- Home
- Archive For 2021
புதிய தமிழ் கவிதைகள் - உறவுகள் - New Best Tamil quotes 2021 - Panithuli shankar
குறிச்சொல் Best Tamil quotes, KAVITHAIGAL, Love POEMS, New Best Tamil quotes 2021, Panithuli shankar quotes, Tamil Best Poems, Tamil Kavithaigal 2021, கவிதைகள்
புதிய தமிழ் காதல் கவிதைகள் 2021 - தனிமை - Panithuli shankar New Kavithai - Thanimai 2021
குறிச்சொல் KAVITHAIGAL, Love Kavithai in Tamil, New Tamil kavithai, Panithuli shankar Kavithaigal 2021, Tamil Kavithai 2021, Thanimai Kavithai, புதிய தமிழ் கவிதைகள்
பனித்துளி சங்கர் கவிதைகள் - வாழ்க்கை - Panithuli shankar Tamil Kavithai - Valkai
குறிச்சொல் .KAVITHAIGAL, Panithuli shankar Kavithai 2021, Tamil Kavithaigal, Tamil New Kavithai 2021, Tamil New poems, Valkai Kavithai, தமிழ் கவிதைகள், புதிய கவிதைகள்
பனித்துளி சங்கர் - முதுமை கவிதை - Tamil Kavithai muthumai - Panithuli shankar 2021
குறிச்சொல் Muthumai Kavithai, Old Man Poem, Tamil Kavithai 2021, தமிழ் கவிதைகள், பனித்துளி சங்கர் கவிதை 2021, முதுமை கவிதை
பனித்துளி சங்கரின் காதல் சிலுவைகள் - தமிழ் கவிதை
குறிச்சொல் Kavithaigal 2021, Tamil Kavithaigal, கவிதைகள், காதல் கவிதை, தமிழ் கவிதைகள்
திறந்த இதயத்தில்
உந்தன் அனுமதி இன்றி
என் காதலை பூட்டியவள் நான்தான் .
உன் நினைவுகளின் வெப்பத்தில்
குளிர் காய்கிறேன் என்று
நடுக்கத்துடன் சொன்னவளும் நான்தான் .
நீ
பார்க்கும்போது
உன் விழிகளுக்கு காட்சிகளாய்
நான் இருப்பேன் என்றேன் .
நீ பேசும்பொழுது
உனது வாக்கியத்திற்கு வார்த்தைகள்
நான் தொடுப்பேன் என்றேன் ....
உன் நிஜவிரல் பிடிக்கும் வரை
தினம் உன் நினைவுகளின்
விரல் பிடித்து
நடப்பேன் என்றேன்.
இரவினில் உன் இமைகள் மூட மறுக்கும்
நேரத்தில் எல்லாம்
என் நினைவுகள்
உன்னை தாலாட்டும் என்றேன் ....
நமது திருமணத்தில்
வானம் இசை அமைக்க
இடிகள் இசைக்கருவிகளாகும் என்று
சொன்னவளும் நான்தான்,
மேகங்கள் அட்சதை தூவ
நட்சத்திரங்கள் மலர்களாகும் என்று
சொன்னவளும் நான்தான் ,
நம் காதல் பொய்த்தால்
கடல் நீர் வற்றிப்போகும் ,
மழைத்துளி அமிலமாகும் ,
ஒற்றைத் தீக்குச்சியில்
இந்த உடல் உனக்குமுன்
உடன் கட்டை ஏறும் என்று
சொன்னவளும் நான்தான் ....
நம்மை பிரிக்க நேர்ந்தால்
இருவரையும் ஒன்றாய்
சிக்கன சிலுவையில்
அறைந்துக் கொல்லட்டும் என்றேன் ....
உன்னை பிரிந்து சுவாசிக்க மாட்டேன்.
ஒருவேளை பிரிய நேர்ந்தால்
இந்த சுவாசமே வேண்டாம் என்றேன்
இவை அனைத்தையும் உச்சரித்த
இதே உதடுகளால்தான்
இன்று உன் இதயத்தை தொலைக்கப் போகும்
இந்த வார்த்தை ஈட்டிகளையும் வீசுகிறது .....
என் வீட்டில் அடுப்பெரிக்க
இன்று நாம் காதல் விறகாகிப்போனது .
என்னை மன்னிக்கவேண்டாம்
என்னை மறந்து விடுங்கள் !
உன்னை நேசித்தது நிஜம் !
தினம் உன் நினைவுகளிலே
சுவாசித்தது நிஜம் !
காதலில் இணைவது போன்ற
கதைகள் கேட்ட நான்
ஏனோ பிரிவது போன்ற கதைகள்
கேட்க மறந்துவிட்டேன்....
காதல் செய்வதற்க்கு
நாம் இருவர் போதும் என்றேன்
இன்றுதான் அது இந்தியக் காதலில்
கண் மூடி சொல்லும் பொய் என்று உணர்ந்தேன் ...
காதலுக்கு
கட்டுத்தரிக்கூட கிடையாது
ஆனால்
கல்யாணத்திற்கு கட்டுத்தரி மட்டும் அல்ல
கடிவாளமும் சேர்ந்து வந்துவிடுகிறது ....
பறப்பதற்கு கற்றுத் தந்தாய்
என் காதலா .
என் சிறகுகளில் கடிவாளம்
இறுக்கப்பட்டு இருப்பதை யார் அறிவாரோ !...
குழந்தைகளின் பசியைவிட
சாராயதின் ருசியை அதிகம் அறிந்த
என் தந்தை !
ரேசன் கடையில் தந்த சேலையின்
இளமை தொலைந்தும் இன்னும்
கிழிந்த போத்தலை தைத்து
மானம் காக்க போராடும் என் தாய் !
தான் பூப்பெய்த செய்திகூட தெரியாது
ஆவேசமாய் அடுப்பூதும் என் தங்கை!
ஓசியில் பக்கத்து வீட்டில் கருப்பு வெள்ளைப்படம்
பார்த்த கனவுகளை என் வீட்டிலும்
நிஜமாக்கத் துடிக்கும் என் தம்பி !
இத்தனை பேருக்கும் மொத்தமாய் மாதம்,
மாதம் செயற்கை சுவாசம் கொடுக்கும்
ஆக்சிஜன் குடுவையாய் நான் மட்டும்.
இத்தனை கடிவாளங்களின் ஒரு முனை என் கழுத்திலும்
மறுமுனை அவர்களின் கழுத்திலும்
சுருக்குக் கயிராய் பிணைக்கப்பட்டுள்ளது
.
எப்படி ஓடிவருவேன் காதலா !!???
இத்தனை உயிர்களை கொன்ற
கொலைகாரி என்றப் பட்டத்துடன்
உன் மனைவியாக !
உன்னை காதலித்து ஏமாற்றியவளாக
இருந்துவிட்டுப் போகிறேன் இந்த
ஜென்மத்தில் மட்டும் மன்னித்துவிடுங்கள்,
உங்கள் நினைவுகளை
மறக்க முடியாத இவளை மறந்துவிடுங்கள்........
- கவிஞர் பனித்துளி சங்கர்.
நாளை 21.04.2021 கடைசி தேதி - மெட்ராஸ் உயா்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க
குறிச்சொல் அலுவலக உதவியாளா், காவலாளி, சமையல்காரர், சோப்தாா், ரூம் பாய், வாட்டா்மேன்
மெட்ராஸ் உயா்நீதிமன்றத்தில் காலியாகவுள்ள பணியிடங்கள் விவரம்
- சோப்தாா் (Chobdar) - 40
- அலுவலக உதவியாளா் (Office Assistant) - 310
- சமையல்காரர் (Cook) - 1
- வாட்டா்மேன் (Waterman) - 1
- ரூம் பாய் (Room Boy) - 4
- காவலாளி (Watchman) - 3
- புத்தக மீட்டமைப்பாளர் (Book Restorer) - 2
- நூலக உதவியாளர் (Liberary Attendant) - 6
கல்வித் தகுதி - 8ம் வகுப்பு தோ்ச்சி
சம்பள ஏற்றமுறை (திருத்தியமைக்கப்பட்டது) ரூ.15,700 - 50,000
வயது வரம்பு
- பாெதுப்பிாிவினா் 18 முதல் 30 வயதுக்குள்
- இடஒதுக்கீட்டுப் பிாிவினா் 18 முதல் 35 வயதுக்குள்
விண்ணப்பக் கட்டணம்
பாெதுப்பிாிவினா் ரூபாய் 500
ஆதிதிராவிடா், பழங்குடியினா், அனைத்துப் பிாிவு மாற்றுத் திறனாளிகள் - முழு கட்டண விலக்கு
மேற்படி வேலைவாய்ப்பு பதவிகளுக்கு இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பொதுவான அறிவுரைகள் காண இங்கு கிளிக் செய்யவும்
அறிவிப்பு தமிழில் காண இங்கு கிளிக் செய்யவும்
அறிவிப்பு ஆங்கிலத்தில் காண இங்கு கிளிக் செய்யவும்
விண்ணப்பிக்க Madras High Court Official Website
Please Click Here for Login (Already Registered) / Fresh Registration and Apply Online for the Posts of Chobdar, Office Assistant, Cook, Waterman, Room Boy, Watchman, Book Restorer and Library Attendant / Forgot Password
********
Online Application for the posts of Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman and Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant cum full time Watchman, Scavenger - in various Judicial Districts in the state of TamilNadu- 2021
குறிச்சொல் Cleaner, Copyist Attender, District Court, Full time Watchman, Gardener, Madras High Court, Masalchi, Office Assistant, Sanitary worker, Scavenger, Sweeper, Watchman, Waterman, Waterwomen
Notifications for various posts in the subordinate courts in Tamil Nadu
Important DatesDate of Notification | 18-04-2021 |
Last date for Registration, payment of Registration Fee, submission of Online Application and for remittance of Examination Fee (payments to be made only through online. No offline payment permitted) | 06-06-2021 |
NAME OF THE JUDICIAL DISTRICTS
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனித்துளி சங்கரின் 2021 ஆம் ஆண்டின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் பனித்துளி சங்கரின் 2021 ஆம் ஆண்டின் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . எல்லா வளமும் பெற்று அனைவரும் எந்த குறையும் இன்றி அனைவரும்
இன்புற வாழவேண்டும் ....