பனித்துளி சங்கர் - கின்னஸ் சாதனை புத்தகம் வரலாறு - Guinness book of world records Panithuli shankar

5

னைத்து உறவுகளுக்கும் வணக்கம் உங்கள் அனைவரையும் நீண்ட பிரிவுக்குப் பின் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் . கடந்த சில மாதங்களாக புதிய படிப்பிற்கான தேர்வு சுமை சற்று அதிகரித்திருந்ததால் தொடர்ச்சியாக பதிவுகள் எதுவும் தர இயலவில்லை . சரி கடந்தவை எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் உங்கள் அனைவரிடமும் தகவல்களைப் பகிர்ந்து பல மாதங்களைக் கடந்துவிட்டேன் . அதை இனி தினம்தோறும் வெளிவரும் பதிவுகள் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறேன் . 

ண்பர்கள் பலர் மெயில் வழியாகவும் தொலைபேசி வழியாகவும் தொடர்புகொண்டு கவிதைகள் பற்றி தங்களில் விமர்சனங்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக பதிவுகள் கொடுத்து நன்றி சொல்ல வேண்டும் என்று ஆசைதான் ஆனால் நேரமின்மையால் அது இயலவில்லை. ஆகவே, இந்த பதிவின் வாயிலாகவே அனைத்து அன்பின் உள்ளங்களுக்கும் எனது ஆயிரமாயிரம் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் .

ரி உறவுகளே..! இனி இன்றைய தகலவளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம் . தகவல் என்றதும் பலருக்கு சலிப்புத் தட்டி விடும் . இதை எதற்கு சொல்கிறேன் என்றால் பல வருடங்களுக்கு முன்பு எனது மனநிலையும் இந்த வார்த்தைக்குள் தான் அடகு வைக்கப்பட்டிருந்தது . ஆனால் இன்று தினமும் தீர்ந்து போகாத சுவாசத்தைபோலவே இந்த தகவல் தாகமும் தொற்றிக் கொண்டுவிட்டது. இன்னும் என்னவெல்லாம் இந்த உலகத்தில் மறைந்து கிடக்கிறது ? இல்லை நம்மைப் போன்றவர்கள் மறந்து கிடக்கிறோமோ ? என்ற கேள்விகளும் சில நேரம் இதயத்தை முற்றுகையிடத் தொடங்கிவிடுகிறது. சரி இவையெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம் . 

லகத்தில் இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை பலரும் சாதிக்கத் துடிக்கும் அதீத ஆர்வத்தை தினம்தோறும் செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த சாதனை வெறும் வார்த்தைகளில் மட்டும் நின்று போகாமல் இந்த உலகத்தில் மனிதன் வாழும் வரை நிலைத்திருக்கும் அளவிற்கு சாதனைகளின் பொக்கிஷமாக ஒரு புத்தகம் உருவாக்கி வைத்தார்கள் நம் முன்னோர்கள் அதுதான் கின்னஸ். நம்மில் அனைவரும் இந்த சாதனை சிகரத்தை எட்ட முடியாமல் போனாலும் இந்த புத்தகம் யாரால் எப்பொழுது உருவாக்கப் பட்டது என்பதைப் பற்றியாவது தெரிந்துகொள்ளலாமே ஆர்வத்தின் முடிவுதான் இந்தப் பதிவு என்று சொல்லலாம் .

கின்னஸ் புத்தகம் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் ஒரு நதிக்கரையில் தோன்றிய ஆச்சரிய சந்தேகத்தில் விதை ஊன்றப்பட்டதுதான் இந்த கின்னஸ் புத்தகம் என்று சொல்லவேண்டும். ஆம் நண்பர்களே..!அயர்லாந்து நாட்டை சேர்ந்த ‘சர்க்யூ பீவர், என்பவர்தான் இந்த கின்னஸ் புத்தகத்தை உருவாக்க வி(தை )டை தேடியவர் என்று சொல்லலாம் . பலருக்கு இவர் யார் என்ற சந்தேகங்களும் வாசிப்புடன் தொடர்ந்துகொண்டே இருந்திருக்கக் கூடும் அதையும் சொல்லிவிடுகிறேன். 
யர்லாந்து நாட்டில் இருந்து கின்னஸ் வாட் என்ற சாலையின் நிர்வாக இயக்குனராக இருந்தவர்தான் இந்த ‘சர்க்யூ பீவர், என்பவர் .இவர் எப்பொழுதும் மாலை நேரத்தில்  வேட்டைக்கு செல்வது வழக்கம் . இப்படித்தான் அன்றையப் பொழுதும் நதிக்கரை ஓரமாக வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அப்பொழுது ஏதோ ஒரு தங்க நிற ஒளியுடன் வானத்தில் வரிசையாக ஒரு கூட்டம் தன்னை நோக்கி வருவதை அறிந்தார் சற்று நேரம் செல்ல செல்ல அவை ஒரு பறவை இனம் என்று அறிந்த பீவர் அந்த பறவைகளில் ஒன்றை வேட்டையாட எண்ணி தனது பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை வெளியில் எடுத்து நிமிர்ந்து பார்த்தபோது அந்த பறவை கூட்டம் பார்வைகளுக்கு எட்டாத தூரத்தில் எங்கோ சென்றிருந்ததாம் . 
ப்போது இவரின் மூலையில் தோன்றிய அந்த சந்தேகம் உலகத்தில் மிகவும் வேகமாக பறந்து செல்லக் கூடிய பறவை இனம் இதுவாகத்தான் இருக்குமோ என்ற ஆச்சரியம்தான் இன்று உலகத்தில் பல உயிர்களையும் பொருட்படுத்தாமல் சாகசங்கள் நிகழ்த்தி இடம்பெறத் துடிக்கும் இந்தக் கின்னஸ் புத்தகத்தை ஏற்படுத்தியது என்றால் பார்த்துகொள்ளுங்கள். அன்று அவரையும் மின்னல் வேகத்தில் கடந்து சென்ற பறவைகளின் பெயர் கோல்டன் ப்ளவர் என்று நான்கு ஆண்டுகளுக்குப் பின்தான் அவருக்கே தெரிய வந்ததாம். தான் ஒருவனாக இந்த ஆச்சரியம் குவிந்த புத்தகத்தை உருவாக்க இயலாது என்று உணர்ந்த பீவர், அவர் உடனே லண்டன் சென்றார். அங்கு அரசாங்கத்திற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கும் நோரிஸ் மைக் வைக்ட்டர், ரோஸ் மைக் வைக்ட்டர் என்ற இரட்டைச் சகோதரர்களைச் சந்தித்தார்.

னது புதிய புத்தக யோசனையை தெரிவித்தார். அவர்களும் ஒத்துழைப்புதர முன்வந்தனர். மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். முதல் கின்னஸ் புத்தகம் 1955ம் ஆண்டு ஆகஸ்ட் 27ல் 198 பக்கங்களுடன் மூவரின் உழைப்பில் பிறந்ததுதான் கின்னஸ் புத்தகம். இன்னதக் கின்னஸ் புத்தகத்தின் சிறப்பைபோலவே இதில் சில மர்மங்களும் மறைந்திருக்கிறது கின்னஸ் புத்தகம் இடையில் 1957, 1959 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும் வெளியிடவில்லை இதற்க்கானக் காரணங்கள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள் .

தொடக்கத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளிவந்த இந்த சாதனை புத்தகம் இன்று நாற்பதுக்கும் மேற்ப்பட்ட மொழிகளில் வெளிவருகிறது. இதில் இன்னும் மிகவும் வியப்பிற்குரிய தகவல் என்னவென்றால் ஐக்கிய அரபு நாடுகளின் போது நூலகங்களில் இருந்து இந்தப் புத்தகங்கள் ஆயிரத்திற்கும் அதிகமாக திருட்டு போகிவிடுவதாக அந்த அரசாங்கங்கள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள் இந்தப் புத்தகத்தில் புதைந்து கிடக்கும் ஆச்சரியத்தின் ஆர்வத்தை .

புத்தாண்டுச் சிறப்புத் தகவல்

BSNL வாடிக்கையாளர்கள் விரும்பும் எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதியை CHOOSE YOUR MOBILE UMBER (CYM ) SCHEME என்ற திட்டத்தை இணைய தளத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் கொடுத்துள்ள 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்களில் இருந்து நமக்கு தேவையான எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 6 வழிகளில் தேடக்கூடிய வகையில் உள்ளது. இதன் மூலம் எளிதாக நமக்கு தேவையான எண்ணை தேர்வு செய்யலாம்.

பின்னர் ரிசர்வ் நெம்பர் என்பதை க்ளிக் செய்வதன் மூலம் நம்முடைய செல்போன் எண்ணிற்கு SMS மூலம் ஒரு PIN எண் அனுப்பப்படுகிறது. அது 72 மணிநேரத்திற்கு செல்லுபடியாகும். அதனை கொண்டு BSNL அலுவலகம் அல்லது Retailers -ஐ அனுகி ஆக்டிவேட் செய்து சிம் வாங்கிடலாம். இதில் கூடுதலாக (SMS) குறுஞ்செய்தி அனுப்பியும் ரீடெய்லர் மூலமும் பதிவு செய்யும் முறையும் உள்ளது. உண்மையிலேயே இது மிகவும் அருமையான திட்டம் மற்றும் சேவையாகும். கூடுதல் விவரங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். புதிய விருப்ப எண்ணை பதிய விரும்புவர்கள் கீழ்க்கண்ட சுட்டிகளை க்ளிக் செய்து பயன்பெறலாம்.

சென்னை   டெலிகாம் சர்க்கல் வாடிக்கையாளர்கள்

தமிழ்நாடு  டெலிகாம் சர்க்கல் வாடிக்கையாளர்கள்

ன்ன உறவுகளே..!இன்றையப் பதிவும் உங்கள் அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நம்புகிறேன். மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . 

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2012ன் நல்வாழ்த்துகள். 

என்றும் நேசமுடன் 
உங்கள் பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் காதல் கவிதைகள் -நிழல்கள் - நினைவுகள் - Tamil Kadhal akavithaigal 09.12.2011

20

ன் வார்த்தைகளை விட 
உன் மௌனத்தை அதிகம் நேசிக்கிறேன் . 
உன் புன்னகையை விட 
உன் கோபத்தை அதிகம் சுவாசிக்கிறேன் . 
என்னை கொலை செய்ய
 உந்தன் ஒரு சொட்டுக் கண்ணீர் போதும் .
என்னக்கு உயிர் கொடுக்க 
உந்தன் சில நொடி புன்னகை போதும் .
உன்னை எண்ணிக்கொண்டே
 தனிமையில் நடப்பதும் 
உன் நினைவுகள் சுமந்துகொண்டே
 கனவினில் மிதப்பதும்  என்னில் 
நிழலெனத் தொடர்கிறது தினம் தினம்  !..


                                                                       
                                                                                     -பனித்துளி சங்கர் 
                                                     
மேலும் வாசிக்க.. >>

Why This Kolaveri Di Full Song Promo Video in HD - ஒய் திஸ் கொலை வெறி டி -3 movie Panithuli shankar songs collection 26 April 2011

2

மேலும் வாசிக்க.. >>

நம்பிக்கை கவிதைகள் - வாழ்வின் ருசி - பனித்துளிசங்கர் Nambikkai kavithaigal in tamil

20



நாற்பது வயதில் சாய்வு நாற்காலி தேடும் 
இந்த காலத்தில்
எழுபது வயதில் 
உழைக்கவேண்டி உதிரம் துடிக்கிறது . 
விற்கக் கூடுமா பலகாரம் என்று எண்ணுவதை விட 
விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் 
வயிற்றுப் பசியிலும் ,
வாழ்க்கையின் ருசியிலும் ஊறிப்போனது. 
வகை வகையாய் பலகாரங்கள் விற்றாலும் 
தினமும் இந்த ஒரிச்சான் வயிறு பசிபோக்க 
கொஞ்சோண்டு கஞ்சிதான் 
நாளையும் இந்த தேகம் உழைக்க ஊன்றுகோல் ! 
                                                         
-பனித்துளி சங்கர்
மேலும் வாசிக்க.. >>

காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar

24



ரு பூகம்பம்


வந்து சென்ற தடமும் ,

உன் சிறு புன்னகை

தந்து சென்ற உணர்வும்

ஒன்றாய் உள்ளத்தில் !


                        -பனித்துளி சங்கர் 

மேலும் வாசிக்க.. >>

மயக்கம் என்ன >Mayakkam enna Watch movie Songs - Naan Sonnadhum Mazhlai - Panithuli shankar songs collection

14




பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
படம்: மயக்கம் என்ன
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: செல்வராகவன் 


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.





மேலும் வாசிக்க.. >>

இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigal

27



டலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!

ன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !

நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!

ன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !

ன் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !

சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!

ன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!

காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....

-பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

ஜோக்ஸ் நகைச்சுவை சிரிப்பு - கடி ஜோக்ஸ் கதைகள் - Tamil Jokes - Comedy -SMS Nagaichuvai - Panithuli shankar

45

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் நீண்ட நாட்களுக்குப்பின் சிரிக்கலாம் வாருங்கள் என்ற பதிவின் வாயிலாக மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தினம் தினம் ஒரே வேலை மூச்சு விடுவதற்குக்கூட நேரம் இல்லை என்று போலியாய் சொல்லிக்கொள்ளும் முகமூடி மனிதர்களுக்கு இந்த சிறிய நகைச்சுவைப் பதிவு சமர்ப்பணம். பொதுவாக சோகங்களை யாரும் பகிர்ந்து கொள்வதில்லை என்றபோதிலும் இப்பொழுதெல்லாம் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்ள மறந்து போய்விடுகிறோம். காரணம் கேட்டால் ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் பதில்கள் தேங்கிக்கிடக்கிறது.
ரி நண்பர்களே..! எதுஎப்படியோ இயன்றவரை தினமும் சிறிது நேரமாவது சிரித்து மகிழுங்கள். நாம் தினமும் ஒரு நிமிடம் சிரிப்பது தினமும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்வதற்கு நிகர் என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. ஆராய்ச்சி சொல்வதையா நம்புவது என்று எண்ணத் தோன்றினாலும் சில நேரம் அந்த ஆராய்ச்சிக்குள் மனிதர்களாகிய நமது யதார்த்த வாழ்க்கை அடகுவைக்கப் பட்டிருப்பதையும் மறுக்க முடியாமல் போய்விடுகிறது. சரி நண்பர்களே இதோ நான் சிரித்து மகிழ்ந்த சில நகைச்சுவை துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். நீங்களும் சிரித்து பகிர்ந்து மகிழுங்கள். நாம் விதைக்கும் புன்னகை நாளை யாரேனும் ஒருவரின் பகிர்வில் மீண்டும் நமக்கு கிடைத்துப்போகலாம்.

**************

லைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..
***************

"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."
***************

டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.

நிஜமாவா?

ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.
****************
பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.
***************** 
வளை நினைத்து

ஒரு கவிதை !
-
-
-
-
எழுதி அவளிடம்

கொடுத்தேன் !

வாங்கி படித்து விட்டு !

கேட்டா பாரு ஒரு கேள்வி ?
-
-
-
-
"அண்ணா.....யாரையாச்சும் லவ் பண்ணுறீங்களா?"
****************
"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?
****************

நாம் நினைப்பெதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன ஆகும்?.
டிராபிக் ஜாம் ஆயிடும் :-)
****************
நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெர

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"
**************
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
***************
ரீட்சைக்கு பிறகு…
மாணவன் 1 : மச்சி நாலு பெஞ்ச் கேப் இருந்தும் எப்டி டா, அசராம பாத்து எழுதுற

மாணவன் 2 : thanks to vaasan eye care !!!

***************

"ஆனாலும் நம்ம தலைவர் இப்படி விதண்டாவாதமா பேசக் கூடாது!"
"அப்படி என்னதான் பேசினார்?"

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடாளுமன்றத்தையே ஹைடெக்

மருத்துவமனையா மாத்துவோம்'னு பேசறாரே!"

****************
 
"அந்த டாக்டர் ஆபரேஷன் பண்றப்ப கூட மயக்க மருந்து யூஸ்

பண்ண மாட்டாரு."

"அடடா, ஆச்சர்யமா இருக்கே!"

"ஆனா, முதல்லேயே ஃபீஸ் எவ்வளவு ஆகும்னு சொல்லிடுவாரு!"
****************

"ஒரு போன் பண்ணிக்கலாமா சிஸ்டர்!"

நான் இந்தக் கோவிலுக்கு நாலு வருஷமா வந்துட்டிருக்கேன்.. தெரியுமா?"

"உங்க வீடு என்ன அவ்வளோ...தூரமா இருக்கு?"

**************
லைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

*************** 
பேஷன்ட்: ஒரு மாசமா உங்ககிட்டே வைத்தியம் பாத்தும் ஒன்னுமே சரியாகாதது வருத்தமா இருக்கு டாக்டர்!
டாக்டர்: என் சர்வீஸுலேயே நான் ஒரு மாசம் வைத்தியம் பாத்து உயிரோட இருக்குறது நீங்க ஒருத்தர் தான். அதை நினச்சு சந்தோஷப்படுங்க..
*****************

ப்பலே மூழ்கினாலும் கன்னத்துல கை வைக்க கூடாது?

ஏன்?

கன்னத்துல கை வைச்சா நீச்சல் அடிக்க முடியாதே...?

*****************

தோ போறானே அவன்தான் என் குடியைக் கெடுத்தவன்…

அடப்பாவி, அப்படி என்ன செஞ்சான்?

பிராந்தியை கிளாஸ்ல ஊத்தி குடிக்கும் போது தட்டி விட்டுட்டான்…!

******************
காதலி : சுண்டல் கார பையன் என்னங்க சொல்லிட்டு போறான்?
காதலன் : இது ஒரு பிகருன்னு, கூப்பிட்டு வந்து உச்சி வெயில்ல பீச்ல உட்கார்ந்திருக்கீங்கேள, இது பிழைப்பான்னு கேட்குறான்.!

******************
நேற்று பக்கத்துக்கு வீட்டு பாபுவை ''ஒன்றுக்கும் லாயக்கில்லைன்னு'' சொன்ன பிறகு எல்லோரும் மூக்கில விரல வைக்கும்படி ஒரு காரியம் செய்துட்டான்.

அப்படி என்ன காரியம் செய்தான்?

நம்ம தெரு செப்டிக் டாங் தொட்டியை குச்சியால கலக்கிட்டான்.

****************
"கேள்வி கேட்டதுக்காகவா மிஸ் உன்னை அடிச்சாங்க?"

"ஆமா, 'உங்களுக்கெல்லாம் யார் வேலை குடுத்தது?'ன்னு கேட்டேன்."

****************

"ன்டா திலீபன், உங்க அப்பா என்ன வேலை செய்றாரு?"

"எங்க அம்மா சொல்ற எல்லா வேலையையும் அவர்தான் செய்வாரு...!"

*****************
"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."

"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"

******************
"பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொன்னார்னு சொன்னியே

யாருக்கு என்னாச்சு?"

"டாக்டருக்குத்தான், இன்னிக்கு ஒரு ஆபரேஷன் கேஸ்கூட அவருக்கு கிடைக்கலையாம்?"
******************
நேசத்துடன்
- பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - விஞ்ஞான வளர்ச்சியை விஞ்சும் அதிசயங்கள் - Panithuli shankar in Amazing news

31

னைவருக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. தினந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலின் வளர்ச்சியினால் சுயமாக சிந்திக்கும் திறனில் இருந்து எழுபது விழுக்காடு, மனிதர்களாகிய நாம் பின்தங்கி இருப்பதாக ஒரு விஞ்ஞான அறிக்கை கூறுகிறது.

ண்மைதான் ஒரு காலத்தில் எந்த அறிவியல் வளர்ச்சியும் இன்றியே இன்று நிகழும் அற்புதங்களை விட பல மடங்கு சாதனைகளை செய்த மனிதன் இன்று தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்குக் கூட இயந்திரங்களை எதிர்நோக்கும் நிலைக்கு இன்றைய மனிதர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

  ஒரு காலத்தில் கடிகாரம் என்றால் என்னவென்றேத் தெரியாமல் இருந்த மனிதன். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நேரத்தை அளக்கவும் கண்காணிக்கவும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போதைய அறுபதற்குரிய முறை நேர அளவீடானது சுமரில் ஏறத்தாழ கி.மு 2000 ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாகும். புராதன எகிப்தியர்கள் ஒரு நாளை இரண்டு 12-மணிநேர காலங்களாகப் பிரித்து, சூரியனின் நகர்வைத் தடமறிவதற்கு பெரிய சதுரத்தூபிகளைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நீர்க் கடிகாரங்களையும் உருவாக்கினார்கள்.இது முதன்முதலில் அநேகமாக அமுன்-ரி எல்லைப்பகுதியில் (Precinct of Amun-Re) பயன்படுத்தப்பட்டு, பின்னர் எகிப்துக்கு வெளியேயும் பயன்படுத்தப்பட்டது. புராதன கிரேக்கர்கள் இவற்றை பெரும்பாலும் பயன்படுத்தினார்கள்.
ன்று கடிகாரம் என்பதை நேரம் பார்ப்பதற்காக என்பதை மறந்து அதை ஒரு அழுகுப் பொருளாகவே மாற்றி அணிந்துகொள்ளத் தொடங்கிவிட்டன. காலையில் உதிக்கும் சூரியனின் ஒவ்வொரு அசைவிலும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு தங்களின் தினசரி வேலைகளை செய்துவந்த மனிதர்கள். இன்று ஆயிரம் அதிநவீன வசதிகள் இருந்தும் தங்களின் நேரங்களை சரியாக பயன்படுத்த மறந்து தடுமாறும் நிலையில் இருக்கிறார்கள் என்பது மட்டும் யாரும் மறுக்க இயலாத உண்மை. சரி இவை ஒரு பக்கம் இருக்கட்டும் இனி நாம் தகவலுக்கு வருவோம்.

ப்படித்தான் ஒரு முறை ஷாங் மன்னர் பரம்பரையானது நீர் வழிந்தோடும் கடிகாரத்தைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இக்கடிகாரங்கள் கி.மு 2000-ம் ஆண்டுகளுக்கு முன்னர் மெசபோடோமியாவிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். பிற புரதான காலங்காட்டும் கருவிகளில் சீனா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்ட மெழுகுவர்த்தி கடிகாரம், இந்தியா மற்றும் திபெத் ஆகிய நாடுகளிலும் ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட டைம்ஸ்டிக் (timestick) மற்றும் நீர்க் கடிகாரம் போல இயங்கிய மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி ஆகியவை உள்ளடங்கும்.
ந்தக் காலத்தின் சூரியனின் தோற்றம் மற்றும் சூரியனின் மறைவை வைத்து மட்டும்தான் நேரத்தைக் கணித்தார்களா நமது முன்னோர்கள் என்று பார்த்தால் அதையும் கடந்து பலப் பறவை இனங்கள் எழுப்பும் ஒலிகளைப் பயன்படுத்தியும் நேரத்தை துல்லியமாக கணித்திருக்கிறார்கள். நமக்கு தெரிந்த நமது முன்னோர்கள் சேவல் கூவும் சத்தத்தை வைத்து விடியலின் நேரத்தைக் கணக்கிடுவார்கள் என்பதை இன்றும் கிராமப்புறங்களில் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இந்த சேவல் அல்லாது மற்ற எந்தப் பறவை மனிதனின் நேர கணக்கீட்டிற்கு உதவியது என்பதையும் பார்த்துவிடலாம்.
டிகாரம் பயன்படுத்தத் தொடங்கிய ஆரம்பகால கடிகாரங்கள் சூரியன் ஏற்படுத்துகின்ற நிழல்களைச் சார்ந்திருந்தன. ஆகவே மேகமூட்டமான வானிலையில் அல்லது இரவில் இவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. மேலும், பருவகாலம் மாறும்போது மீண்டும் அளவுத்திருத்தம் செய்யவேண்டியும் இருந்தது. சுழற்சி ஆற்றலை விட்டு விட்டு நிகழும் அசைவுகளாக மாற்றிய, நீரினால் இயங்கும் ஒழுங்படுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறையுடன் ஆரம்பகாலத்திலிருந்த கடிகாரமானது, கி.மு மூன்றாம் நூற்றாண்டு புராதன கிரீஸ் காலத்துக்குரியதாகும்.
பின்னர் சீனப் பொறியாளர்கள் பாதரசத்தினால் இயங்கும் ஒழுங்குபடுத்தும் இயந்திர அமைப்பு பொறிமுறைகள் ஒன்றாய் சேர்ந்திருக்கின்ற கடிகாரங்களை பத்தாம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். இதையடுத்து 11 ஆம் நூற்றாண்டில் பற்சக்கர அமைப்புகள் மற்றும் பாரங்கள் ஆகியவற்றால் இயக்கப்படும் நீர்க் கடிகாரங்களை அரபிய பொறியாளர்கள் கண்டுபிடித்தனர்.அதற்குப்பின் ஏற்பட்ட அறிவியலின் வளர்ச்சியால் இன்று கடிகாரத்தில் வளர்ச்சி பற்றிதான் நமக்கு நன்றாகத் தெரியுமே...!!
பின் வரும் பறவைகளின் சத்தங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் காலையில் வேலைக்கு செல்வதற்கு நேரத்தை கணக்கிட மிகவும் உதவியாக இன்றும் பயன்படுகிறது என்றால் பார்த்துகொள்ளுங்கள்.
கரிச்சான் குருவி சத்தமிடும் நேரம் < >   3 மணி.
செம்போத்து .சத்தமிடும் நேரம் < >  3-30 மணி

குயில் கூவும்  நேரம் < >    4-00 மணி.

சேவல் கூவும் நேரம் < >    4-30 மணி.

காகம் கரையும்  நேரம் < > 5-00 மணி.

மீன் கொத்தி.சத்தமிடும் நேரம் < >  6-00 மணி.
ன்ன நண்பர்களே..! இனி கிராமப் புறங்களில் வசிக்கும் ஒவ்வொருவரும் மேலே குறிப்பிட்டு இருக்கும் பறவைகளில் ஏதேனும் ஒன்றின் சத்தத்தை காலை நேரத்தில் நீங்கள் கேட்க நேர்ந்தால் நேரத்தை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஆயிரம் அறிவியல் வளர்ச்சி வந்தாலும் இதுபோன்ற யதார்த்தங்களுக்கு நிகர் இந்த யதார்த்தங்களே என்பது மட்டும் திண்ணம்.

ரி நண்பர்களே..! நேரம் இல்லாததால் நேரத்தை கணக்கிடும் ஆதிகால முறைப் பற்றி எழுதிவிட்டேன் பிடித்து இருந்தால் கருத்துக்களை பகிர்ந்துவிட்டு செல்லுங்கள். எனக்கும் கிரிக்கெட் விளையாட நேரம் ஆகிடுச்சு நாளை பார்க்கலாம்.  
* * * * * * *

நேசத்துடன் 
பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>

காதல் அந்த நாள் ஞாபகம் - Panithuli shankar Kadhal Kavithaigal - காதல் கவிதைகள்

31


ரு சிறைபட்ட பறவை ஒன்றின் 
சுதந்திரத் தாகமாய் 
உன் உடன் சில நிமிடங்கள் மட்டுமே 
பறக்கத் துடிக்கிறேன் . 
நீளும் உன் நினைவுகளின் தூரத்தில் 
நீ இன்றி நான் வாழ்வதும் 
உயிர் இன்றி இந்த உடல் மண்ணில்
வீழ்வதும் ஒன்றே !

புகைப்படத்திற்கு நன்றி - www.shreezphotoz.com

               -  பனித்துளி சங்கர் 



மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - பாகிஸ்தான் பெயருக்கான விளக்கம் - Explanation for the name of Pakistan - Panithuli shankar

32

னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு புதியத் தகவலின் வாயிலாக சந்திப்பதில் மகிழ்ச்சி. உலகத்தில் உள்ள உயிருள்ள மனிதன் முதல் உயிரற்ற பொருள்கள் வரை ஒவ்வொன்றிற்கும் இருக்கும் பெயர்களுக்கு ஏதேனும் ஒரு காரணம் இருக்கக்கூடும். அதுபோல்தான் கிராமம், வட்டம், மாவட்டம், மாநிலம், நாடுகள் என்று சொல்லிக் கொண்டேப் போகலாம்.

னால் உலகத்தில் ஒரு நாட்டிற்கு வைக்கப் பட்டிருக்கும் பெயருக்கானக் காரணங்கள் சற்று வித்தியாசமானது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஒவ்வொரு எழுத்திற்கும் ஒரு இடத்தின் பெயரைக் கொண்டு ஒரு நாட்டின் பெயரை உருவாக்கி இருப்பது மிகவும் வியப்பாகத்தான் இருக்கிறது. சரி அப்படி வித்தியாசமான பெயர் கொண்ட அந்த நாடு எது என்றால் ஒருகாலத்தில் நம்முடன் ஒன்றாக மகிழ்ந்து குலாவிய பக்கத்து நாடான பாகிஸ்தான் - தான் அந்த வித்தியாச பெயர் கொண்ட நாடு.  
ம்மில் எத்தனை பேருக்கு பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் தெரியும் என்று தெரியவில்லை. தெரியாதவர்கள் இன்றுமுதல் அதையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத்தான்   இந்தப் பதிவு . சரி இனி நாம் பாகிஸ்தான் என்றால் என்னவென்றுப் பார்க்கலாம்.

P A K I S T A N & பாகிஸ்தான்

P  - என்பது (பாகிஸ்தானில் உள்ள) PANJAB -ல் உள்ள முதல் எழுத்து.
A - என்பது AFGHANI எல்லைப் பிரிவு மக்கள்
K - என்பது காஷ்மீர்
I  - என்பது  INDUS RIVER.
S-  என்பது SIND.
TAN என்பது -BALUCHISTAN ல் உள்ள கடைசி மூன்று எழுத்துக்கள் .
ன்ன நண்பர்களே..!! இன்று பாகிஸ்தான் என்ற பெயருக்கான விளக்கம் பலருக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு புதுமையானத் தகவலுடன் உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன்.

நேசத்துடன்
-பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

மரம் தின்ற மனிதர்கள் - பனித்துளி சங்கர் கவிதைகள் - Maram thinra manithargal Kavithaigal

28

ளமையும் இல்லை
இலைகளும் இல்லை
இதயம் இளைப்பாற
மரங்களும் இல்லை
மனிதன் சுயநலம் நிலைத்திட
மரம் கொன்றானோ
.ஒருவேளை கானல் நீர் கொண்டு
இனி வரும்
அவன் தாகம் தீர்ப்பானோ....!????

னிதன் மகிழ்ந்து வாழ
அனைத்தும் தந்த மரங்களுக்கு
மனிதன் தந்த
பரிசு மரண தண்டனை..!

வெட்டப்படும் மரங்களின்
அழுகை சத்தம்
உயிர் வரை பாய்கிறது.....
தரைகளில் காய்ந்து கிடக்கும்
ஒவ்வொரு இலை சருகிலும்
காய்ந்து போன
குருதி வாசம் நாசி எட்டுகிறது.....

த்தனை பறவைகளின்
வீடுகள் சிதைத்தோம்....
எத்தனை பறவைக் குழந்தைகளின்
தாய்பால் பறித்தோம்......

வித விதமாய்
தினம் தினம் புதிது புதிதாய்
சிரித்த எத்தனை பூக்களின்
புன்னகைகளில்
பூகம்பம் விதைத்தோம்....

விதை ஊன்றி
உயிர் கொடுக்க வேண்டிய
மரங்களுக்கு
விதவை பட்டம் கொடுத்து
உடனே பாடையில் ஏற்றும்
பெருமை இந்த மகத்தான
மனித குலத்திற்கு மட்டுமே
உரிய சிறப்போ...!?
நாம் பூகம்பம் கண்டால்
வலி என்கிறோம்
பூக்கள் காயம் கண்டால்
அதன் விதி என்கிறோம்......
சிந்திக்கவும் பேசவும் தெரிந்த
மனூட அரக்கர்களுக்கே உரிய
சுயநலம்தான் இந்த மரக்கொலைகளோ...!?

சிறு நரை முடி உதிர்ந்தாலே
ஆயிரம் மருத்துவம் தேடும் நாம்.....
தினம் மரங்களின்
உடல்களை அறுப்பது ஏன்...!?

நேற்று என் முன்னோர்
நட்ட மரங்கள்
இன்றும் நாங்கள் வாழ
சுவாசம் தருகிறது....
நாளை வரும்
என் தலைமுறை சுவாசிக்க
எந்த கடைகளில் சுவாசம் வேண்டி
காத்துக் கிடப்பார்களோ....!?

ண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உள்ளுக்குள் நொறுங்கிப்
போகிறது இதயம் !.
* * * * * * *
- பனித்துளி சங்கர்.



மேலும் வாசிக்க.. >>

சிரிப்பு விற்பவன் - Panithuli shankar tamil kadi jokes - நகைச்சுவை -ஜோக்ஸ்- கடி -காமெடி

24


னைத்து உறவுகளுக்கும் வணக்கம். உங்கள் அனைவரையும் மீண்டும் ஒரு நகைச்சுவை பதிவில் சந்திப்பதில் மகிழ்ச்சி. மனிதன் பிறர் சொல்லி செய்யாத செயல்களில் தினமும் அரை மணி நேரம் அவனின் சிரிப்பும் இருக்கவேண்டும் என்று ஒரு புதுமையான ஆய்வின் முடிவு ஒன்று சொல்கிறது. இது வரை உலகத்தில் நிகழாத புதுமையாய் சிரிப்பதற்கென்றே ஒரு மருத்துவத் துறையை அமெரிக்காவில் துவங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துகொள்ளுங்கள். 

ரு மனிதன் தினமும் சராசரி அரை மணி நேரம் சிரித்து மகிழ்வதால் அவனது உடலில் ஏற்படக்கூடிய எழுபது சதவீத நோய்களுக்கு இந்த அரை மணி நேர சிரிப்பே சிறந்த தடுப்பு மருந்தா மாறிவிடும் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. எதோ ஒரு ஆய்வில் சொல்லக் கூடிய முடிவிற்காக இல்லை என்றாலும் நாம் தினமும் சில நிமிடங்கள் சிரிக்கும் நேரங்களில் நமது உடலில் பல மாற்றங்கள் ஏற்படுவதை நாமே உணரலாம். 

வ்வளவுதான் நாகரிகத்தின் உச்சத்திற்கும், சுத்தத்தின் உயரத்திற்கும் அறிவியல் வளர்ச்சி நம்மை அழைத்து சென்றாலும் உணர்வுகளின் உற்சாகத்திற்கு மகிழ்ச்சி என்ற ஒன்றைத் தவிர அதற்கு நிகரான மருந்தொன்று இந்த உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று ஆராய்ச்சிகளின் ஆய்வுக் குழு கூறுகிறது. சரி நண்பர்களே..!! இந்த ஆராய்ச்சிகள் ஒரு பக்கம் இருக்கட்டும் 
ன்னால் தினமும் நகைச்சுவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாவிட்டாலும் வாரத்தில் ஒரு பதிவிலேனும் சில நகைச்சுவை துனுக்களுடன் உங்களுடன் பகிர்ந்து மகிழ்வதில் ஒரு மாபெரும் சந்தோசம். இதோ இன்றைய சில நகைச்சுவை பகிர்வுகள். இயன்றவரை நகைச்சுவைகளை எங்கு வாசித்தாலும் சிரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள். நகைச்சுவைகள் என்பது சிரிப்பதற்காக மட்டுமேத் தவிர ஆராய்ச்சி செய்வதற்காக இல்லை. 

வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது 
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம் 
அது திறந்து கொள்கிறது 
வாழ்வின்மீது இயற்கை தெளித்த 
வாசனைத் தைலம் சிரிப்பு 
எந்த உதடும் பேசத் தெரிந்த 
சர்வதேச மொழி சிரிப்பு.
என்ற கவிஞர் வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்தில் வருகின்றன .

யன்ற வரை 
இதழ்கள் பூத்திருங்கள் 
உங்களின் இதயங்கள் சிறகுகலாகட்டும் . 
நீங்கள் சிரிக்க நேர்ந்தால் 
அதில் இன்னும் பல
இதழ்களின் மொட்டுக்கள் மலரக் கூடும் .
புன்னகையும் பூமியில் சுற்றித் தெரியும் 
தென்றலும் ஒன்றுதான் 
நாம் சுவாசிக்கும் தென்றலும் , 
நம்மை சுவாசிக்கும் சிரிப்பும் 
எப்போதும் இந்த உயிர் நீட்டிக்கும் 
-பனித்துளி சங்கர் 
* * * * * * *
புது கணவன்: என் மனைவி சமையலறை பக்கமே போயிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன்!

நண்பன்: எப்படி சொல்கிறாய்?

புது கணவன்: இன்று காலை அவள் முட்டையை சோடா ஓபனரை வைத்து திறக்க முயன்று கொண்டிருந்தாளே...!
* * * * * * *
“டேம்ல வேலை பார்க்கிறவரோட பெண்ணைக் கட்டினது பெரிய வம்பாப் போச்சுன்னு சொல்றீயே! ஏன்?” “தினமும் ஐந்தாறு கன அடி கண்ணீர் விடுறா?” 
* * * * * * *
சிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூங்கினான். இது என்ன காலம்? மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்..!
* * * * * * *
“அந்த லைட் மியூஸிக் பாடகருக்கு இன்னும் பணம் தரலைன்னு எப்படிச் சொல்றே?” “அதான் கொக்கு நறநற கோழி நறநற…ன்னு பாடுறாரே!”
* * * * * * *
"எதுக்குய்யா உன் மனைவியைத் தூக்கி வீட்டுக்கு வெளியே எறிந்தாய்?"
"ஒரு மகான்தான் கவலையைத் தூக்கி எறி வாழ்க்கையில் முன்னேறலாம்னு சொன்னார்."
* * * * * * *
“தேங்காயிலும் தண்ணீர் இருக்கு……..பூமியிலும் தண்ணீர் இருக்கு……” “அதுக்காக தேங்காயிலதான் போர் போட முடியுமா……. இல்ல பூமியிலதான் ஸ்ட்ரா போட முடியுமா…….இத சொன்னா நம்மள லூசுனு சொல்லுவான்…."அரசியல்வாதியை மாப்பிள்ளையாக்கியது தப்பாப் போச்சு!""ஏன்?""கல்யாணத்தில் பொண்ணு போட்ட மாலையைக் கழற்றி கூட்டத்தில் வீசுறாரு!"
* * * * * * *
ண்ணா முதலமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தது.

ஒரு உறுப்பினர், “பேருந்தில், யாகாவாராயினும் நாகாக்க என்று எழுதப்பட்டிருக்கிறதே, யாருடைய நாக்கு காக்கப்பட வேண்டும்? பேருந்தின் நடத்துனரா? ஓட்டுனரா? இல்லை பயணிகளா?” என்று முதலமைச்சரான அண்ணாவைப் பார்த்துக் கேட்டார்.

உடனே அண்ணா, “ யாகாவாராயினும் நாகாக்க என்ற குறள், யார் யாருக்கு நாக்கு இருக்கிறதோ அவர்கள் அனைவருக்குமே எழுதப்பட்டுள்ளது” என்றார்.
* * * * * * *
நேசத்துடன் 
-பனித்துளி சங்கர்.
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

பசி கவிதைகள் > சிதறும் உயிர்கள் - Panithuli shankar varumai kavithaigal in tamil

24


ணவுகள் எங்கே


 எங்களின் உயிர்களும் அங்கே.
உடை இன்றி பிறந்தோம்
 ஏனோ இந்த உடலின்றி பிறக்க மறந்தோம்..!?

 அழியாத இந்த மண்ணைக்
கட்டியாளத் துடிக்கும் மானுடன்
 ஏனோ நாளை அழியப்போகும்  
  மனிதனை மறந்துபோனான்..!

தேடிக் கிடைபதற்கும்,
உழைத்து உண்பதற்கும்
ஏதும் இல்லாத தூரங்கள்
பார்வைகளில் நிழலாடுகிறது.
  சின்னஞ் சிறு குழந்தையில்
சிறுநீர் கழித்து வாழ்ந்த
என் மக்கள் இன்று கண்முன்
சிறுநீர் குடித்து தாகம் தீர்ப்பதா...!?

பற்றி எரியும் பசியில்
கொன்று உண்பதற்கு என்னை போன்ற
பசிகொண்ட மனிதனைத் தவிர
எதிரே ஒன்றும் இல்லை..!

உணவும்
, உடையும், இருப்பிடமும்தான்,
எங்களின் கனவாகிப் போனது
இந்த மரணம் கூடவா
எங்களின் வாழ்வில்
கானல் நீராகிப்போனது !?

கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.

பசி  எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!

நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!  

உண்ண உணவின்றி மறித்துபோகும் 
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
  
          
                                           - பனித்துளி சங்கர் 



மேலும் வாசிக்க.. >>