Panithuli shankar விழிப்புணர்வு கவிதை - தீவிரவாதம் !.

0




தீவிரவாதம் !

பிறப்பின் சிறப்பு அறியாதவனும் 
இறப்பின் வலி உணராதவனும் செய்கின்ற 
மறைவுகளற்ற வெறிச்செயலுக்கும், கொலைகளுக்கு 
இவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் தீவிரவாதம் !.....

தில் கொல்பவனும், கொல்லப்படுபவனும் மனிதனே 
என்பதை என்றுதான் உணரப்போகிறார்களோ  !...

                                 
                          ... பனித்துளி சங்கர் ..




............................................................................................................................................................
மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar உணர்வுகளின் உதிரல்கள் கவிதை - மனிதம் கொன்ற மனிதர்கள்

0





மனிதம் கொன்ற மனிதர்கள் !..



நீ வாழ்ந்த உலகத்தில் உணவுக்கும் உண்மையான உறவுக்கும் பஞ்சமில்லை ... 

நீ மனிதன் என்றாலும் உன்னை அரவணைத்து ஆனந்தமாய்தான் வைத்திருந்தது அந்த காடெனும் தாய்.....

நீ அங்கு வாழ்ந்தவரை எந்த ஐந்தறிவு உறவுகளும் உன்னை துன்புறுத்தியதில்லை....

இயற்கை எனும் தேவதை உனக்கு தண்ணீரின் சுவையைத் தவிர கண்ணீரை ஒருபோதும் கொடுத்ததில்லை ... 
ஆனால் 
மரம் கொன்று, இயற்கை தின்று, மனிதம் தொலைத்து, 
தன்னை மனிதன் என்று சொல்லிக்கொள்ள அடையாளம் தந்த ஆறறிவை எங்கோ கழற்றி வீசிவிட்டு.... எதற்கு வாழ்கிறோம் என்று அறியாமல் இருட்டு உலகத்திற்குள் குருட்டுத் தனமாய் வாழ்ந்துக் கொண்டிருக்கும் சுவர்கள் இல்லாத மனிநிலை பாதிக்கப்பட்ட என்னைப்போன்ற இந்த மனித இனம் வாழும் நரகத்திற்குள் ஏன் வந்தாய் தோழா...??!!!

இவர்கள் வாழ்வது நகரம் என்று சொல்லி பீத்திக் கொள்வார்களேத் தவிர இவர்களுக்கு நாகரிகமும் தெரியாது நல்லவர்களையும் தெரியாது.....!


இவர்கள் உன்னை இந்த நாட்டை ஆளவிட்டாலும் விடுவார்களேத் தவிர... 
ஒருபோதும் உன் பசியை தீர்த்து பாதுகாப்பாய் வாழவிடமாட்டார்கள்...!!

இவர்களுக்கு தெரிந்தது எல்லாம் முகமூடி வாழ்கையே....!

இவர்கள் கொண்டாடுவது எல்லாம் கரைவேட்டி கொள்ளைக்காரர்களையும்.... காவிவேட்டி கொலைகாரர்களையும் மட்டுமே....
இவர்கள் தேடுவது எல்லாம் அடுத்து அவர்களின் மீதமிருக்கும் வாழ்க்கையை சிறந்த முறையில் சிரழிக்க போகிறவர்கள் யார் என்பதையே !...

இங்கு ஒருசில அறிவுகளே கொண்ட கோழி இனம் கூட தனது உறவிற்கு தீங்கு நேர்ந்தால் பல அடி தூரம் பறந்து அதை காக்கும்...
ஆனால் இந்த ஆறறிவு கொண்ட முட்டாள் இனமோ அவர்களின் மரணத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்து ரசிக்கும்...!!

பெரிதாக வேறொன்றும் உன் மரணத்திற்கு பின் சொல்ல தெரியவில்லை தோழா !..

அந்த காடெனும் தாய் உன்னைப் போன்ற ஒரு குழந்தையை மீண்டும் இழந்துவிடாமல் இந்த மனித அரக்கர்களிடமிருந்து பாதுகாத்து தன்னிடமே வைத்து வளர்க்கட்டும் !....


                          ... பனித்துளி சங்கர் ...




..............................................................



  

மேலும் வாசிக்க.. >>

Panithuli Shankar Kavithaigal - ஆதரவற்ற குழந்தை கவிதை

0






மேலும் வாசிக்க.. >>

பனித்துளி சங்கர் கவிதை - இந்திய அரசியல்

0


மேலும் வாசிக்க.. >>

இன்று ஒரு தகவல் - தன்னம்பிக்கை தூண்டும் தகவல்கள்

0

 
ம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை...


நாம் நம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை

* கடந்த, பத்தாயிரம் ஆண்டுகளில், எந்த நாட்டின் மீதும் இந்தியா போர் தொடுக்கவில்லை.

* கணக்கிடுவதற்கு மிகத் தேவையான, "பூஜ்ஜியத்தை' கண்டுபிடித்தது இந்தியா; கண்டுபிடித்தவர் ஆர்யபட்டர்.

* கிறிஸ்துவுக்கு, எழுநூறு ஆண்டுகளுக்கு முன், இந்தியாவில் தட்சசீலத்தில், உலகிலேயே முதன்முதலாக பல்கலைக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து, பத்தாயிரத்து, 500 மாணவர்கள் இங்கு பயின்றனர். அறுபதுக்கும் மேற்பட்ட பாட வகைகள் கற்பிக்கப்பட்டன.

* கிறிஸ்துவுக்கு, நானூறு ஆண்டுகளுக்கு முன், நாளந்தா பல்கலைக் கழகம் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. இது, கல்வி உலகுக்கு பெரும் வழிகாட்டியாக அமைந்தது.

* ஐரோப்பிய மொழிகள் அனைத்திற்கும் தாய் மொழியாக அமைந்தது, இந்திய மொழியான சமஸ்கிருதம். கம்ப்யூட்டர், "சாப்ட்வேர்' தயார் செய்ய மிகவும் ஏற்ற மொழி சமஸ்கிருதம் தான் என, அமெரிக்கப் பத்திரிகையான, "போபர்ஸ், 1987 ஜூலை இதழில் குறிப்பிட்டுள்ளது.

* ஆயுர்வேதம் தான் மனித இனத்திற்கு ஆதியில் தெரிந்த மருத்துவ முறை. இதை, இந்தியாவின் சரகர் என்பவர்தான் கண்டு பிடித்து முறைப்படுத்தினார். இன்று, உலகம் முழுவதும் ஆயுர்வேத மருத்துவ முறை புத்துயிர் பெற்று வளர்ந்து வருகிறது.

* பிரிட்டிஷ்காரர்கள் இங்கு ஊடுருவும் முன், இந்தியாதான் உலகிலேயே பணக்கார நாடாகத் திகழ்ந்தது.

* "நாவிகேஷன்' - என ஆங்கிலத்தில் சொல்லப்படும், கப்பல் - படகு செலுத்தும் கலையை 6,000 ஆண்டுகளுக்கு முன், சிந்து நதியில் நிகழ்த்திக் காட்டியவர்கள் இந்தியர்களே. "நவ்காத்' எனும் சமஸ்கிருத சொல்லே ஆங்கிலத்தில், "நாவிகேஷன்' என்றானது. ஆங்கிலத்தில், "நேவி' என, கடற்படையைக் குறிக்கும் சொல், "நூவ்' என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்தே வந்தது.

* சூரியனை பூமி சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை என்பதை, ஐரோப்பிய வான சாஸ்திரி ஸ்மார்ட் கண்டுபிடித்து கூறுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அதாவது, கி.பி, 5ம் நூற்றாண்டிலேயே இந்தியாவின் பட்டாச்சாரியர் கண்டுபிடித்து விட்டார். மிகச் சரியாக 365.258756484 நாட்களாகிறது என்பதை பட்டாச்சாரியர் கண்டுபிடித்தார்.

* கணித சாஸ்திரத்தில், "பை' என்பதன் மதிப்பைக் கணக்கிட்டவர் புதையனார் என்ற இந்தியரே. ஐரோப்பிய கணித மேதைகள், "பித்தகோரஸ் தேற்றத்'தை, விளக்குவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன், அதாவது, 6வது நூற்றாண்டிலேயே விளக்கினார் புதையனார்.
* கணிதத்தில் அல்ஜிப்ரா, டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் ஆகியவை இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டது. குவாட்ராட்டிக் சமன்பாடுகள், ஸ்ரீதராச்சார்யா என்ற இந்தியரால், 11ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

* கம்பியில்லா தகவல் தொடர்பை, இந்தியாவின் ஜகதீஷ் போஸ் தான் முதன் முதலில் கண்டுபிடித்தார் - மார்கோனி (ரேடியோ கண்டுபிடித்தவர்) அல்ல என்று அமெரிக்க நிறுவனமான ஐ.இ.இ.இ., அடித்துக் கூறுகிறது.

* செஸ் விளையாட்டு, இந்தியாவிலேயே முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரஞ்சா (சதுரங்கம்), அஷ்டபாதா என, இரு பெயரில் அழைக்கப்பட்டது.

* சிசேரியன், கேட்ராக்ட், செயற்கைக் கால், எலும்பு முறிவு, பித்தப்பைக் கல், மூளை மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகளை, 2,600 வருடங்களுக்கு முன்பே, செய்து இருக்கிறார் சுஷ்ருதன் என்ற இந்தியர். அறுவை சிகிச்சைக்கு முன் கொடுக்கப்படும் மயக்க மருத்து சிகிச்சையையும் செய்து இருக்கிறார். 125க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கு கருவிகளையும் பயன்படுத்தி உள்ளார்.— இப்படி எல்லாவற்றிலும் சரித்திரத்தில் நம்பர் ஒன் ஆகத் திகழ்ந்த இந்தியர்கள், இன்றும் நம் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்டி வருகின்றனர்.

உதாரணத்திற்கு: அமெரிக்காவில் உள்ள டாக்டர்களில், 38 சதவீதம் இந்தியர்கள்; விஞ்ஞானிகளில், 12 சதவீதம் இந்தியர்கள்; விண்வெளி துறையான, "நாசா'வில், 36 சதவீதம் இந்தியர்கள்; பில்கேட்சின், "மைக்ரோ சாப்ட்' நிறுவனத்தில், 34 சதவீதம் இந்தியர்கள்; கம்ப்யூட்டர் நிறுவனமான ஐ.பி.எம்.,மில் 28 சதவீதம் இந்தியர்கள்; அதே போல, "இன்டெல்' கம்ப்யூட்டர் நிறுவனத்தில், 17 சதவீதம் இந்தியர்கள்; "சிராக்ஸ்' நிறுவனத்தில், 13 சதவீதம் இந்தியர்கள்; அமெரிக்காவில், 35 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர்...

இவை சிறு எடுத்துக்காட்டு தான்; அரசியல், ஜாதி, மதம் இவற்றை ஒதுக்கி வைத்து, நம் மக்கள் தம் அறிவுத் திறனை சரியான பாதையில் செலுத்தினால், நம்மை மிஞ்ச இவ்வையகத்தில் எவரும் இல்லை தானே!

தகவலுக்கு நன்றி இணையம் !...


மேலும் வாசிக்க.. >>

Panithuli shankar Tamil Kavithaigal - Vaazhkkai

0

Tamil Kavithaigal - Panithulishankar

மேலும் வாசிக்க.. >>