- Home
- Archive For 2015
புதிய காதல் கவிதைகள் - பனித்துளி சங்கர் - Tamil Kadhal Kavithaigal - Panithuli shankar ( அழகிய நினைவுகள் )
3
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/28/2015 06:18:00 PM
குறிச்சொல் KAVITHAIGAL, love poem, கண்ணீர், கவிதைகள், காதல் கவிதை, சோகம், ஞாபகம், தனிமை, நினைவு, பிரிவு
குறிச்சொல் KAVITHAIGAL, love poem, கண்ணீர், கவிதைகள், காதல் கவிதை, சோகம், ஞாபகம், தனிமை, நினைவு, பிரிவு
தாய் பாசம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - Panithuli shankar Kavithaigal
3
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
9/09/2015 04:40:00 PM
குறிச்சொல் Amma kavithaigal, KAVITHAIGAL, New Tamil Poems, Tamil Kavithaigal, Thai Kavithai, அன்பு, கவிதைகள், தாய் பாசம்
குறிச்சொல் Amma kavithaigal, KAVITHAIGAL, New Tamil Poems, Tamil Kavithaigal, Thai Kavithai, அன்பு, கவிதைகள், தாய் பாசம்
முதல் காதல் - பனித்துளி சங்கர் காதல் கவிதை - Panithuli shankar Muthal kathal kavithai
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
8/20/2015 08:54:00 PM
குறிச்சொல் First Love poem in tamil, New Love poems, Panithulishankar Love kavithai, Tamil Kathal kavithai, கவிதைகள், காதல் கவிதை, முதல் காதல்
குறிச்சொல் First Love poem in tamil, New Love poems, Panithulishankar Love kavithai, Tamil Kathal kavithai, கவிதைகள், காதல் கவிதை, முதல் காதல்
ஞாபகத் தடை - பனித்துளி சங்கர் காதல் கவிதை - Panithuli shankar Tamil Kadhal Kavithai
5
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
8/20/2015 08:49:00 PM
குறிச்சொல் kadhal kavithai, KAVITHAIGAL, love poem in tamil, New Tamil kavithai, Panithuli shankar poems, கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதை
குறிச்சொல் kadhal kavithai, KAVITHAIGAL, love poem in tamil, New Tamil kavithai, Panithuli shankar poems, கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதை
ஏழையின் பசி - நீதிக்கதை - பனித்துளி சங்கர்
ஒரு செல்வந்தர் இருந்தார்.
ஒரு நாள் அவர் தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை பணியாளிடம் கொடுத்துக் கோவிலில் கொடுக்கச் சொன்னார்.
ஏழைப் பணியாள் எடுத்துச் செல்லும் வழியில் அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..
மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான்.
அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார்.கனவில் இறைவன் வந்து நீஎனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்;ருசியாக இருந்தது என்றான்.
செல்வந்தனுக்கு மிகக் கோபம் வந்தது.
ஒரு குலை பழம் கொடுத்திருக்க இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப் பட்டான்.
மறு நாள் காலை அந்தப் பணியாளைக் கூப்பிட்டு விசாரித்தான்.
அவன் இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.
செல்வந்தனுக்குப் புரிந்தது .
அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று!
நீதி: இல்லாத ஒருவனுக்கு நீ செய்த உதவே, கடவுளுக்கு செய்த உதவி எனப்படும்…
வெளிநாட்டு வாழ்க்கை - கவிஞர் பனித்துளி சங்கர் கவிதை - Foreign life Tamil Kavithai - Panithuli shankar Poem
3
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
7/01/2015 05:05:00 PM
குறிச்சொல் Painful kavithai, Tamil Kavithaigal, Tamil Poem, கவிதை துன்பம், கவிதைகள், சோகம், வெளிநாடு கவிதை
குறிச்சொல் Painful kavithai, Tamil Kavithaigal, Tamil Poem, கவிதை துன்பம், கவிதைகள், சோகம், வெளிநாடு கவிதை
வெளிநாட்டு வாழ்க்கை !
முகவரி தெரியாத பயணம் போலத்தான்
இந்த வெளிநாட்டுப் பயணமும்
நாங்கள் அடகு வைக்கப்படுகின்றோமா அல்லது
நிரந்தரமாய் விற்கப்படுகின்றோமா என்பது
புரியாத புதிர்தான் !...
எங்கோ வேற்றுக் கிரகம் வந்துவிட்டோமோ என்ற
அச்சத்தை பேசத் தெரிந்தும்
பேசாமல் செல்லும் மனிதர்கள் இங்கே
தந்துவிட்டு செல்கிறார்கள் !...
பாவம் என் அம்மா பேசக் கற்றுக்கொடுத்தார் ஆனால்
இங்கு வந்து எப்படி ஊமையானேன்!.
என்ன செய்ய
திரும்பும் திசையெங்கும் புரியாத மொழிகள் !..
ஒருவழியாக வாழ்கையின் அதிசயங்களை
கற்றுத் தரப்போகும் தங்கும் அறை என்று சொல்லும்
கோழிக் கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிட்டேன் !...
முதல் இரவின் விடியல்
எனது அறையில் இருபதுக்கும் அதிகமான
மாறுபட்ட இசை கச்சேரியுடன் தொடங்கியது
( செல்போன் அலாரங்களைத் தான் சொன்னேன் )
மூன்று மணிக்கு எழுந்து
ஐம்பது நிமிடங்கள் வரிசையில் நின்று
இருபது நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு
காலைக் கடன்களை முடித்து
கிடைத்தும் கிடைக்காத காய்ந்த ரொட்டிகளை
கைகளில் ஏந்திக்கொண்டு கிளம்புவதற்காக வேகமாய்
ஹாரன் எழுப்பும் வாகனத்தை நோக்கி
மின்னல் வேகத்தில் ஓடிவந்து ஏறி
எங்கோ ஓரத்தில் கொஞ்சமாய் கிடைத்த இருக்கையில்
உடம்பின் பாதி பாகத்தை அமர்த்தி
வாங்கிய பெரும் மூச்சில் உணர்ந்தேன்
படிப்பின் அருமையை !....
ஒருவார வேலை களைப்பிற்கு
வார விடுமுறையும் மெல்ல அறிமுகமானது
அப்போது ஒரு அலைபேசி அழைப்பு
ஹலோ எப்படி இருக்கீங்க!? எங்கே இருக்கீங்க !?
நாங்க நாளைக்கு உங்களைப் பார்க்க வருகிறோம் என்று
உள்ளுக்குள் மகிழ்ச்சி நிரப்ப
இடமில்லாமல் இருந்தது அப்பொழுது !
ஆஹா !
என்னையும் பார்க்க இத்தனை உறவுகளா என்று
வியப்போடு புன்னகைத்தேன்
பின்புதான் தெரிந்தது எல்லாம் அவர்களுக்கு
கொடுத்து அனுப்பிய பொருட்களை
வாங்க வந்தவர்கள் என்று !...
அழுகை வந்தும் அதை
போலி சிரிப்பிற்குள் புதைத்துக்கொண்டேன் .....
வந்து ஒரு மாதம் கூட இன்னும் முடியவில்லை
அதற்குள் கடன் கொடுத்தவர்களின் அலைபேசி அழைப்புகள்
என்னப்பா பணம் வாங்கி ரொம்ப நாளாச்சு என்று !
இதற்கிடையில் மனைவியின் அன்பான உபசரிப்போடு
மெல்லத் தொடங்கிய இன்ப அதிர்ச்சி
மாமா நீங்க அப்பாவாகப் போறீங்க என்று ..
எப்படி சொல்வதென்று தெரியவில்லை
ஆனந்தத்தின் ஆரவாரத்தை !...
காலங்களும் ஓடியது
கடனைக் கட்டி முடிக்கவே பல வருடங்கள் கழிந்தது
மீண்டும் மனைவியின் பல அழைப்புகள்
என்னங்க பையனை பள்ளியில் சேர்க்கப்போறேன் ,
என்னங்க பையன் பத்தாம் வகுப்பு படிக்கப்போறான் ,
என்னங்க பையன் கல்லூரியில் சேரனுமாம் இப்படி
தேவைகளின் பட்டியல் நான் வீடு திரும்ப வேண்டும்
என்ற எண்ணத்தையே அடியோடு நீக்கியது
என் மனதில் இருந்து !....
தங்கள் குழந்தைகளின் வாழ்க்கைக்காக
சொத்துக்களை இழந்த தந்தைகள் சிலர் ஆனால்
அதே குழந்தைகளின் வளர்ச்சிக்காக
வாழ்க்கையே தொலைத்த
என்னைப் போன்ற தந்தைகள் பலர் !.....
- கவிஞர் பனித்துளி சங்கர் .
,
,
,
,
,
,
,
,,
,
தமிழ் காதல் கவிதைகள் - இலையுதிர் காலம் - பனித்துளி சங்கர் - Tamil Kadhal kavithaigal
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/29/2015 02:38:00 PM
குறிச்சொல் Kadhal Kavithaigal, Love POEMS, New kathal kavithai, Panithuli shankar Kavithai 2015, Tamil Kavithai, காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள்
குறிச்சொல் Kadhal Kavithaigal, Love POEMS, New kathal kavithai, Panithuli shankar Kavithai 2015, Tamil Kavithai, காதல் கவிதைகள், தமிழ் கவிதைகள்
அதிர்ஷ்ட நாணயம் - பனித்துளி சங்கர் - இன்று ஒரு தகவல்
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
6/29/2015 02:35:00 PM
குறிச்சொல் Muyarchi, Nampikkai kathai, panithuli, உழைப்பு, கதை, சிறு கதை, தகவல்கள், தன்னம்பிக்கை, நாணயம், முயற்சி
குறிச்சொல் Muyarchi, Nampikkai kathai, panithuli, உழைப்பு, கதை, சிறு கதை, தகவல்கள், தன்னம்பிக்கை, நாணயம், முயற்சி
அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், ‘அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.
அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. ‘எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.
பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ”அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது” என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!
அந்தக் காசில் துளையே இல்லை. ‘என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ”என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்” என்றாள்.
”இது எப்போது நடந்தது?” என்று கேட்டான். ”அந்தக் காசு கிடைத்த மறுநாளே” என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான்.
‘உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்…!
இன்று ஒரு தகவல் - புத்திசாலித்தனம் - Panithuli shankar Indru Oru Thagaval - Brilliant
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
5/14/2015 05:30:00 PM
குறிச்சொல் Brilliant, Indru oru thagaval, Kathaigal, Pothu arivu, கதைகள், கப்பல், சுவாராஸ்யம், தகவல்கள், பொது அறிவு
குறிச்சொல் Brilliant, Indru oru thagaval, Kathaigal, Pothu arivu, கதைகள், கப்பல், சுவாராஸ்யம், தகவல்கள், பொது அறிவு
அனைத்து அபின்ன் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் உங்கள் அனைவரையும் நான் வாசித்து வியந்த மீண்டும் ஒரு தகவல்களின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி !
ஒரு ஊரில் ஒரு கப்பல் வியாபாரி இருந்தார்.அவரிடம் இருந்த ஒரு பெரிய கப்பல் பழுதாகி விட்டது.ஊரில் உள்ள பெரிய பெரிய மெக்கானிக் எல்லாம் வரவழைத்து கப்பலின் இஞ்சினை சரி செய்ய சொன்னார் ஆனால் யாராலும் இஞ்சினில் என்ன பழுது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
ஒரு வயதான மெக்கானிக் தான் அதை பழுது பார்த்து தருவதாக சொன்னார்.சரி என்று அவரும் ஒப்புக் கொண்டார்.மெக்கானிக் பெரிய பையில் பழுது பார்க்கும் பொருட்கள் எல்லாம் வைத்து இருந்தார்.கப்பல் வியாபாரிக்கு இவர் மேல் நம்பிக்கை வந்து விட்டது.
அந்த வயதான மெக்கானிக் இஞ்சினை நன்றாக நாலா பக்கமும் சுற்றி வந்து பார்த்தார் .பிறகு தன் பையில் இருந்து சுத்தியை எடுத்து ஒரு இடத்தில் ஓங்கி அடித்தார்.இஞ்சினை ஸ்டார்ட் பண்ணி பார்த்தார் அதுவும் வேளை செய்ய ஆரம்பித்துவிட்டது.
கப்பல் வியாபரியிடம் அந்த மெக்கானிக் நாளை என் கடையில் வேலை செய்யும் பையனிடம் பில் கொடுத்து அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.
அடுத்தநாள் ஒரு பையன் பில் எடுத்து வந்து நீட்டினான்.அதை பார்த்த கப்பல் வியாபாரி அதிர்ச்சி அடைந்தார்.அதில் 1 லட்சம் ரூபாய் என்று போட்டு இருந்தது, அவர் அந்த பையனிடம் தெளிவாக பில் போட்டு கொண்டு வா என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அடுத்த நாள் வேறு ஒரு பில்லுடன் வந்து இருந்தான்,அதில்
1-சுத்தியலால் அடித்ததற்கு 5 ரூபாய்.
2-எங்கு அடிக்க வேண்டும் என்று கண்டுபிடித்தற்கு 99,995 ரூபாய்
என்று எழுதி இருந்தது.
மண்டையில மூளை இருந்தா மட்டும் போதாதுங்க அதை எப்படி பயன்படுத்தனும்னு தெரிஞ்சிருக்கனும்…
விழியின் சிறப்பு புதிய சிந்தனை - இன்று ஒரு தகவல் - பனித்துளி சங்கர்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
5/12/2015 06:22:00 PM
குறிச்சொல் Eye, Indru oru thagaval, Panithulishankar, சிந்தனை, தகவல்கள், தர்மம், பார்வையற்றோர், வியப்பு, விழி
குறிச்சொல் Eye, Indru oru thagaval, Panithulishankar, சிந்தனை, தகவல்கள், தர்மம், பார்வையற்றோர், வியப்பு, விழி
சரி இனி நாம் தகவலுக்கு வருவோம். கண் தெரியாத சிறுவன் ஒருவன் ஒரு கோவில் அருகில் பிச்சை எடுத்து கொண்டிருந்தான்.அவன் எதிரில்’”எனக்கு இரண்டு கண்களும் தெரியாது,தயவு செய்து தருமம் பண்ணுங்கள்” என்று எழுதி இருந்தது.
அந்த வழியில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்த்து கொண்டே சென்றார்கள், யாரும் தருமம் பண்ணுவது மாதிரி தெரியவில்லை.
ஒரு நபர் தன்னுடைய பர்சில் இருந்து பணத்தை எடுத்து அவன் தட்டில் போட்டார்.பிறகு அங்கு வைத்து இருந்த போர்டின் பின் பகுதியில் ஒரு வாசகத்தை எழுதி எல்லாரும் பார்க்கும்படி வைத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அதை படிக்கும் அனைவரும் அவன் தட்டில் சில்லரையை போட ஆரம்பித்தனர்.மாலை ஆனதும் அந்த போர்ட் எழுதி வைத்தவர் வந்து பார்த்தார்.அந்த சிறுவன் கேட்டான் ஐயா அந்த போர்டில் என்ன எழுதி வைத்தீர்கள் என்று கேட்டான் .அவர் சொன்னார் நீ என்ன எழுதி வைத்தாயோ அதையே தான் நான் வேறு விதத்தில் எழுதி வைத்தேன் என்றார்.
”இன்றைய பொழுது நன்றாக விடிந்துள்ளது ஆனால் என்னால் தான் அந்த அற்புதத்தை பார்க்க முடியவில்லை” என்று அந்த போர்டில் எழுதப்பட்டிருந்தது.
இந்த வாசகத்தை படித்த அனைவரும் உனக்கு கண் தெரியாது என்பதைவிட நல்ல வேளை நமக்கு கண் இருக்கிறது நம்மால் எல்லாவற்றையும் கண்டு ரசிக்கமுடிகின்றது என்று உனக்கு தருமம் செய்து விட்டு செல்கிறார்கள் என்று சொன்னார்.
அற்புதமானது எதுவென்றால் ஒருத்தன் மனசு விட்டு சிரிப்பது,அவன் சிரிப்புக்கு காரணம் நீ தான் என்றால் அது அதைவிட அற்புதமானது…
வெற்றியின் இரகசியம் - தாமஸ் ஆல்வா எடிசன் - தன்னம்பிக்கை தகவல்கள்
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
5/09/2015 05:13:00 PM
குறிச்சொல் டிசன், தகவல்கள், தத்துவம், தன்னம்பிக்கை கதைகள், விடா முயற்சி, வெற்றி
குறிச்சொல் டிசன், தகவல்கள், தத்துவம், தன்னம்பிக்கை கதைகள், விடா முயற்சி, வெற்றி
அனைத்து அன்பின் உறவுகளுக்கும் பனித்துளி சங்கரின் வணக்கங்கள் நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்கள்அனைவரையும் நான் வாசித்து வியந்த சில தகவல்களின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி !
சரி இனி நாம் தகவலுக்கு வருவோம் தாமஸ் ஆல்வா எடிசன் அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும் என்று தெரிவில்லை ஆகவே நான் வாசித்து அறிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். தாமஸ் ஆல்வா எடிசன் வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அதிகமான தோல்விகளைச் சந்தித்தார். அந்த அனுபவ அறிவைக் கொண்டு வேறு எந்த மனிதரைக் காட்டிலும் அவர் அதிகமாக வெற்றி பெற்றது இயற்கை. 1093 கண்டுபிடிப்புகள் அவர் பெயரில் உள்ளன. ஞபாகமிருக்கட்டும் எடிசன் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் முயற்சி செய்த காரணத்தினால்தான் 1093 புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. கோடிக்கணக்கான டாலர்களைச் சம்பாதிக்கவும், மனித சமுதாயத்துக்கு அளவிட முடியாத தொண்டு செய்யவும் முடிந்தது. இந்தக் கண்டுபிடிப்புகளெல்லாம் கடுமையான உழைப்பின் பலன்களே தவிர, எங்கிருந்தோ வந்து குதித்த எண்ணங்களின் விளைவுகள் அல்ல! அவர் கூறியது போல, “ஒரு மேதையின் புத்திசாலித்தனம் - ஒரு சதவிகிதம் திடீரென்று உதிக்கும் யோசனைகளிலும், 99 சதவிகிதம் வியர்வையிலும் அடங்கியிருக்கிறது”. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பதன் மூலம் அதை அவர் நிரூபித்துக் காட்டினார்.
மின்சாரத்தைக் தேக்கி வைக்கும் ஸ்டோரேஜ் பாட்டரியைக் கண்டுபிடிக்கப் பத்துவருடம் உழைத்தார்! அவரும் அவரது உதவியாளர்களும் 17,000 வகைத் தாவரங்களைப் பரிசோதித்துப் பாகுபாடு செய்து பின்னர் ஒரே ஒரு மரத்திலிருந்து லேடக்ஸ் என்னும் பொருளை வடிக்கும் முறையைக் கண்டுபிடித்து வெற்றி அடைந்தார்கள்! ஒரு முறை வெற்றியடையும் பொருட்டு 17,000 முறை தோல்வியடைய தயாராக இருந்தார்.
தோல்வி என்பது வாழ்க்கை கற்றுத்தரும் பாடங்களில் ஒன்றே தவிர அதில் அவமானம் ஏதும் இல்லை. தோல்வி கற்றுத்தரும் பாடத்தை நீங்கள் ஆவலுடன் கற்க வேண்டும். தோல்வியைக் காட்டிலும் சிறந்த ஆசான் இருக்க முடியாது என்பதை உணருங்கள். நீங்கள் தோல்வி அடையும் போது அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு மீண்டும் முயற்சி செய்வீர்களேயானால் தோல்வியை நீங்கள் தோற்கடித்து விடுவீர்கள். வாழ்க்கையின் மிகமுக்கியமான வெற்றிப்பாடம் அதுதான். அதைப் படியுங்கள். படித்தாற்கேற்ப வாழ்ந்து காட்டுங்கள். வெற்றி கிடைப்பது உறுதி.
முக்கிய குறிப்பு: 1093 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான தாமஸ் எடிசன் (டாமி) பள்ளிக்கூடத்தில் படித்தது ஆறே மாதம்தான்.
இருனூரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஒரு பார்வை - Old Chennai vs New Chennai
0
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
3/08/2015 06:15:00 PM
குறிச்சொல் 1830, Indru oru thagaval, New Chennai, Old Chennai, PANITHULI SHANKAR, தகவல், பழைய சென்னை, புதிய சென்னை, வரலாறு
குறிச்சொல் 1830, Indru oru thagaval, New Chennai, Old Chennai, PANITHULI SHANKAR, தகவல், பழைய சென்னை, புதிய சென்னை, வரலாறு
இன்று ஒரு தகவல் - ஹிட்லரையே அடிபணிய வைத்த ஒரு தமிழன் - மாவீரன் செண்பகராமன் - Panithuli shankar
1
கிறுக்கியது
பனித்துளி சங்கர்
தேதி
1/11/2015 10:13:00 PM
குறிச்சொல் Best tamilan, Hitler, Indru oru thagaval, Shenbagaraman, உலகம், செண்பகராமன், தகவல்கள், வரலாறு, வியப்பு
குறிச்சொல் Best tamilan, Hitler, Indru oru thagaval, Shenbagaraman, உலகம், செண்பகராமன், தகவல்கள், வரலாறு, வியப்பு
உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்.....!!
எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று. அதிலும் தமிழினத்தின் வரலாறுகளை கேட்பார் அற்றதால் விழுங்கிக் கொண்டிருக்கிறது இந்த உலகு. உலக சர்வாதிகாரியான ஹிட்லரையே மன்னிப்பு கோர செய்தவன் அடி பணியவைத்தவன் ஒருவன் உள்ளான் என்றால் நம்புவீர்களா ? அதுவும் அவன் ஒரு தமிழன் என்பதை எத்தனை பேர் அறிவீர்கள் ? ஆம் தோழர்களே....!
அந்த வீரன் வேறுயாருமில்லை அவன் தான் மாவீரன் செண்பகராமன். மாவீரன் செண்பகராமனை எத்தனை பேர் அறிவீர்கள்? ஒரு வேடிக்கையான விடயம். தமிழக அரசே 2009 ஆம் ஆண்டு தான் மாவீரன் செண்பகராமனை இனங்கண்டு கொண்டு அவரை கெளரவித்து சிலை ஒன்றை நிறுவியது. இந்தியக் குடியரசின் உயிர் மூச்சாகத் திகழும் “ஜெய்ஹிந்த்” என்னும் தாரக மந்திரத்தை, முதன் முதலில் உச்சரித்தவர் வங்காளச் சிங்கம் சுபாஸ் சந்திரபோஸ் என்று தான் பலர் கருதுகின்றனர். அவர் நிறுவிய இந்திய தேசிய இராணுவத்தின் போர் முழக்கம் “ஜெய்ஹிந்த்” என்பது உண்மையே. ஆனால் அவருக்கு முன்பே “ஜெய்ஹிந்த்” மந்திரத்தை உச்சரித்து இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய பெருமை செண்பகராமன் என்ற ஒரு தமிழனுக்குத்தான் உரியதென்றால், ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? யார் அந்த செண்பகராமன் என்று பார்ப்போம்.
பாரத மாதாவின் அடிமை விலங்குகளை அடித்து நொறுக்கிவிட வேண்டும் என இந்திய மக்கள் அத்தனை பேரும் ஆக்ரோஷத்தால் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. பால்மணம் மாறாத பள்ளி மாணவர்கள் கூட, போராட்டத்தில் குதித்து விட்டனர். பாரதத்தைக் காக்கப் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான பள்ளி மாணவர்களுக்கு, ஒரு தலைவனாய் விளங்கினான் ஒரு பதினைந்து வயது சிறுவன். அவன் தான் நாஞ்சில் மண் பெற்றெடுத்த நாயகன் செண்பகராமன். இவனது திறமைகளையும் ஆற்றலையும் கண்டு வெள்ளையர்கள் வியந்து போனார்கள். சிறிது காலம் தலைமறைவாக வாழவேண்டிய நிற்பந்தம்; அதனால் ஜேர்மனிக்கு பயணமானான். ஆங்கிலேயர்களுக்கே அதிர்ச்சி இந்த சிறுவனால் இது எப்படி சாத்தியம்? வியந்தார்கள்.
ஜேர்மனியிலே உயர்கல்விகளையெல்லாம் முடித்து கலாநிதி பட்டம் பெற்றுக்கொண்டார். அறிவிலே சிறந்து மிளிரத்தொடங்கினார். ஜெர்மனியச் சக்கரவர்த்தியாக அப்போதிருந்த கெய்சர் மன்னன், தன் அந்தரங்க நண்பனாக செண்பகராமனை ஏற்றுக்கொண்டார் என்றால், மேலும் விளக்கம் தேவையில்லையல்லவா? டாக்டர் செண்பகராமன் கலந்து கொள்ளாத ராஜாங்க வைபவமோ, விருந்தோ ஜெர்மனியில் கிடையாதென்ற நிலைமை உருவாகியது.
தாயகத்தை விட்டு வெளியேறியதன் நோக்கமே, இனிமேற்தானே நிறைவேற வேண்டும் என்று உழைக்க ஆரம்பித்தான். இந்திய தேசியப் போராட்டத்தைப் பற்றி ஜெர்மனில் நிகழ்ந்த சரமாரியான சொற்பொழிவுகளைத் தொடர்ந்து, இவற்றின் எதிரொலியாக அங்கு “இந்திய ஆதரவு சர்வதேசக் கமிட்டி” ஒன்று நிறுவப்பட்டது. டாக்டர் செண்பகராமனே இதற்கும் தலைமை தாங்கினார். இந்தக் கமிட்டியின் உதவியோடு, ஐரோப்பிய நாடுகளிடையே, இந்தியாவைப் பற்றி நிலவிய தவறான அபிப்பிராயங்களை தவிடுபொடியாக்கிய செண்பகராமன், இந்திய நலனுக்கு அக் கமிட்டியை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.
தனது எண்ணங்களை ஐரோப்பிய நாடுகளுக்குத் தெளிவாக எடுத்துக் கூறுவதற்காக டாக்டர் செண்பகராமன் நடத்திய “புரோ இந்தியா” ( PRO INDIA ) எனும் ஆங்கிலப் பத்திரிகை இந்தியாவை நிர்மாணிக்கப் போகும் புரட்சிக் குரலாகியது.
ஹிட்லர் மன்னிப்பு கோரல்
---------------------------------------
ஒருநாள் டாக்டர் செண்பகராமனும், ஹிட்லரும் அவருடைய சகாக்களும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அகங்காரம் பிடித்த ஹிட்லர், ஆணவத்தோடு இந்தியாவையும், இந்தியத் தலைவர்களையும் பற்றி இழிவாகப் பேசினார்.
‘சுதந்திரம் பெறக்கூடிய யோக்கியதை இந்தியர்களுக்கு கிடையாது” என்றாராம் ஹிட்லர். இதைக் கேட்டதும் கொதித்தெழுந்து, சிங்கம் போல் கர்ஜித்தார் செண்பகராமன். இந்தியாவின் பாரம்பரிய பெருமை பற்றியும் இந்தியத் தலைவர்களின் மேதா விலாசம் பற்றியும் ஆணித்தரமான வாதங்களை எடுத்து ஹிட்லர் முன் விளக்கினார். டாக்டரின் கர்ஜனையைக் கேட்ட ஹிட்லர் உண்மையிலேயே ஸ்தம்பித்து விட்டார். டாக்டர் செண்பகராமனின் மனோசக்தி முன், தன்னால் நிற்க முடியாது அடங்கியதோடு, தாம் செய்த பிழையையும் உணர்ந்து உடனே செண்பகராமனிடம் மன்னிப்புக் கோரினார். வார்த்தையளவில் மன்னிப்புக் கேட்டால் போதாது எழுத்திலும்; மன்னிப்பைத் தரவேண்டும் என்று வாதாடினார் பிடிவாதக்காரரான டாக்டர் செண்பகராமன். அதன்படியே, எழுத்தில் மன்னிப்புக் கோரினார்.
முதலாம் உலகப்போர் பிரிட்டனுக்கும் ஜெர்மனுக்குமிடைய ஆரம்பமாகியது. உடனடியாக டாக்டர் செண்பகராமன் ஐரோப்பிய நாடுகளில் அப்போது சிதறிக் கிடந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரு ராணுவ சக்தியாக உருவாக்கினார். போரில் தனக்குச் சாதகமாக இந்தியர்களைப் பயன்படுத்த ஜெர்மனி முயற்சித்தது. அக்கட்டத்தில் ஐரோப்பாவில் வாழ்ந்த இந்தியர்களின் மனோபாவத்தை, போரினால் எழும் இந்த நெருக்கடியை இந்தியாவின் விடுதலைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர்கள் தீர்மானம் செய்து உள்ளனர். ஜெர்மனியர் லாபத்திற்காக மட்டும் பாடுபட வேண்டும் என்பது அவர்கள் நோக்கமல்ல என நேருஜி தனது சுயசரிதையில் தெளிவாக எடுத்து விளக்கி இருந்தார். puradsifmcom
இவ்விதம் பாரதத்தின் நலன் கருதி செண்பகராமன் உருவாக்கிய போராட்ட அணிக்கு “இந்திய தேசியத் தொண்டர்படை” என்று பெயர் கொடுக்கப்பட்டது.
ஜெர்மனி கேட்டுக் கொண்டபடி, சில நிபந்தனைகளோடு போரில், ஜெர்மனிக்கு உதவ ஐ. என். வி. எனும் இந்தியப்படை ஒப்புக் கொண்டது. செண்பகராமனின் திட்டங்கள் அனைத்தையும் ஜெர்மனின் கெய்ஸர் மன்னர் ஏற்றுக் கொண்டார். இந்தச் சந்தர்ப்பத்திலேதான், செண்பகராமனின் மதிநுட்பத்தைப் பாராட்டி, “சுதந்திர பாரதத்தின் முதல் ஜனாதிபதியாக வீரன் செண்பகராமன் நியமிக்கப்பட வேண்டும்” என்று கெய்ஸர் மன்னர் தனது அந்தரங்க ஆவலை வெளியிட்டார்.
யுத்த காலத்தில், ஹம்டன் என்ற பிரசித்தி பெற்ற நீர் முழ்கிக் கப்பலின் பெயரைக் கேட்டாலே, அன்று பிரிட்டிஷார் கதி கலங்கினர் அந்தக் கப்பலைச் செலுத்தி. 1914 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி சென்னையிலுள்ள சென்ட் ஜோர்ஜ் கோட்டையைத் தாக்கி, பிரிட்டிஷ் அரசை கலங்கடித்த வீரன் வேறு யாரென்று நினைக்கிறீர்கள்? “ஹம்டன்” எனும் பிரமாண்டமான நீர் மூழ்கியின் பொறியியலாளரும், இரண்டாவது கமாண்டருமான டாக்டர் செண்பகராமன்தான். சென்ட் ஜோர்ஜ் கோட்டை தகர்ந்ததற்கும், பிரிட்டிஷார் நடுங்கியதற்கும் காரணபூதர்! ஹம்டன் குண்டு வீச்சு சம்பவத்தைப் பற்றிய வரலாறு, கோட்டைச் சுவற்றில் பதிக்கப்பட்டிருப்பதை இப்போதும், சென்னையிலுள்ள இதே கோட்டையில் காணலாம். இது நடந்தது செண்பகராமனின் இருபத்தி மூன்றாவது வயதில்! இத்தனை இளம் பருவத்தில் செண்பகராமன் மேற்கொண்ட சாதனைகளை கண்டு ஆங்கிலேயர்கள் வியந்தார்கள். அவர் வழி நடத்திய ஐ. என். வி. யின் ஆற்றலைக் கண்டு வெள்ளையர் அடைந்த பீதிக்கு அளவே கிடையாதென வரலாறு கூறுகிறது.
இந்தனை வீரசாகசங்களை புரிந்து ஆங்கிலேயர்களை துவசம் செய்த மாவீரன் நாசிப்படைகளின் நயவஞ்சகமான சூழ்ச்சியால் கொல்லப்படுகின்றார். தன் இறுதி லட்சியத்தை மனைவியிடம் கூறுகிறார் செண்பகராமன்.
இந்திய சுதந்திரத்தை கண்ணால் காணாமல். என் உயிர் பிரியத்தான் போகிறது.எனினும் நான் இறந்த பின், எனது அஸ்தியை பத்திரமாக எடுத்துச் சென்று, நான்பிறந்த தமிழ் நாட்டில், என் அன்னையின் அஸ்தி சங்கமமான கரமனை ஆற்றில்கரைத்துவிட்டு, மறுபகுதியை நாஞ்சில் நாட்டடின் வளமிக்க வயல்களில் தூவிவிடு.அதோடு என் உயிர் பிரிந்தபின்னும், என் போராட்டத்தை தொடர்ந்து நீ, நடத்தவேண்டும். நெஞ்சை உருக்கும் வண்ணம் மேற் கண்ட வேண்டுகோளை விடுத்தசெண்பகராமனின் உயிர் 1934 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி இவ்வுலகத்தைவிட்டு நீங்கி அமரத்துவம் அடைந்தது.
Subscribe to:
Posts (Atom)