Tamil Kavithaigal - தமிழ் கவிதைகள் - கவிஞர் பனித்துளி சங்கர் - முதியோர் இல்லம் கவிதைகள்

3



முதியோர் இல்லம் கவிதைகள் !


மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் / Kadhal kavithaigal - அலை மோதும் ஞாபகங்கள்

18





னத்துப்போன
நினைவுகளின் உச்சமாய்
கடற்கரை எங்கும்
 காத்துக் கிடக்கிறேன் .

ன் பாதங்கள் பதிந்த
ஒவ்வொரு இடமும் இப்போது
பூத்துக் கிடக்கிறது ஆனால்
உன் பார்வைகள் பதிந்த
நான் மட்டும்தான் இன்னும்
உனக்காகக் காத்துகிடக்கிறேன் ..!

னவுகளின் கரையோரம்
கடல் அலைகலேன ஓயாமல்
வந்து வந்து செல்கிறது
 உன் ஞாபகங்கள் ..!

டைந்து போவதற்கும்
உடைத்துப் பார்ப்பதற்கும்
விளையாட்டுப் பொருளென
மாறிப்போனதோ இந்த இதயம்....!?

ழ நினைத்தும்
கண்ணீர் இல்லாத விழிகள்..!
உளற நினைத்தும்
வார்த்தைகள் இல்லாத உதடுகள்..!
இறந்துபோக நினைத்தும் இன்னும்
உன்னை மறக்காத  இதயம்  என
 ஒவ்வொரு நொடியும்
போலியாய் கசிகிறது
உன் நினைவுகளில்....!!!
                        
                          - ❤ பனித்துளிசங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

உனக்கு முன் + எனக்கு பின் = ''காதல்'' - பனித்துளிசங்கர் Tamil Kadhal Kavithaigal SMS

17


யார் நீ
இந்த உலகம் இன்று
புதிதாய் தெரிகிறது எனக்கு .
கோடிப் பூக்களின் அழகை
உந்தன் ஒற்றை
 புன்னகையில் வைத்த
பிரம்மன் ரசனை மிகுந்தவன்தான் !


உனக்கு முன் பிறந்தேன் நான்
 எனக்கு பின் பிறந்தாய் நீ
ஆனால் நம் இருவருக்கும்
 ஒன்றாய் பிறந்தது காதல் ! 

                                
                                              ❤ பனித்துளி சங்கர் ❤

மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் - சற்று முன் ஒரு காதல் - Panithulishankar Tamil Love poem 09 May 2011

14


சாலையோர மரமாய்
சலசலப்புடன் இங்கும் அங்கும்
 பார்த்த படி நான் !.
நான் இமைத்து முடிப்பதற்குள் பிரம்மன்
 படைத்து அனுப்பினானோ இவளை !? 
சற்றுமுன் பார்த்த முகம்
 யார் என்று தெரியவில்லை
வெகு நேரமாக திரும்பாமல் சென்றவள்
மறைந்துபோகுமுன் ஏனோ
திரும்பிப் பார்த்து சிறு
 புன்னகை வீசி சென்றாள்.,
 குழப்பத்தில் குதிக்கிறது மனசு .
காதல் ஒரு முறைதான் பூக்கும்
என்று யார் சொன்னது   !???


                               ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

தெருவோர நட்சத்திரங்கள் - கவிதைகள் -பனித்துளிசங்கர் - Star kavithaigal 01 Jun 201112

26




நான்
ஒரு தெருவோரக் குப்பையில்
வீசப்பிட்டிருக்கிறேன் 
ஆனால்
எனது பார்வைகள் நட்சத்திரங்களில் ......
எங்கிருப்பினும் ரசிப்பேன் இந்த உலகை .


                                                                     ❤ பனித்துளி சங்கர் ❤
மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் கவிதைகள் : காதல் பிம்பங்கள் (02+05+2011)

26

ரவின் திரை எங்கும்
கருப்பு பிம்பங்களின் கால் தடங்கள்
தேகம் மட்டுமே நிலையாய் இருக்கிறது...
ஞாபகங்கள் எல்லாம் எங்கோ சிதறிக்கிடக்கிறது..!
கபனித்துளி சங்கர் கவிதைகள்
ன்னத்தில் கை வைத்து .
உந்தன் ஞாபகங்களின்
விரல் பிடித்த
அந்த பொடி நடை
இந்த உலகம் மறக்க செய்தது .

ப்போதேனும் எட்டிப் பார்க்கும்
எதார்த்த  உரையாடல்களில் எல்லாம்
 அனுமதியின்றியே ஒட்டிக்கொள்கிறது
உன்னைப் பற்றிய ஞாபகங்கள் .

தழ்கள் சிரிப்பது
மட்டும்தான் சந்தோசமா
முதல் முறை
மொத்த தேகமும் உந்தன்
ஒற்றைப் பார்வையில்
வெட்கம் கண்டதை
எப்படி சொல்வேன் !?

ல இரவுகள் உறங்கிப் போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ஏமாந்ததை
சொல்லி அழும் !

உனது முகம் பார்க்க காத்திருந்து
 விரல் நகம் கடித்தேவா
 கழிந்து போவது பொழுதுகள் !?

ருவம்  இல்லாத
 உணர்வுகளின் தேடலாய்
விழி போகும் தூரம் எங்கும் நீள்கிறது
உன்னைப் பற்றியக் கற்பனைகள் ..

ண்கள் பரிமாறி, காதல் அரங்கேற்றி
இதயம் தொலைத்ததில் என்னுள்
சுமக்க முடியாத சுமையாகிபோனது
இந்த மவுனம் தாங்கிய
தனிமை மட்டுமே...!!


மேலும் வாசிக்க.. >>

கவிதை எழுதும் ஞாபகங்கள் : Panithuli Shankar Kavithai Eluthum Gnabagangal 25+04+2011

25

 மறந்து போனதாய்
நினைக்கும் ஞாபகங்கள்
எல்லாம்
மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த பேனாவின் இதழ்கொண்டு...

மை தீரும் பொழுதெல்லாம்
 உள்ளம் துடிக்கிறது
அதில் உதிரம் ஊற்றி நிரப்ப...

தீர்ந்து போகாத
உன் நினைவுகள் ஊற்றி
நிரப்பிவிட்டேன்

இதோ மெல்லக்
கசியத் தொடங்கிவிட்டது
நம் நேற்றைய ஞாபகங்கள்
இந்த வெற்றுக் காகிதங்களில்
கவிதையென......!!


மேலும் வாசிக்க.. >>

காதல் கவிதைகள் - கிழிக்க இயலாத நினைவுகள் > Panithuli shankar Kadhal Haiku Kavitai

0

உன்னிடம் சொல்ல
மறந்த வார்த்தைகளை ,
இன்று
என் பேனாவால்
எழுதி கிழிக்கிறேன் .........

ஆனால்
உன்னிடம் சொல்லி
மறந்த வார்த்தைகளை
மட்டும்
என் பேனா எழுதி
கிழிக்க மறுப்பதேன் ???????

வேறொன்றும் இல்லை
உன் நினைவுகள்தானடி
அந்த கிலிக்கமுடியாத
வார்த்தைகள் !...

மேலும் வாசிக்க.. >>