Tamil SMS Kadi Jokes - சினி கூத்து கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil Kadi Jokes -SMS Jokes-Tamil Mokkai

18

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். சிரிக்கும் போது ஆழமாக மூச்சை இழுக்க முடிவதால் உடல் கூடிய ஒட்சிசனை உள்வாங்கிக் கொள்கிறது. நோய்எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிக்கிறது. மூளை அதிகமான சந்தோச ஓர்மோன்களை உடலுக்குள் தெளிக்கிறது. ஆனாலும் வாழ்க்கையின் மீதுள்ள ஆர்வம் காரணமாக ஒரு நாளில் குழந்தைகள் சராசரியாக 400தடவைகள் சிரிக்கும் போது பெற்றோர்கள் 15 தடவைகள் மட்டுமே சிரிக்கிறார்கள் என்பது கணிக்கப்பெற்றுள்ளது.

"நகைச்சுவை" சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் போது உடலில் உள்ள எல்லா நரம்புகளும் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கும். மூளைக்குப் போதிய அளவு செந்நீர்(குருதி) செல்லும். இதனால், சோர்வுற்ற மூளை சுறுசுறுப்படைய உடலில் உள்ள எல்லாப் பகுதிகளுக்கும் 'ஒழுங்காக இயங்கு' என்று கட்டளை போடும். அதனால், உடலுறுப்புக்கள் சீராக இயங்க நோய் எதிர்ப்பு சக்தி கூடும். எனவே, அடிக்கடி நகைச்சுவை கேட்பதாலும் படிப்பதாலும் உள்ளத்தையும் உடலையும் நோய் அணுகாமல் பேணமுடியும்.தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
மெரிக்காவில் திருடனை கண்டுபிடிக்கிற மெஷின் கண்டுபிடித்து இருக்கிறார்களாம்.
அந்த மெஷின் இங்கிலாந்துல 30 நிமிஷத்துல 70 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
பிரான்ஸில் 30 நிமிஷத்துல 100 திருடர்களை கண்டுபிடிச்சுருக்கு.
இந்தியாவில் 15 நிமிஷத்துல அந்த மெஷினையே காணோம்!!
நாமெல்லாம் யாரு..??
* * * * *

MAN 1 : என்னங்க உங்க வீட்டுல எப்பவும் சிரிப்பு சத்தமா கேட்டுக் கிட்டே இருக்குது?
MAN 2 : எம் பொண்டாட்டி எம் மேல ஏதாவது பாத்திரத்த தூக்கி வீசுவா ...எம் மேல பட்டா அவ சிரிப்பா... படாட்டா நான் சிரிப்பேன் .... ஒரே டமாசுதான் போங்க...
* * * * *
தாத்தா......குளிர்காத்து பலமா இருக்கு.
காதுல பஞ்சு வச்சுக்க...!!
ஏண்டா வைக்கலே'ன்னா?
நாங்க உன் மூக்குல பஞ்ச வைக்க
வேண்டியது ஆகிடும்!
* * * * *
னக்கு ஏது 50 ரூபாய்?''"
"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''
மீதி 30 ரூபாய்?''"
பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''எஸ்

* * * * *
அப்பா: உனக்கு எப்படிப் பட்ட பொண்ணு பார்க்கிறது?
மகன்: நிலா மாதிரி!
அப்பா: நிலா மாதிரின்னா?
மகன்: தினமும் ராத்திரி வரணும்! காலையில போயரனும்!!
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
* * * * *
சரி நண்பர்களே..!! இந்த இறுதியான மொக்கை சிந்தனைப் பற்றி  யோசித்துக்கொண்டே இருங்க அடுத்த நகைச்சுவை பதிவில் சந்திக்கிறேன்.
                                          
                                          நேசத்துடன்,
                                      பனித்துளி சங்கர்.                                                                       
* * * * *
மேலும் வாசிக்க.. >>

தமிழ்க் காதல் கவிதைகள் > கடற்கரை ஞாபகங்கள் - Panithuli shankar kadhal kavithai - Love SMS Poem

18


ணல் சுமக்கும் கடற்கரை ,
இந்த கன்னம் சுமக்கும் கை விரல் , .
நித்தம் உன் நினைவுகள் சுமக்கும்
இதயம் என மெல்ல நீள்கிறது
இந்த கடற்கரை காட்சிகள்
இன்னும் என்னுள்
கரை தொடாத அலைகளென
கனக்கிறது கைரேகை முழுவதும்
அழியாத உன் ஞாபகங்கள் !...
 
                                -பனித்துளி சங்கர்
 


..!





மேலும் வாசிக்க.. >>

குட்டித் தகவல்கள் - ஓடாத நோவா கார் (Nova car-Advertisement Tecnical)

8

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பிடித்த ஏதேனும் சிறியப் பொருள்களோ அல்லது விலை உயர்ந்தப் பொருள்களோ எதுவாக இருந்தாலும் வாங்கும்பொழுது அதன் பெயர்களை சற்று உன்னித்துக் கவனிப்பதுண்டு.

துபோல்தான் பொருள்களுக்கு பெயர் வைப்பவர்களும்  தாங்கள் வியாபாரம் செய்ய விரும்பும் பொருளையோ அல்லது ஏதேனும் தொழில் தொடங்க நினைக்கும் கம்பெனியின் பெயர்களையோ மிகவும் பொறுமையாக ஆராய்ந்து யோசித்து வைப்பது உண்டு.

ப்படி என்னதான் நாம் சில விஷயங்களை மிகவும் கவனத்துடன் யோசித்து பயன்படுத்தினாலும் அதில் ஏதேனும் நமக்குத் தெரியாத சில புதிர்கள் மறைந்திருக்கும் என்பது இன்னும் நம்மில் பலர் அறியாத உண்மை. இதை இப்பொழுது எதற்கு சொல்கிறேன் என்றால்...!!??
ப்படித்தான் ஒரு முறை உலகின்  உலகப் புகழ்பெற்ற நோவா கார் நிறுவனம் தயாரித்த புதிய மாடல் கார் ஸ்பானிஷ் நாட்டில் மட்டும் சரியாக விற்கவில்லை. என்ன காரணம் என்று ஆராய்ந்தபோது கிடைத்த விடை..
 
ந்த மாடலின் பெயர். நோவா என்றால் ஸ்பானிஷ் மொழியில் 'இது ஓடாது' என்று அர்த்தமாம்.  என்ன நண்பர்களே..!! இது  போன்று உங்களில் யாரேனும் புதிய பொருள்களுக்கோ அல்லது தங்களின் புதிய தயாரிப்புகளுக்கோ பெயர் வைக்க முற்படும்பொழுது சற்று யோசித்து வைக்கவும். 
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

கவிதை நிஜங்கள் - பெண் குழந்தை / Panithuli shankar real feeling Kavithaigal In Tamil

23
ங்காவது போய்
தொலைந்து போ என்று
எளிதாக சொல்லிவிட்டாய் .,
 எனது மொத்த உலகமும்
 நீதான் என்று
உனக்கு தெரிந்திருக்க
வாய்ப்புகள் இல்லை .!!!..
 
                                     - பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

நகைச்சுவைகள் - ஜோக்ஸ் - சிரிப்புகள்..! - Panithuli shankar Tamil sms jokes comedy nagaichuvai virunthu

32

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். மீண்டும் தங்களுடன் நகைச்சுவை துணுக்குகளைப் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். தங்களது நிறுவன / அலுவலக / வியாபார கவலைகளை மறந்து வாங்க சிறிது நேரம் சிரிக்கலாம்.
* * * * *
சிரியை : எக்ஸாம்ல ஒரு பக்கம்தான் எழுதியிருக்கே கொஞ்சம் கூட வெட்கமா இல்ல உனக்கு?

மாணவன் (ரஜினி விசிறி) : மிஸ் பன்னிங்கதான் பக்கம் பக்கமா எழுதும்.

சிங்கம் சிங்கில் பக்கம்தான் எழுதும்.
* * * * *

பாய்ஸ்-க்கு ஒரு அறிவிப்பு :

ண்ணுல மண்ணு பட்டாலும் சரி பொண்ணு பட்டாலும் சரி தண்ணி வரது நிச்சயம் !!!!!!!

இப்படிக்கு

(கூலிங் கிளாஸ் போட்டு சைட் அடிப்போர் சங்கம்)
* * * * *

பையன்: அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா?
அம்மா: விமலா டா...
பையன்: அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்....
* * * * *

 
நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்...
 நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....
  * * * * *

போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
  * * * * *

சையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்!

எப்படி?

என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
  * * * * *
குட்நைட்!

வர்கள் எப்படி 'குட்நைட்' சொல்வார்கள்...


விஜய் : "ண்ணா.. குட்நைட்ங்ணா!"

அஜீத் : "எல குட்நைட்ல!"

சிம்பு : "மச்சி... குட்நைட் மச்சி!"

சூர்யா : "ஹாய் மாலினி குட்நைட்!"

சசிகுமார் : "மூடிட்டுப் படுங்கடா நொண்ணைங்களா!"
* * * * *


பிசினஸ் ட்ரிக்ஸ்.-

மெரிக்க வெள்ளை மாளிகையின் மேற்கூரையில் பெரிய ஓட்டை விழுந்து விட்டது. அதை சரி பண்ண ஜப்பான், சீனா, இந்தியா ஆகிய 3 நாடுகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரவழைக்க பட்டிருந்தார்கள்.

ஜப்பான் அரசியல்வாதிகள் சேதத்தை டேப் வைத்து அளந்து விட்டு சில பல கணக்குகள் எல்லாம் போட்டு $900 செலவாகும்ன்னு சொன்னாங்க ( $400 மெடீரியல்களுக்கு $400 டீம்க்கு $100 லாபம்).

சீன அரசியல்வாதிகளும் அதேமாதிரி அளந்து பாத்து கணக்கு போட்டு $700 செலவாகும்ன்னு சொன்னாங்க ($300 மெடீரியல்களுக்கு $300 டீம்க்கு $100 லாபம்)

இந்திய அரசியல்வாதிகள் வந்தாங்க ஒன்னும் அளந்தும் பாக்கல கணக்கும் போடல அமெரிக்க அதிகாரிகளை மேலயும் கீழயும் பாத்துட்டு அவங்களுக்குள்ளயே குசு குசு ன்னு பேசிட்டு $2,700 செலவாகும்ன்னு சொன்னங்க.

அமெரிக்க அதிகாரிகள்.- "அளந்தும் பாக்கல கணக்கும் போடல $2,700 ன்னு சொல்றேங்களே"ன்னு சொன்னாங்க. இந்திய அரசியல்வாதிகள் அவங்க காதுல "$1000 எங்களுக்கு $1000 உங்களுக்கு வேலைக்கு சீனாவில் இருந்து ஆட்களை எடுத்துகளாம்"ன்னு சொன்னாங்க.

டீல் நல்லா இருந்ததால அமெரிக்க அதிகாரிகள் இந்திய அரசியல்வாதிகளுக்கு வேலைய கொடுத்துட்டாங்க. இதுக்கு பேரு தான் பிசினஸ் ட்ரிக்ஸ்.

* * * * *
ரபு தொலைக்காட்சி ஒன்றில் ஒசாமா பின் லேடன் இறக்கும் முன் அனுப்பிய காசட் ஒன்று ஒளிபரப்பானது. அதில், பின் லேடன் கூறியிருப்பது: நாங்கள் தீவிரவாதிகள்தான், ஆனால் எங்கள் தீவிரவாதத்திற்கு ஓர் எல்லை உண்டு. நிச்சயமாக விஜய் பட ரிலீசுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...

  * * * * *


ந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு.
உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"
  * * * * *


ன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க.
* * * * *
மேலும் வாசிக்க.. >>

குட்டிக் காதல் கவிதை > எரிமலை >Panithuli shankar kutti kavithai in tamil

11

ரிமலையென
 தினம் தினம்
வெடிக்கிறது மனது !

அதை தலையில்
கொட்டி கொட்டி
மூடி வைக்கிறது
உன் நினைவு .

                       
                                -  பனித்துளிசங்கர்


மேலும் வாசிக்க.. >>

உலகத்தில் தோன்றிய முதல் வலைத்தளம் Blog > மின் அஞ்சல்கள் email > முதல் தேடுபொறி search engine

13

னைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று உலகத்தில் காற்றின் வேகத்தை விட கணினியின் வேகம் அதிகமாக பரவத் தொடங்கிவிட்டது. கணினி என்றதும் இணையம்தான் அதில் தலைப்பு செய்தி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு எங்கு பார்த்தாலும் பரவிக்கிடக்கிறது இந்த இணைய வளர்ச்சி.

ஒரு காலத்தில் ஆடை இல்லாமல் வெட்கம் அறியாமல் சண்டை இல்லாமல் பொறாமை இல்லாமல் கண்ணில் பட்டதை ரசித்து கைகளில் கிடைத்ததை உண்டு தினம் தினம் தனது வாழ்வை ஒரு விலங்கைப் போல கடந்தவன் செய்த புதுமைதான் இந்த கணிணிமயமான இன்றைய உலகமா !? என்று எண்ணிக்கொள்வதற்கு வியப்பாகவும் விசித்திரமாகவும் இருக்கிறது.

த்தனை எத்தனை வளர்ச்சிகள் !? தரையில் நடந்தவன் நிலவில் மிதக்கிறான். ஒற்றைக் கணினி கொண்டு இந்த உலகை ரசிக்கிறான். அந்த அளவிற்கு இந்த இன்டர்நெட் என்று சொல்லப்படும் இந்த வார்த்தைக்குள் இத்தனை சக்தியா !? சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த பிரமிப்புடன் இந்த இணையம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில தகவல்களை நாம் அறிந்துகொள்ளலாம்.

ணையத்தில் இன்று நாம் பயன்படுத்தி வரும் மின் அஞ்சல்கள் (email) பற்றி பலருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இந்த மின் அஞ்சலை முதன் முதலில் உருவாக்கி அனுப்பிய முதல் மனிதர் யார் என்று உங்களுக்கு தெரியுமா..!? 

ரேமண்ட் எஸ். டாம்லின்சன் (Raymond S. Tomlinson) தான் முதல் மின்னஞ்சலை அனுப்பியவர்.அதுவரை ஒரே கணிணியில் இருந்துதான் இரு நபர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. 1971ல் இவர் அனுப்பிய மின்னஞ்சலில்தான் ஒரு கணிணியில் இருந்து மற்றொரு கணிணிக்கு அனுப்பப்பட்டது.

மின்னஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும் ‘@’ என்ற குறியீட்டை அறிமுகப்படுத்தியவரும் இவரே என்றால் பார்த்துகொள்ளுங்கள்.


 

இன்று தேடுபொறி (search engine) என்றாலே உடனே அனைவரின் எண்ணங்களிலும் பதிலாய் வருவது கூகுள்தான் என்று சொல்லலாம் அந்த அளவிற்கு பரவிக்கிடக்கிறது இதன் புகழ். ஆனால் நம்மில் எத்ததனை பேருக்கு உலகத்தில் முதன் முதலில் இணையத்தில் பயன்படுத்தப்பட்ட முதல் தேடுபொறி (search engine) பற்றித் தெரியும் !?

ஏப்ரல் 20, 1994ல் தொடங்கப்பட்ட www.webcrawler.com  தான் இணையத்தின் முதல் தேடுபொறியாகும் (search engine). யாஹீவும் (Yahoo), கூகுளும் (Google) இதற்கு பின்னால் வந்தவையே என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ன்னதான் இணையத்தை பற்றி தகவல்கள் சொன்னாலும் இந்த தகவல் போன்று நமது எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த நமக்கு ஒரு தனி இடத்தை ஏற்படுத்தி இருக்கிறது இந்த வலைத் தளம். இன்று வலைத்தளம் பயன்படுத்தி தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வரும் நட்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது என்பது யாரும் மறுக்க இயலாத திண்ணம்.

ரி இந்த வலைத் தளம் எப்பொழுது முதன் முதலில் தொடங்கப்பட்டது. உலகத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட தளத்தின் பெயர் என்ன என்று ப்ளாக் எழுதும் எத்தனை நண்பர்களுக்குத் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் அனைவரும் தெரிந்துகொள்ளுங்கள்.


ஸ்டின் ஹால் (Justin Hall)  தான் இணையத்தின் முதல் வலைப் பதிவாளராக அறியப்படுகிறார். ஜனவரி 1994ல் தொடங்கப்பட்ட இவரின் http://www.links.net/  தான் இணையத்தின் முதல் வலைப்பதிவாகும்.

ன்ன நண்பர்களே இணையம் பற்றிய சில சுவாரசியமானத் தகவல்களை அறிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் பல புதியத் தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

நேசத்துடன்,
பனித்துளி சங்கர்
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதை - ஞாபகச் சுமை - Panithuli shankar Tamil Kadhal Kavithaigal - 14 July 2011

11




சில நேரம்
உடைபட்டுப் போகிறேன்.
சில நேரம்
தடைபட்டுப் போகிறேன்
உன் பார்வை என் மீது விழும் போது...!

ல வருடங்கள்
 உனக்கானக் காத்திருப்பின் சுகத்தை
 நீ என்னைக் கடந்து செல்லும்
அந்த சில நொடிகளில் உணர்கிறேன்...!

டை மழை காலத்திலும்
 அனலாய் கொதிக்கிறது தனிமை.
இந்த உலகம் பெரியது
என்பதை மறந்து பல முறை
 நீ விட்டு சென்ற கால்தடங்களுக்கு
 காவல் இருக்கிறேன்...!

ரு கைக்குழந்தையின்
தேடலாய்  எப்போதும்
உன் முகம் கண்டு மட்டுமே
 புன்னகைக்கிறேன்..!

தினம் தினம்
கருப்பாகிப் போகும் இரவுக்குள்ளும்
உன் நினைவுகள்
 நான் சுமப்பதால்  எப்பொழுதும்
பகலாகவே நீள்கிறது
எனக்கான உலகம்.... !!!

                                                                           -- பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ் - நகைச்சுவை - சிரிப்பு - கடி ஜோக்ஸ் - Panithuli shankar Tamil comedy jokes

18

FORMULA இல்லாத MATHS ஐ கேட்டேன்
EQUATION இல்லாத ACCOUNTS கேட்டேன்
PROBLEM இல்லாத MANEGEMENT கேட்டேன்
PROGRAME இல்லாத COMPUTER கேட்டேன்
ASSIGNMENT இல்லாத SUBJECT கேட்டேன்
PLANTS இல்லாத BOTNEY கேட்டேன்
ANIMALS இல்லாத ZOOLOGY கேட்டேன்
WARS இல்லாத HISTORY கேட்டேன்
TEST இல்லாத MARKS ஐ கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
அதனால் நானும் படிக்கவில்லை
EXAM EXAM வேண்டாம் என்று
DEGREE DEGREE DEGREE கேட்டேன்.....
* * * * *
திகமா “Makeup” போடுற பொண்ணும் ..
ரொம்பநாளா tea கடைல தொங்கற
“BANNUM” நல்லா இருந்ததா
சரித்திரமே இல்லை.
இப்படிக்கு பன்னும் டீயும் வாங்க காசு இல்லாதா பிச்சைக்கார சங்கம்.
பையன்;உனக்காக நான் தங்கமோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன்.
பொண்ணு; நீயே போட்டுவிடு
பையன்;இப்படி சொல்லுவேன்னு தெரிஞ்சிருந்தா நான் உனக்கு ட்ரெஸ் வாங்கிட்டு வந்திருப்பேன்.....
* * * * *
Wife: என்னங்க செத்துட்டா சொர்கத்துல husband & wife தனியாத்தான் இருகனுமாம்ல..............
Husband: அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
Wife: . . . . ???? :-(
என்னக் கொடுமை சார் இது !? செத்தாலும் விடமாட்டா போல..!?
  * * * * *
At age10-பிஞ்சு வயசுல உனக்கு love கேக்குதா .
10-18 படிக்கிற வயசுல என்ன Love
18-25 உருப்படியா ஒரு job இல்ல அடுகுலே உனக்கு love கேக்குதா
25-33 கழுத வயசாள என்ன love
அப்பா நாங்க எப்பதான்யா love பண்றது .  
 காதலிக்கக் காத்திருப்போர் சங்கம்.
* * * * *
ருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடனும்ன்னு!
* * * * *
10ம் வகுப்பு கணினி புத்தகம் எவ்வளவுங்க?
55 ரூபாய்.
என்னப்பா இப்படி சொல்றீங்கள்? கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள்.
வேணும்னா புத்தகம் வாங்கிக்கோங்க. நாங்க எல்லாம் சொல்லிக் கொடுக்க முடியாது.
    * * * * *
நபர் - 1: ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்...
 
அய்யய்யோ அடிக்கிறாங்க !  அடிக்கிறாங்க..!! என்னப்பா இது அறிவாளியா பதிலா சொன்னா ஆளாளுக்கு அடிக்க வரிங்க.
  * * * * *
‎2 பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "  
 
எப்புடி !!! ???????  நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.
  * * * * *
Boy: உன் கொலுசு காலில் இருந்தாலும், ஆதன் ஓசை என் மனதில் தன் உள்ளது .
Girl: என் செருப்பு என் காலில் இருந்தாலும், கையில் எடுக்க தான் என் மனது சொல்கிறது.
 
இப்படிக்கு செருப்பு மற்றும் கொலுசு விளம்பர சங்கம்.
  * * * * *
மேலும் வாசிக்க.. >>

வாயினால் ஒரு லட்சம் ஓவியங்கள் - இன்று ஒரு தகவல் - Indru oru thagaval - Doug Landis Mouth Art

12

னைத்து உறவுகளுக்கு வணக்கம். பொதுவாக நாம் ஒவ்வொருவரும் தினமும் எத்தனை எத்தனையோ காட்சிகளை கண்டு கொண்டிருக்கிறோம். அத்தனை காட்சிகளும் நமது உள்ளத்தில் எபோழுதும் அழியாமல் பதிவதில்லை. உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால் உலக அதிசயங்களான தாஜ்மஹால் போன்றவற்றின் காட்சிகள் ஒரு போதும் நமது இதயத்தில் இருந்து மறைந்துபோவதில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதுபோல்தான் இந்த ஓவியங்களும்.

லர் கூடி நிற்கும் ஒரு இடத்திற்கு சென்று உங்கள் அனைவருக்கும் பிடித்த ஓவியம் எது என்றுக் கேட்டால் அங்கு நூற்றில் தொண்ணூறு சதவீதம் மோனாலிசா ஓவியம் என்று சொல்வார்கள் அந்த அளவிற்கு அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு அந்த ஓவியம் வரையப்பட்டு இருந்தது. சரி இதெல்லாம் இந்த பதிவிற்கு எதற்கு என்று உங்களில் பலர் யோசிக்கத் தொடங்குமுன் நேராக மேட்டருக்கு வருகிறேன்.

வியம் வரைவது என்பது தெரிந்தவர்களுக்கு பூக்கள் பறிப்பதுபோல தெரியாதவர்களுக்கு கத்தி மேல் நடப்பதுபோல இது உண்மையும் கூட என்று சொல்லலாம். இன்னும் பல கேள்விகள் நிறைய பேருக்கு எழும். பலரின் கிறுக்கல்கள் கூட மிகவும் புகழ் பெற்ற ஓவியங்களாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். வான்கோ என்ற ஓவியரின் கிறுக்கல்கள் இப்பொழுதும் பல கோடிகளுக்கு விலை போகும் சிறப்புகள் பெற்றவை.

வான்கோ என்று இங்கு குறிப்பிடும் பொழுதுதான் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது இரண்டு மாதங்களுக்கு முன்பு ஓவியத்தால் உலகை மிரட்டிய வான்கோ என்ற ஒரு பதிவில் வான்கோ பற்றி எழுதத் தொடங்கியவன் அதை முதல் பகுதியுடன் நிறுத்தி வைத்திருக்கிறேன். உங்களில் யாருக்கேனும் இந்த வான்கோ பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் இருப்பின் அந்தப் பதிவை வாசித்துப் பார்க்கவும். இனி நாம் இந்த பதிவிற்கானத் தகவலுக்கு வருவோம்.

வியம் என்ற வார்த்தை உச்சரிப்பதற்கு எவளவு எளிமையோ அதற்கு எதிர்மறையாக இருக்கிறது ஓவியம் வரைவது. இது ஒரு சிறந்தக் கலை . சிறு வயதில் வண்ண வண்ண பென்சில்களைக் கைகளில் கொடுத்து நாம் கிறுக்குவதை எல்லாம் பார்த்து ரசித்த பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இந்த ஓவியத்தை நம்மில் எத்தனை பேர் விடாது முயற்சித்தோம் என்பது கேள்விக்குறியே..!!?? 

பொதுவாக உலகத்தில் வியப்பு புதுமை என்ற வார்த்தைகளுக்கு பலருக்கு விளக்கம் தெரியவில்லை. ஒருவர் செய்வதை மற்றொருவர் பின்பற்றுவதில் வியப்போ புதுமையோ எதுவும் இல்லை. ஒருவேளை இதற்கு மாறாக ஒருவரும் செய்யாத ஒன்றை யாரேனும் செய்ய நேர்ந்தால் அதில்தான் வியப்பும் புதுமையும் புதிதாய் பூக்கிறது. சரி அப்படி இந்த படைப்பிற்கும் இந்த புதுமை வியப்பிற்கு உள்ளத் தொடர்பு என்ன !?
வியம் வரைவதற்கு பொதுவாக நாம் எல்லோரும் கைகளைப் பயன்படுத்துவோம். இன்னும் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாற்றுதிறனாளிகள் போன்ற உறவுகள் கால்களினால் ஓவியம் வரைந்திருக்கிறார்கள். இரண்டு கைகளும் இல்லாத ஒரு மனிதனால் என்ன செய்ய இயலும் என்று பலரும் முகம் சுழிக்கும் இந்த சமுதாயத்தில் ஒரு ஓவியர் தனது இரண்டு கைகளும் இல்லாத நிலையில் தனது வாயின் உதவிகொண்டு இதுவரை ஒரு லட்ச்சதிற்கு அதிகமான ஓவியங்களை வரைந்து சாதித்திருக்கிறார் என்றால் நம்புவீர்களா !?

ண்மைதான் டஹ் லேண்டிஸ் (Doug Landis) என்பவர்தான் அந்த ஓவியர் தனது சிறு வயதிலேயே இரண்டு கைகளையும் இழந்த இந்த ஓவியர் சாதிக்கவேண்டும் என்ற ஆசையில் விடாமுயற்சியினால் தனது வாயினால் ஓவியங்களை வரையத் தொடங்கினார் ஒரு சாதாரண முயற்சியாக தொடங்கிய இந்த பழக்கம் இன்று ஒரு அசுர வெற்றியை அவருக்கு தந்திருக்கிறது. அவர் வரைந்த ஓவியங்களிள் பலவற்றை இங்கு கீழேத் தந்திருக்கிறேன் பார்த்து மகிழுங்கள்.










* * * * * * *
டிஸ்கி: கைகள் இருக்கும் எல்லோரும் சாதிக்கவில்லை. கைகள் இல்லாத இவர் சரித்திரம் படைத்திருக்கிறார். உடலின் ஊனத்தில் இல்லை வளர்ச்சி. ஒவ்வொருவரின் உள்ள ஊனத்தில் மட்டுமே இருக்கிறது வளர்ச்சி. உடல் ஊனப்படினும் உள்ளம் ஊனப்படாமல் பார்த்துக் கொள்வோம். நம்பிக்கை இழக்கும் வரை ஒருபோதும் தோல்விகள் வருவதில்லை.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

18





னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

கெட் டு கெதர் - Tamil ஜோக்ஸ் / நகைச்சுவை சிரிப்புகள் 05 May 2011

11

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஒரே கெட் டு கெதர் மேட்டரா போனதுல சரியாக பதிவுகள் தர இயலவில்லை. சரி இந்த இரண்டு நாட்களில் இல்லாத மகிழ்ச்சியை உங்களுக்கு கொடுக்கத்தான் இந்தப் பதிவு.

ன்னதான் இண்டர்நெட், ஈ -மெயில் என்று உலகம் வேகமாக பறந்தாலும், இந்த குட்டி மனது ஏதேனும் ஒரு சில யதார்த்தங்களில்தான் அதிகம் சிறைபட்டுக் கிடக்கிறது. அதுபோலதான் இந்த சிரிப்புகளும்
தினமும் குறைந்தது மூன்று நிமிடங்களாவது சிரிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. அதுக்கு எங்கே நேரம் இருக்கு என்று சலித்துக் கொள்ளும் சக்திமான்களுக்கு இந்த நகைச்சுவைப் பதிவு சமர்ப்பணம் .!
* * * * * * *
ன்று உலகில் காற்றைவிட வேகமாய் பயணிக்கும் காதலில் இருந்து தொடங்கலாம் சிரிப்பை.

காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……
சீனாவுல தான் பிறந்தது…..
ஏனென்றால் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY!
* * * * * * * 
நபர் – 1: ஏண்டா..! நாளைக்கு ஒரு நாள் லீவு இருக்கே நான் எங்க சித்தி
வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்….. நீ எங்கே போகப் போறே..???
நபர் – 2: நான் ‘Zoo’வுக்கு போகலாம்னு நினைக்கிறேண்டா…
நபர் – 1: அது சரி… அவங்கவுங்க சொந்தக்காரங்க இருக்கிற இடத்துக்குதானே போக முடியும்!!!..
* * * * * * *
நபர் – 1: இ‌ங்க பா‌த்‌தீ‌ங்களா ஹெல்மெட், லைசன்ஸ், வண்டி
 இன்ஷ்யூரன்ஸ் இதெல்லாம் மற‌க்காம எடுத்துட்டு வ‌ந்து‌ட்டே‌ன்
நபர் – 2:அது ச‌ரி ஏ‌ன் நட‌ந்து வ‌ர்‌றீ‌ங்க.
நபர் – 1:  ஐய்யைய்யோ....! இன்னிக்கு வண்டிய எடுத்துட்டு வர மறந்துட்டேன் சா‌ர்.
* * * * * * *
சாமி... நீங்க சொன்னபடி என் மனைவியைத் தூக்கியெறிந்துட்டேன்...?"

அடப்பாவி... நான் எப்ப உன் மனைவியைத் தூக்கியெறியச் சொன்னேன்?"
நீங்கதானே சாமி சனியனை எல்லாம் பனியனைப்போலக் கழட்டித் தூக்கியெறியணும்னு சொன்னீங்க?"
* * * * * * *
ங்க வீட்டில் திருடன் திருடினதைப் பார்த்தும் நீ ஏன் சும்மா இருந்தே?"
அவன் கையில் கத்தி இருந்ததே...?"
உன்னிடம்தான் துப்பாக்கி இருந்ததே...?"
அதையும் பத்திரமா ஒளிச்சு வெக்கலைன்னா துப்பாக்கியையும் திருடியிருப்பான்!"
* * * * * * *
ரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்லஎன்கிறார். இதைத்தான் நாம் வெட்டி ஸீன்போடுவது என்கிறோம்….
* * * * * * *
 டாக்டர் அ‌ந்த ஆளு ஆபரேஷன் செய்யச் சொல்லி நாயா அலையறாரு, நீங்க எ‌ன்னடா‌ன்னா எதுவு‌ம் பேசாமலயே இருக்கீங்களே?
ஆபரேஷன் செஞ்சா பேயா அலைவாரு பரவால்லியா?
* * * * * * *
Love marriage’கும்  Arranged marriage’கும் என்ன
வித்தியாசம்???
நாமளா போய் கிணத்தில விழுந்தா, அது Love marriage!
பத்து பதினஞ்சு பேர் சேர்ந்து நம்மளக் கிணத்தில தள்ளி விட்டா, அது Arranged marriage!!!
  * * * * * * *
 புதுசா பதவி ஏத்த அமைச்சரோட அலுவலகத்துல ‘எல்’போர்டு மாட்டியிருக்காங்களே... ஏன்...?"
அதுவா... அவர் இப்பத்தான் ‘ஊழல்’ செய்ய ஆரம்பிச்சிருக்காராம்..."
  * * * * * * *
 ம்ம ஸ்டேஷனுக்கு மாமூல் கொடுக்கற கபாலியும், மாயாண்டியும் புது கண்டிஷன் போடறாங்க சார்!"
என்னன்னு?"
ட்வெண்டி ட்வெண்டி கிரிக்கெட் வீரர்கள் மாதிரி அவங்களையும் ஏலத்துல எடுத்தாதான் மாமூல் தருவாங்களாம்!"
  * * * * * * *
  அ‌ப்பா : இதோ பாருடா! நீ சூப்பரா பரிட்சை எழுதினா... 80 மார்க்
சுமாரா எழுதினா 60 மார்க், ரொம்ப சுமாரா எழுதினா பாஸ் மார்க்...
மக‌ன் : அ‌ப்போ ரொம்ப மோசமா எழுதினா?
அ‌ப்பா: டாஸ்மாக்!
  * * * * * * *
    
நபர் – 1: நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதுக்கு “அந்த மாடு எங்க மேயுதோ?”ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில மரியாதை அவ்வளவுதானா???
நபர் – 2: ஓகோ… உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு… அது நீ தானா???
* * * * * * *
நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.
பாட்டி வடை சுட்ட கதையில, வடைய சுட்டது,
அ) பாட்டியா????
ஆ) காக்காவா???
உடனடியா பதில்
தேவை……!!!!
* * * * * * *



* * * * * * *
மேலும் வாசிக்க.. >>