உயிரைத் தின்ற சில நொடிகள் - Panithulishankar kavithaigal - பனித்துளி சங்கர் கவிதைகள்

13

ழை பொழிகிறது குடையில்லை...
உயிர் கரைகிறது விடையில்லை..
இலவம் பஞ்சாய் இதயம் வெடிக்கிறது...
இந்த இளமைத் தாண்டி உயிர் துடிக்கிறது....

ன் வெட்கம் தானடி
நான் எழுதும் காகிதம்....
உன் பார்வை தானடி
என்னை வெல்லும் ஆயுதம்...
உன் அழகிய நினைவுகள் தானடி
எந்தன் உலகின் சிறந்த ஓவியம்...
தயக் கோப்பையில் காதல் ஊற்றினாய்
என் இயந்திர வாழ்க்கையில்
இளம் பூக்கள் நீட்டினாய்
இரவின் உறக்கத்தில் கனவுகள் வீசினாய்...!

ன் ஞாபகம் தின்றே பசித் தீர்க்கிறேன்
என் நிழல்களில் உனக்கு குடை பிடிக்கிறேன் .
இன்னும் ஏனடி என்னை கொல்லப் பார்க்கிறாய்..!!??
நீ வானவில்லாய் வந்து செல்லும்
சில நொடிகளில்
என் உயிர் மீண்டும்
இந்த உடலில் சேர்க்கிறாய்....!!

- நேசத்துடன் 
பனித்துளி சங்கர் -
* * * * * * *
மேலும் வாசிக்க.. >>

காத்திருப்பு - பனித்துளி சங்கர் கவிதைகள் - Panithulishankar Tamil Kavithaigal

7

ப்போதோ எங்கேயோ
யதார்த்தமாய் அறிமுகமானாய்....
அன்று முதல் மீண்டும் 
உந்தன் சந்திப்புக்காக தினந்தோறும் 
வந்து செல்கிறேன் அதே இடம்...!

றிமுகத்தின் முதல் நாள்
முழுவதும் உயிர் குடித்தாய் 
தினம் சிந்திச் சிதறும் 
உன் ஞாபகங்களின் உச்சத்தில் 
துரும்பென உயிர் கரைகிறேன்...!

கர்ந்து செல்லும் 
கடிகார நொடிமுள்ளின் 
ஒவ்வொரு அசைவுகளும் 
உன் பிரியங்களின் ஆதிக்கத்தை
என்னுள் ஆழ வீசிச் செல்கிறது..!

வ்வொரு நொடியும் உனக்காக 
ஆயிரம் கற்பனைகள் 
எண்ணப் பெருவெளி எங்கும்... 
கண்விழித்து கனவு காண்கிறேன்
உந்தன் கரம் பிடிக்கும் 
அந்த நாளுக்காக.....

 காதல் கொண்ட 
ஒவ்வொரு இதயத்திலும்
உயிர் பெறுமோ இந்த தாகம்....
கடந்து செல்லும்
ஒவ்வொரு நிமிடத்திலும் 
என்னை கனவுகளுடன் 
மீளச் செய்யும்
உந்தன் நினைவுகளின் 
சிலநேர சந்தோசம் 
மீண்டும் பிறக்கச் 
செய்கிறது குழந்தையாய்....

தினம் வரும் கனவுகளுக்குள் 
உந்தன் காதல் விதைத்தாய்
நித்தம் சிதறும் சிரிப்பிற்குள் 
உந்தன் நினைவுகள் புதைத்தாய்... 
சுவாசமின்றி திணறும் 
ஒரு தேகமாய் உந்தன் 
வருகைக்காய் காத்துக் கிடக்கிறேன்.....
* * * * * * *
நேசத்துடன்
-பனித்துளி சங்கர் -
மேலும் வாசிக்க.. >>