளாலும் தீ பறக்கும் பேச்சுக்களாலும் விடுதலை தீ மூட்டிய தேசியக் கவிஞன் பாரதியார் எங்கு எப்பொழுது இறுதியாக பேசினார் என்று உங்களுக்குத் தெரியுமா !?(அதான் தெரியலனு தெரியுதுல... சொல்லி தொலையேன் மக்கா..!!!!)

தோ தெரிந்துகொள்ளுங்கள் சுதந்திரப் போராட்டத்திற்கு அனைவரையும் ஒன்று திரட்டி போராடத் துடித்த பாரதி 1921 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு முறை ஈரோட்டிற்கு வருகை தந்திருக்கிறார். ஈரோட்டிற்கு வந்தப் பாரதி கருங்கல்பாளையம் என்னும் இடத்தில் அமைந்திருக்கும் நூலகத்தில் '' மனிதனுக்கு மரணமில்லை '' என்றத் தலைப்பில் பொங்குகின்றக் கவிதைகளிலும் கொப்பளிக்கின்ற வார்த்தைகளிலும் எழுச்சி மிகு உரையாற்றிய மகாகவிப் பாரதி அதன் பிறகு சென்னை சென்ற அவர் 1921 ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம் தேதி (11 ) மரணம் அடைந்தார் . இதன் பிறகு மகாகவிப் பாரதி தனது வீட்டைத் தவிர வேறு எங்கும் சென்று உரையாற்றவில்லை என்பதும் , அவர் கருங்கல்பாளையத்தில் ஆற்றிய எழிச்சி மிகு உரையே இறுதியானது என்றும் குறிப்பிடத் தக்க ஒன்று .

 து மட்டும் இல்லாது பாரதி இறுதியாக ஈரோட்டில் ஆற்றிய உரையே இறுதியாக அமைந்ததால் அவரது நினைவாக கருங்கல்பாளையம் நூலகத்திற்கு ''மகாகவி பாரதியார் நூலகம்'' என்று அவரின் நினைவாக பெயரிடப்பட்டு இன்றளவும் சிறப்பாக திகழ்ந்துகொண்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். என்ன நண்பர்களே..! இன்றையத் தகவல் உங்கள் அனைவரையும் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன் மறக்காமல் உங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . மீண்டுமொரு அறியத் தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன் .
  
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கரின் கவிதைகள் : காதல் அரங்கேற்றம்

31


நீண்டதொரு வழிப்பாதை
இருந்தும் வழி மறந்த விழிகளுடன்
குழந்தையென தவழ்கிறது உள்ளம்
உன் காலடித் தடம் தேடியே..!  
குபுக்கென்று பீறிட்டு வெளிவரும்
கண்ணீர்த் துளிகளிலெல்லாம் இன்னும்
மொழி பெயர்க்கப் படாத மவுனத்தின்
காதல் முகவரி மெல்லக் கசிந்து
எனது உள்ளம் நிரப்பி செல்கிறது .

ழுத்தில் வடிக்க இயலாத
உணர்வுகளின் குவியலாய் உன் முடிவுகளில்
முரண்பட்டு நிற்கிறது உனக்கானப் பிரியங்கள்
என் இதயமெங்கும் .

னக்கானக் கவிதைகளில்
நீ நிரப்பி செல்லும் ஊடல்களை
ஏனோ உரையாடல்களின்
இடையே மவுனத்தில் இடருகிறாய் !?


னக்குத் தானே பேசிகொள்வதில்தான்
எத்தனை ஆனந்தம்
முதல் முறை இதையும்
உனக்கான நினைவேட்டில் நிரப்பிக் கொள்கிறேன்

 நீயும் நானும்
உரையாடிக் கரைந்த தருணங்களில்
தடை பட்டு தொலைந்து போன
வார்த்தைகளின் மிச்சங்களிலெல்லாம் புதிதாய்
சில சொற்தொடர்
உயிர் பெற்று மீண்டும்
சுவாசிக்கத் தொடங்கிவிட்டது
நம் இருவருக்கும் இடையேயான காதலென.......




திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்


இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது : பனித்துளி சங்கர் (19.12.2010 )

22


னைவருக்கும் வணக்கம் . பொதுவாக சில நிகழ்வுகளைப் பற்றி கேட்பதைவிட பார்ப்பதே பலருக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் அதிலும் நகைச்சுவைகள் பற்றி என்றால் சொல்லவே வேண்டாம் . அதுபோல்

 எதார்த்தமாக  நேற்று நான் பார்த்து ரசித்த சில நகைச்சுவை வீடியோக்கள்( Comedy Video Clips ) என்னை வெகு நேரமாக  மகிழ்ச்சியில் மிதக்க செய்தது . பொதுவாக  நாம் பார்க்கும் நகைச்சுவை வீடியோக்களில் ( Comedy Video Clips )சிலர் அதிகம் பேசினால் சிரிப்பு வரும் இன்னும் சிலர் மெதுவாகப் பேசினால் சிரிப்பு வரும் ஆனால் வார்த்தைகள் எதுவும் இன்றி தங்களது செய்கைகளில் மட்டுமே அனைவரையும் சிரிக்க வைப்பது என்பது எளிதான ஒன்று இல்லை என்பது நாம் உணர்ந்ததே.!  அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோக்களும் ( Video Clips ) வார்த்தைகள் அதிகம் இன்றி தனது குறும்பான செய்கைகளால்    உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்க இதோ சில வீடியோ கோப்புகள் ( Comedy Video Clips ) .இதுவரை இதுபோன்று  செய்கைகளால் Charlie chaplinக்கு அடுத்ததாக நான் பார்த்து அதிக நேரம் சிரித்த ஒரு நகைச்சுவை என்று இதை சொல்லலாம் .






திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

அரிய தகவல்கள் ஆயிரம் : இமயம் விழுங்கும் பசிபிக் பெருங்கடல் PART 2

31


னைவருக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் . நாம் அனைவரும் அறியத் தகவல்கள் ஆயிரம் என்ற பகுதியில் பசுப்பிக் பெருங்கடல் தோன்றிய வரலாறு பற்றிய பல வியப்பானத் தகவல்களை முதல் பகுதியின் அறிந்துகொண்டோம் . முதல் பகுதியை இன்னும் வாசிக்காதவர்கள் இங்கு சென்று அறிந்துகொள்ளலாம்  .

அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1


 சரி நண்பர்களே கடந்தப் பதிவில் இந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். (அதான் எழுவது தெரியுதுல.. சொல்லித் தொல...) சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16,000 கி.மீ., அகலம் 11,200 கி.மீ., பரப்பளவு 1,28,000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு என்பதுடன் தொடரும் என்று முடித்திருந்தேன் இதோ அதன் தொடர்ச்சி வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம் .

தில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு போர்வை போல் உருவாக்கி இந்தக் கடலை மூட நேர்ந்தால் இந்தக் கடலின் 60 சதவீதம் மட்டுமே மறைக்க இயலும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் இதன் பரப்பளவை. உலக வரைபடத்தில் அதிகமாக காட்சி தருவதும் இந்தக் கடலின் தோற்றமே என்பது நாம் அறிந்த ஒன்றுதான். சரி இந்தக் கடலின் பரப்பளவுதான் இப்படி என்றால் இதையும் தாண்டிய ஒரு ஆச்சரியம் இந்த கடலின் ஆழத்தை பற்றி நாம் அறிந்து கொள்ளும் பொழுது கசிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .
ரி அப்படி இந்தக் கடலின் ஆழத்தில் என்ன ஆச்சரியம் என்றால் ஒருவேளை உலகத்தில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் இமய மலையை இந்தக் கடலுக்குள் தூக்கி போட்டால் மூழ்கி போய்விடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். (அப்ப தூக்கி போட வேண்டியதுதானே.. என்றெல்லாம் கேட்கப்படாது... நான் ஜஸ்ட் பனிமலையை மட்டுமே உருட்டுபவன் என்பது உங்களுக்குத் தெரிந்ததே.. ஹி..ஹி..)

துமட்டும் இல்லாது இந்தக் கடலில் ஆயிரத்திற்கும் அதிகமானத் தீவுகள் இருக்கின்றதாம் இந்தத் தீவுகளில் என்ன ஒரு வேடிக்கையான விஷயம் என்றால் உலகத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளை உள்ளடக்கிய எந்த ஒரு நாடும் இதன் பரப்பளவில் பெரியதாக இல்லை என்பதே இந்தத் தீவுகளின் வேடிக்கையான விஷயம். அப்படியென்றால் இந்த கடலில் காணப்படும் ஒவ்வொரு தீவுகளின் பரப்பளவை சற்று கற்பனை செய்து நீங்களேப் பார்த்துக்கொள்ளுங்கள்.
ந்த தீவுகளில் மாரியானஷ் என்ற தீவு மிகவும் வினோதங்கள் நிறைந்த தீவு என்று சொல்லப்படுகிறது காரணம் இந்தத் தீவில் இதுவரை எந்த காடுகளிலும் இல்லாத விலங்கினங்கள் மற்றும் பறவைகள் இங்கு வசிக்கின்றனவாம். அதுமட்டும் இல்லாது இந்த தீவின் அருகில் மட்டும் இந்தப் பசிப்பிக் பெருங்கடலின் ஆழம் 10,795 மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு அதிக சுழல்கள் ஏற்படுவதால் பொதுவாக யாரும் இங்கு செல்ல பயப்படுவதற்கு ஒரு முக்கியக் காரணமாகும்.

ன்னும் இந்த கடலில் பல விநோதமானத் தீவுகள் கானப்படுகின்றனவாம் அவற்றில் என்ன ஆச்சரியம் என்றால் எப்பொழுதும் பசுமையாகக் காணப்படும் இந்த தீவுகளில் திடீர் என்று எரிமலைகள் உருவாகி நெருப்புக் குழம்புகளை கக்கத் தொடங்கிவிடுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் கடலில் பெரிய அளவிலானப் பவளத் தீவுகளும் காணப்படுகின்றனவாம். தேன் பசிபிக் தீவுகளில் வாழும் மக்களுக்கு இந்த தீவுகள் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது தகுந்த தட்ப வெப்ப நிலைகள் இந்த தீவுகளில் காணப்படுகின்றனவாம். இதைவிட இந்தக் கடலுக்கு மலைகள் பற்றிய தகவல்கள் இன்னும் சுவராசியமானவை.
ம் நண்பர்களே..! பொதுவாக நம் எல்லோருக்கும் அதிக படியாக பல நூறு கிலோ மீட்டர் தொலைவுகள் கொண்ட மலைகளைப் பற்றித்தான் தெரியும். ஆனால் இந்த பசிபிக் பெருங்கடலில் காணப்படும் சில மலைத் தொடர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுகளை கொண்டிருக்கிறதாம். இந்த கடல் பரப்பில் காணப்படும் ஒரு மிகப்பெரிய மலைத் தொடரின் சுற்றளவு 3200 கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
னைவரும் அறிந்த ஹவாய்  தீவுகளின் இந்த மலைத் தொடரின் தொடக்கத்தில்தான் அமைந்துள்ளனவாம். இந்தப் பசிபிக் பெருங்கடல் பற்றி நம் அனைவருக்கும் பதினாறாம் நூற்றாண்டில்தான் தெரிய வந்தது. ஆனால் 1768 முதல் 1799 வரை கேப்ட்டன் குக் என்பவர் இந்தக் கடல் முழுவதையும் ஆராய்ந்து பல அறிவியல் பூர்வமானத் தகவல்களையும், இந்தக் கடல் இவ்வளவு பெரியதாக இருப்பதற்காக தகுந்த அறிவியல் ஆதாரங்களையும் நிருப்பித்து இருக்கிறார். இந்த மிகப் பிரமண்டமான அதிசய பசிபிக் பெருங்கடலை ஆராய்ச்சி செய்த குக் என்பவரின் அறிக்கையில் இந்த பசுப்பிக் பெருங்கடல் பூமியில் இருந்து பிரிந்த ஒரு பகுதியே என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

பூமி தோன்றிய ஆரம்பக் காலத்தில் பூமிக் கோளானது அதிக அளவில் இறுகியா நிலையில் காணப்படவில்லையாம். அந்த தருணத்தில் அதிக வேகத்துடன் சுழன்ற நேரத்தில் இந்த பூமிக் கோளிலிருந்து ஒரு மிகப்பெரியப் பகுதி பிரிந்து போயிற்று என்றும், அது இன்றிருந்த இடமே இந்த பசுபிக் பெருங்கடலானது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுவரை நிலப்பரப்பில் தோன்றி மறைந்த உயிர்களைப்போல் பல மடங்கு அதிகமான உயிர்கள் இந்த பசிபிக் பெருங்கடலில் வாழலாம் என்று கணித்திருக்கிறார்களாம்.
 
ன்ன நண்பர்களே..! இன்றைய பசிபிக் பெருங்கடல் பற்றிய சுவராசியமானத் தகவல்களுடன் நீங்களும் இந்தக் கடலில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு வியப்பானத் தகவலுடன் சந்திக்கிறேன் .
 
 
திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்

ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



மேலும் வாசிக்க.. >>

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி சிரிப்பு PART - 5 (16.12.2010)

21


சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி .
கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர்
சிரிக்க மறந்த மனிதனுக்கு மிருகம் என்ற பெயர்

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

கல கல கலவென சிரி கண்ணில் நீர் வர சிரி

பாக்கு மாற்றி கொள்வது போல ஜோக்கு மாற்றி கொள்வோமா

சிரித்து சிரித்து வயிறு வலித்தால் ஜி ஹெச்சுக்கு செல்வோமா



யாரிப்பாளர் : அடிக்கடி வாந்தி எடுக்கிற நோயாளியை பத்தி ஒரு படம் எடுக்கப்போறேன்
தவியாளர் : என்ன பேரு?
யாரிப்பாளர் : கக்க...! கக்க...!


டிராபிக் போலிஸ் : “ரெட் சிக்னல் போட்டிருக்கே.. ஏன் நிக்காம போயிட்டு இருக்கே?”
பர் : “எனக்கு கண் தெரிஞ்சா நான் பார்த்திருக்க மாட்டேனா சார். ஆமா.. இதெல்லாம் கேக்கிறீங்களே நீங்க யாரு?”


தவியாளர் : என்னங்க உங்க ரசிகர்கள் எல்லாம் நிறைய களிம்பு மருந்து அனுப்பியிருக்காங்களே ஏன்?
டிகர்  : போன படத்துல என் பின்னாடி பெரிய படையே இருக்குன்னு டயலாக் பேசினேன் அதை தப்பா புரிஞ்சு கிட்டாங்க போலிருக்கு


ணவன் : என்னடி இது குழந்தை அழுதுக்கிட்டு இருக்கிறது
நீ பாட்டுக்கிட்டு சீரியல் பார்க்கிற..?
னைவி : அட நீங்க வேற குழந்தையும் சீரியல் பார்த்து தான் அழுகுது


மிழ் டீச்சர்: அவள் நடந்து சென்றாள்.
இந்த வாக்கியத்தை ஆச்சிரியக்குறியுடன் மாற்றுங்கள் பார்ப்போம்
மாணவன்: டேய் மச்சான், figure டா!


ரு நேர்முக தேர்வில்,
கேள்வி கேட்பவர்:how does an electric motor run?
ர்தார்: Dhhuuuurrrrrrrrrr. .....
கோபத்துடன், கேள்வி கேட்டவர்: Stop it.
ர்தார்: Dhhuurrrr dhup dhup dhup...


நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா... எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.
டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?
நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.
 
 
சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 2 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் காமெடி PART 3 !!!

சிரி சிரி சிரிசிரி சிரி நகைச்சுவை ஜோக்ஸ் PART 4 !!!



திவு பிடித்திருந்தால் இங்கு ஒரு முறை அழுத்தவும்



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்

மேலும் வாசிக்க.. >>

கவிதை கலவரம் - காதல் இடைவெளி

15


காற்று இல்லாத  பிரபஞ்சம்
மீண்டும்  புதுப்பித்து செல்கிறது

இன்னும் நான் மறந்து போகாத
உந்தன் அழகிய நினைவுகளை .
காலப் பெருவெளியில்
இழுத்துக் கட்டவும் ,
தடுத்து நிறுத்தவும் முடியாமல்
தினம் கரைந்து போகிறது
உனக்கான காத்திருப்பின் தருணங்கள் !....

னக்கான
காத்திருப்பின் இடைவெளிகளில்
கரைந்துபோகும் தனிமையைக் கூட
சில நேரங்களில்
சுகமாகத்தான் உணர்கிறது
இந்த உள்ளம் !.........
 
 
 
ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்
 

மேலும் வாசிக்க.. >>

அரிய தகவல்கள் ஆயிரம் : பசுபிக் பெருங்கடல் வரலாறு அதிசயத் தகவல்கள் PART -1

19


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக ஒரு புதிய தகவலுடன் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இதுவரை நாம் இன்று ஒரு தகவலின் வாயிலாக அனைத்து துறைகளிலும் பல அரியத் தகவல்களை பற்றி பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று நாம் பார்க்க இருக்கும் துறை உலகத்தில் நான்கில் மூன்று பகுதிகளைக் கொண்டு திகழும் கடல் பற்றிதான். உலகம் நாம் அனைவருக்கும் இந்த வார்த்தை மிக சிறியதாகத் தெரிகிறது அதிலும் இந்த உலகத்தில் ஒரு பகுதி நிலபரப்பில் மட்டுமே வசிக்கும் நான் தினமும் சந்திக்கும் சவால்கள் ஆயிரமாயிரம். இந்த ஒரு பகுதி நிலபரப்பிலும் இன்னும் மனிதன் பயன்படுத்தாமல் இருக்கும் நிலப்பரப்பின் அளவு மொத்த உலக மக்கள் தொகையை மீண்டும் உருவாக்கி அவர்களை குடியிருத்த இயலும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இப்பொழுது உங்கள் அனைவருக்கும் இந்த ஒரு பகுதி நிலப் பரப்பில் ஏற்ப்படும் ஒவ்வொரு நிகழ்வுகள் பற்றியும் நன்றாகத் தெரியும். ஆனால் மூன்று பகுதி நீரால் சூழப்பட்ட இந்த கடல்கள் பற்றி இதுவரை முழுமையாக ஆராயப்படவில்லை என்பது மட்டுமே உண்மை. சரி அந்த வகையில் இன்று நாம் ஒரு கடலைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ளப் போகிறோம். (நாம் வெட்டியாக கடலைப் போடுவதை பற்றியல்ல... ஹி..ஹி..ஹி..)
ந்த உலகத்தை மூன்று பகுதி நீரால் சூழ்ந்துள்ள கடல் பல பெயர்களில் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை தங்களுக்குள் வைத்திருக்கிறது அந்த வகையில் கடல்களில் மிகவும் பெரியதாகக் கருதப்படும் பசிப்பிக் பெருங்கடல் பற்றிதான் இன்று நாம் அறிந்துகொள்ளப் போகிறோம்.

ரி உங்களில் பலருக்கு இந்த கடலைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது இருந்தாலும். இந்த கடலைப் பற்றிய தகவலில் தொடக்கத்தில் இருந்து நாம் போகலாம் இந்த கடலுக்கு பசிப்பிக் என்று எப்படி பெயர் வந்திருக்கும் என்று பலருக்கு பல கேள்விகள் எழலாம்.!?
 ந்த பசிபிக் என்றால் என்ன அர்த்தம் !? பசிபிக் என்பதற்கு அமைதி என்று பொருளாம். ஆனால் இந்தக் கடலோ ஒருபோதும் அமைதியாக இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. பொதுவாக நாம் அனைவருக்கும் ஒரு குழந்தைக்கு பெயர் வைத்தவர் யார் அன்னையினை கேட்டால் தெரியும் அல்லது ஒரு ஊரிற்கு பெயர் வைத்தவர் யார் என்றுக் கேட்டால் கூட சொல்லிவிடலாம். ஆனால் இந்தக் கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சூட்டியவர் யார் என்றுக் கேட்டால் பலருக்கு விடை தெரியாத மௌனம் மட்டுமே பதிலாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம். சரி இந்த கடலுக்கு பசிப்பிக் என்று பெயர் சுட்டியவரைப் பற்றி தெரிந்துகொள்வோம். (ங்கொய்யால.. இம்புட்டு நேரம் நீதான் கடலை போட்டு இருக்க..?!! இன்னும் தகவலுக்கு வந்தபாடில்லையேனு.. திட்டுறது நல்லாவே கேட்குது மக்கா..!! இதோ வந்துட்டேன்..!!)
1519-ம் ஆண்டு ஒரு முறை ஐந்து கப்பல்கம் மற்றும் 237 மாலுமிகளுடன் உலகை சுற்றி வரவேண்டும் என்ற ஆர்வத்துடன் முதன் முதலாக பசுபிக் பெருங்கடலை கடக்கத் தொடங்கினார் இந்த போர்த்துக்கீசிய மாலுமி பெர்டினான்ட். அப்பொழுது அவர்கள் செல்லும் வழிகளில் திரளாக சுனாமி பேரலைகள் உருவாவதும் இந்தக் கடலில்தான் இதை அறிந்த பெர்டினான்ட் என்ற போர்த்துக்கீசிய மாலுமி இந்தக் கடலின் கோபத்திற்கு எதிர்மையாக பெயர் வைக்கவேண்டும் என்று எண்ணினார் அதன் விளைவாகத்தான். இந்தக் கடலில் அதிகமாக சுனாமி பேரலைகள் அதிக சத்தத்துடன் எழும்புவதால் இதற்கு அமைதியான கடல் என்ற எதிர்மையான பொருள் அமையும் வகையில் பசுபிக் என்று பெயர் சூட்டினாராம்.

ரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இனி இந்தக் கடலின் பரப்பளவைப் பற்றி நாம் அறிந்துகொள்ளவேண்டும் . உலகத்தில் மிகப்பெரிய கடல்களின் வரிசையில் முதன்மையாக திகழ்கிறது.
ந்த மிகப் பிரமாண்டமான பசிப்பிக் பெருங்கடல். அப்படி இந்தக் கடலின் பரப்பளவுதான் எவ்வளவு என்று எல்லோருக்கும் கேள்விகள் எழலாம். சொல்கிறேன். இந்த பசிப்பிக் பெருங்கடலின் நீளம் 16 ஆயிரம் கி.மீ . அகலம் 11200 கி .மீ பரப்பளவு 12,8000 சதுர கிலோ மீட்டர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் இன்னும் நம் அனைவரையும் வியப்பில் உறைய வைக்கும் தகவல் என்னவென்றால் பூமியில் இருக்கும் நிலப்பரப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து ஒரு

                                                              தொடரும்



                                                 துவரை பசிபிக் பெருங்கடல் பற்றி  நீங்க அறிந்திராத பல வியப்பானத்  தகவல்கள்  என்ன என்பதை இந்த பதிவின் அடுத்தப் பகுதியில் சொல்ல இருக்கிறேன் ஆவலுடன் காத்திருங்கள் . மறக்காமல் உங்களின் கருத்துகளையும் பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் .


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

வயிறு குலுங்க சிரிக்கலாம் வாங்க : கடி ஜோக்ஸ் நகைச்சுவை காமெடி சிரிப்பு வெடி

35

சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்

அழுங்கள், நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டிருப்பீர்கள்.


மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
சிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

டவுள்:  மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?
னிதன்: இந்தியாவுலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டு கொடுங்க சாமி!!
டவுள்: அது கஷ்டமாச்சே...வேறு ஏதாவது கேள்.
னிதன்: அப்ப என் மனைவி பேச்சை குறைக்கணும், நான் சொல்றதை கேட்கனும், எதையும் வாங்கிக் கேட்க கூடாது...
டவுள்:  அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா...????????????
 

ன்னப்பா இது... தோசையை இப்படி ஸ்டாண்ட்ல தொங்க விட்டுத் தர்றீங்க...? சும்மா அப்படியே பிய்ச்சுத் தின்னுடுங்க... இல்லேன்னா, தட்டு கழுவுற சார்ஜ; எக்ஸ்ட்ரா போடுவோம்


தோழி 1 :உன் கணவர் உடம்புக்கு முடியாம படுத்த படக்கையா கிடந்தாரே... இப்ப எப்படியிருக்கார்.
தோழி 2: ஏதோ பரவாயில்லை... காலைல எந்திரிச்சதும் காபி மட்டும் போட்டுத் தர்றார்.


தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?

தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரேம இல்லைனு சொல்றாங்களாம்.

 
ருத்துவர் : ஸாரி அம்மா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு .
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க!


தொண்டன் : தலைவரே...! மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க வாங்க ஓடிடலாம்...!
லைவன் : இருய்யா...! எனக்கு ஒரு செருப்பு தான் கிடைச்சு இருக்கு...!


நோயாளி : ஒரு மாசமா என்னால் வாயை திறக்கவே முடியலை சார்...!
ருத்துவர் : என்னாச்சி?
நோயாளி : போன மாசம் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சி

 
தொண்டன் : தலைவரே புது வீடு கட்டி பால்தான் காய்ச்சனும் சாராயம் காய்ச்ச கூடாது.
லைவன் : பழைய ஞாபகத்துல பண்ணிட்டேன்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

! காதல் உடன் படிக்கை : கவிதைகள் பனித்துளி சங்கர்

39


சிறகுகள் இன்றி பறக்கிறது இதயம்,
உன் உறவு வந்ததால...
இத்தனை வருடங்களில் இல்லாத
மாற்றங்கள் கடந்த சில நாட்களாய்
நாட்குறிப்பேட்டில் அழகாய் தெரிகிறது..!

ன்னைப் பற்றிய  நினைவுகள்
மெல்ல கசிகிறது
என் ஞாபக பெருவேளிகளில்
பாலைவனங்களின் நீர்வீழ்ச்சியாய்
மனம் தினம் தினம்
மகிழ்ச்சியில் அலை மோதுகிறது..!

த்தனை நாட்களாய்
முகம் மட்டுமே காட்டியக் கண்ணாடி
இப்பொழுதெல்லாம் என்னைப்
பார்த்து ஏதேதோ பேசுகிறது...!

ழுத்தாணி தீண்டிய காகிதமாய்
மெல்ல வெட்கப்படுகிறது
உனக்காக நான்
கிறுக்கிய வார்த்தைகளெல்லாம் ..!

லைகளாய் நீ
உதிர்க்கும் வார்த்தைகளில் எல்லாம்
தினம் கிளிஞ்சல்களாய்
சிதறிப்போகிறேன்..!
  
ருகில் இல்லாத உன் உருவம்
விழி போகும் திசை எங்கும்
பின் தொடர்கிறது
உடன் வரும் நிழலாய்...!

ங்கோ தூரத்தில் கசியும் இசையில்
மெல்லக் துயில் கொள்கிறது
உன் நினைவுகள..!

ன் நினைவுகளை எழுதியே
கரைத்துக் கொண்டிருக்கிறேன்
ஆனால் நீயோ
நான் எழுதாத வார்த்தைகளால்
மீண்டும் என் இதயத்தை
மெல்ல நிரப்பிக் கொண்டிருக்கிறாய்..!

நுரையீரல் தீண்ட முயற்சித்து
தோற்றுப்போகும் சுவாசக் காற்றாய்
உன் மறுத்தலின் உச்சத்தில்
சிலுவைகளில்
அறையப்பட்டு மீண்டும் நீள்கிறது
எனக்கும் உனக்குமான
காதல் உடன் படிக்கைகள் .!



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.


மேலும் வாசிக்க.. >>

அசத்தல் நகைச்சுவை கலந்த கொட்டிக் கிடக்குது குட்டித் தகவல்கள் PART- 2

44


னைத்து அன்பு உள்ளங்களுக்கும் இந்தப் பனித்துளி சங்கரின் வணக்கங்கள். உங்கள் அனைவரையும் அரியத் தகவல்கள் ஆயிரம் பகுதி இரண்டில் மீண்டும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். சரி அப்படி இந்த அதிசயத் தகவல்கள் ஆயிரத்தில் இன்று என்ன சிறப்பு என்று அறிந்துகொள்ள அனைவரும் ஆர்வத்தில் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உலகத்தில் பொதுவாக நேரத்தை விட மிகவும் விலைமதிப்பு மிக்க ஒன்று எதுவும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் நேரத்தை வீணாக்காமல் நாம் இன்று விரைவில் தகவல்களைப் பற்றி அறிந்துகொள்ளத் தொடங்கலாம்.


னித்துளி : பொதுவாக நாம் நாய் பார்த்து இருப்போம் !?

RDX அந்நியன் : ( ஏலே மக்கா..!! அதுதான் ஒரு நாய் எழுதினத படிக்கிறோமே இதற்கு அப்பறமும் ஒரு நாயைப் பற்றியா என்று யாரும் கொலை வெறியில கோடாரியத் தூக்கப்படாது. சொல்றதை பொறுமையாக கேக்கணும்.)
னித்துளி : இது வரை நாம் பார்த்த நாய்கள் எல்லாம் குரைக்கத் தொடங்கினால் அவ்வளவுதான் போங்க... பக்கத்து தெருவில் நடந்து போறவன் கூட பயத்தில் பள்ளத்தில் விழுந்து ஓடவேண்டி இருக்கும் அதுபோல் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் குரைக்கும். ஆனால் குரைக்கவேத் தெரியாத நாய்களும் இருக்கிறது என்றால் நம்புவீர்களா..!?? உண்மைதான் நண்பர்களே..! டிங்கே என்ற இனத்தை சேர்ந்த நாய்களுக்கு குறைக்கவேத் தெரியாது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதுமட்டும் இல்லாது இந்த வகை நாய்கள் சுவாசிக்கும்பொழுது மட்டுமே ஒரு குறிப்பிட சத்தத்தை ஏற்படுத்தும் திறமை மட்டுமே பெற்றிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.



னித்துளி : நம் எல்லோருக்கும் முதலைகளைப் பற்றித் தெரியும் !?
RDX அந்நியன்: அப்படி என்ன தெரியும் என்றுக் கேட்டால் எதுவுமே தெரியாது என்ற ஒரு பதிலும் தெரியும்.
னித்துளி : சரி அதிகமான முதலைகள் பற்றியத் தகவல்களில் முதலை பத்து அடிக்கு நாக்கை நீட்டி தண்ணீருக்குள் இருந்தே கரையில் இருக்கும் உயிர்களை இழுத்துக்கொள்ளும் திறமை உள்ளது என்று படித்திருக்கிறேன். ஆனால் இதில் உண்மையானத் தகவல் என்னவென்றால் முதலையால் தனது நாக்கை வெளியில் நீட்டவே முடியாது என்பதுதான்.
RDX அந்நியன்: ( ஏலே மக்கா..! முதலை நாக்கு வெளியில வராதுன்னு பனித்துளி சொல்றான்னு நம்பி தைரியத்தில குச்சிய வச்சு முதலைய சொரன்டப் போகி முதலைக்கு இரையானா நிர்வாகம் பொறுப்பாகாதுங்கோ...!!)



னித்துளி : உலகத்தில் உள்ளப் பறவை இனங்களிலே மிகவும் குறுகிய நாட்களில் முட்டை இட்டு அடை காத்து குஞ்சு பொரிக்கும் திறமை சிட்டுக்களுக்குத்தான் இருக்கிறதாம். இந்த பறவைகள் பனிரெண்டே நாட்களில் குஞ்சு பொரித்துவிடும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களே .!
RDX அந்நியன்: (தக்காளி என் வீட்லையும்தான் ஒரு கோழி முட்டை இட்டு அடைகாக்க ஆரம்பித்தது ஆறு மாசம் ஆச்சு நேத்து போ பார்க்கிறேன் கோழியையும் காணோம் முட்டையும் காணோம் என்ன கொடுமை சார் இது..!!)



னித்துளி : மீன்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணையில் வைட்டமின் ”ஈ” அதிகம் இருக்கிறதாம் .

RDX அந்நியன்: ( என்ன கொடுமை சார் இது எங்க வீட்ல அதிகம் ”ஈ” தான் இருக்கிறது ஆனால் மீன் எதுவும் எதுவும் இல்லை.)



னித்துளி : உலக அதிசயங்களின் ஒன்றான பிரமிடுகளுக்கு பெயர் போன எகிப்தில்தான் முதல் முதலில் குண்டுசி கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

RDX அந்நியன்: (யாருட இவன் நானே நேத்து தொலைஞ்சுபோன கன்றுக்குட்டியக் காணோம்னு தேடுறேன் இவன் குண்டுசியக் கண்டு பிடுச்சவனைப் பற்றி சொல்ல வந்துட்டான்)



என்ன நண்பர்களே..! இன்றைய கொட்டிக் கிடக்குது குட்டித் தகவலின் இரண்டாவது பகுதி உங்கள் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு புதுமையான தகவலுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள்.


ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>

நான் ஸ்டாப் நகைச்சுவை கலக்கல் ஜோக்ஸ் அசத்தல் கடி காமெடி கதம்பம் !

30


சிரி சிரி சிரிசிரி சிரி சிந்திக்கத் தெரிந்த மனித இனத்திற்கே சொந்தமான கையிருப்பு சிரி சிரி சிரிசிரி சிரி.


ரண்டு காதலர்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்து மலை உச்சிக்குச் சென்றனர். இருவரும் கண்ணை மூடிக்கொண்டு குதிக்கத் தயாராகினர். காதலன் முதலில் குதிக்க, காதலி 'காதலுக்குக் கண்ணில்லை என்பதை உணர்ந்துவிட்டேன்' என்று கூறிக்கொண்டு பின்வாங்கி விட்டாள். பாதாளத்திற்குப் போய்க்கொண்டிருந்த காதலன், 'தெரியும்டீ உங்களப்பத்தி' என்று கூறிக்கொண்டு முதுகில் மறைத்து வைத்திருந்த பாராசூட்டை விரித்துக்கொண்டு பறந்தான்.




டைரக்டர் :  இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும்.
எனக்கு நீச்சல் தெரியாதே.
டைரக்டர் : கவலைப்படாதீங்க சார்…குளத்துல தண்ணியே இருக்காது.




வி : நண்பா... .தினமும் காலையில எழுந்திருச்சி எனக்கு போன் பண்ணுடா..
வேணு : அடடா..என்னே ஒரு நட்பு.
வி : அதெல்லாம் ஒண்ணுமில்லடா. தினமும் காலையில நரி ஊளையிடறதக் கேட்டா நல்லதுன்னு சொன்னாங்க.



ண்டக்டர்: படியில் நிற்பவரிடம்.... யோவ் உள்ள தான் கடல் மாதிரி இடம் இருக்கே, ஏறி உள்ள வர்றது தானே... படியில்
நிற்பவர்: சாரி சார் எனக்கு நீச்சல் தெரியாது. நான் கரையிலயே நின்னுக்குறேன் !



மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
சிரியர் : 1 48766
 மாணவன் : : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.




முதலாளி: இவ்வள்வு வேகமா காரை ஓட்டாதேப்பா, எனக்கு பயமா இருக்கு.
டிரைவர்: பயப்படாதீர்கள், கார் வேகமாய்ப் போகும்போதெல்லாம்என்னைப் போலவே நீங்களும் கண்களை இறுக மூடிக்கொள்ளுங்கள்.



ம்ப ஜோன்ஸும் அவரது நண்பரும் ஒரு காரில் வெடிகுண்டு பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.
ண்பர் : இதை மாட்டும்போது வெடிச்சிட்டா என்ன பண்ணுவ?
ஜோன்ஸ் : கவலைப்படாதே.. என்கிட்ட இன்னொரு குண்டு இருக்கு.




ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
மேலும் வாசிக்க.. >>