காதல் புன்னகை - Kadhal Kavithaigal - பனித்துளி சங்கர் -Tamil Haiku SMS காதல் கவிதைகள் Panithuli shankar

24



ரு பூகம்பம்


வந்து சென்ற தடமும் ,

உன் சிறு புன்னகை

தந்து சென்ற உணர்வும்

ஒன்றாய் உள்ளத்தில் !


                        -பனித்துளி சங்கர் 

மேலும் வாசிக்க.. >>

மயக்கம் என்ன >Mayakkam enna Watch movie Songs - Naan Sonnadhum Mazhlai - Panithuli shankar songs collection

14




பாடியவர்கள்: நரேஷ் ஐயர்,சைந்தவி
படம்: மயக்கம் என்ன
இசை: ஜி.வி.பிரகாஷ்
பாடல்: செல்வராகவன் 


நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி
என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சி நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற
அடி போடி போடி போடி பொட்ட மயிலே
ஓலை ஏதும் வந்துச்சா
உன்ன தூக்கி போக தான் வருவேனுன்னு
கிளி வந்து பதில் சொல்லுச்சா
கரு நாக்கு கார புள்ள
கருப்பட்டி நிறத்து முல்ல
எடுபட்ட நெனப்பு தொல்ல
நீ களவாணி
ஓஓ கருவாட்டு கொழம்பா நீயும் ருசி ஏத்துற
ஒரு வாட்டி தின்னு பார்க்க உசுப்பேத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

ஆடு ... ஆடு ...

ஆத்தாடி ஆடு மேய்க்க ராசா வந்தாரா
எங்க ஆடு தின்ன எச்சி புல்ல மேய வந்தாரா

அடி போடி போடி போடி முட்ட கன்னி
கட்டம் கட்டி பாஞ்சேன்
அட கண்ணை மூடி கொஞ்சம் சாஞ்சா போதும்
கனவுல தீ மிதிச்சேன்
கண்ணாடி வளையல் தாரேன்
காதுக்கு ஜிமிக்கி தாரேன்
கழுத்துக்கு தாலி தாரேன்
நீ வர்றியாடி
கருவாட்டு கொழம்பா ஆ ஆ... நீயும்... ருசி ஏத்துற

நான் சொன்னதும் மழை வந்துச்சா
நான் சொல்லல வெயில் வந்துச்சா
அடி ரெண்டுமே இதம் தந்துச்சா
முத்து முத்து பேச்சி

என் கண்ணுல பொய் இருக்கா
உன் கண்ணோட மை கிறுக்கா
அடி கள்ளியே அறிவிருக்கா
என் மூச்சு நின்னு போச்சு
காத்தோடு காத்தாக உள்ள வந்தியா
காட்டோட காடாக கட்டிபோட்டியா
ஊத்தாத ஊத்தெல்லாம் உள்ள ஊத்துது
என் பேச்செல்லாம் நின்னு போயி மூளை சுத்துது.





மேலும் வாசிக்க.. >>

இதயத்தின் ஓசைகள் - காதல் கவிதைகள் - Panithuli shankar Kadhal kavithaigal

27



டலோடு உயிர்
வருவது காதலா !?
உயிரோடு உடன் வருது காதலா..!
உடல் விற்றேன் மனந்தவளிடம்
இதயம் விற்றேன் என்னை உணர்ந்தளிடம்.....!

ன் அறிமுகத்தின்
முதல் நாள் மீண்டும் ஒரு குழந்தையாய்
இந்த உலகம் மறக்க செய்தாய்....
உந்தன் சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும்
ஒவ்வொரு நிமிடமும்
இன்னும் சிறிது நீளாத
இந்த கணங்கள் என்ற ஏக்கம்
இப்போதும் இதயத்தில் பசுமையாய் !

நீண்ட உரையாடல்களுக்கு இடையினில்
உன் வார்த்தைகள் இல்லாத மவுனத்தில்
பல முறை
அர்த்தம் தேடி தொலைந்து போயிருக்கிறேன் .!

ன் மடி சாய்ந்து உறங்கிப்போன
நிமிடங்கள் ஒவ்வொன்றும்
என் வாழ்வில் நான் பெற்ற
மிகப்பெரிய பொக்கிஷம் என்றாகிப்போனது . !

ன் தனிமைகளின் ஒவ்வொரு
இரவுகளும் உன் ஞாபகங்களின்
எல்லைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கிறது . !

சிறு எறும்பு கடித்து
துடித்துப் போகும் குழந்தை ஒன்றின்
அழுகை சத்தமும்
உன் நினைவுகள் சுமந்து
ரணப்படும் என் இதய சத்தமும்
இப்பொழுதெல்லாம் ஒன்றாகிபோகிறது .!

ன்னுடன் உரையாடி
இந்த உலகம் மறந்த நிமிடங்கள் .
இப்பொழுதெல்லாம் உன் நினைவுகள் சுமந்து
இறந்துபோகத் துடிக்கிறது .!

காதல் செய்வதும்
பிரிந்து அழுவதும்
வாடிக்கையாகிப் போன இந்த உலகத்தில்
நமது கண்ணீரும் இன்னும் சில நாட்களே !.....

-பனித்துளி சங்கர்.
மேலும் வாசிக்க.. >>