ஒரு மனிதன் ஒரு மரம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - One Man One Tree - Iyarkai kavithai 02 May 2011


இது ஒரு மரம் தின்ற மனிதனின் உணர்வுகளின் அழுகுரல் !  

ரு உலகம்
ஒரு மனிதன்
ஒரு விதை
ஒரு செடி
ஒரு மரம்
ஒரு காய்
ஒரு கனி
வளர்த்துக்கொண்டே இருந்தான் மரங்கள் .
வளந்துகொண்டே இருந்தான் மனிதன் .
ல வருடங்கள்
பல மாற்றங்கள்
பல விஞ்ஞான வளர்ச்சிகள்
மறந்து போனான் மரங்கள் .
இறந்து போனான் மனிதன் .
இவன் உடல் எரிக்க மீண்டும்
இவன் உடன் கட்டை ஏறியது மரமும் !....

                                    ❤ பனித்துளி சங்கர் ❤



டிஸ்கி ; னிதன் இருக்கும் வரை மட்டும்தான் பயன் . ஆனால் மரங்கள் இறந்த பின்பும் பயன் . மரங்களை வளர்க்க இயலாவிட்டாலும் இயன்றவரை. மனிதனால் செய்யப்படும் மரங்களின் கொலைகளைத் தவிர்ப்போம் .

12 மறுமொழிகள் to ஒரு மனிதன் ஒரு மரம் - பனித்துளி சங்கர் கவிதைகள் - One Man One Tree - Iyarkai kavithai 02 May 2011 :

கிருபா said...

அருமையான கவிதை


வந்துட்டம்ல வறேன்

கிருபா said...

அருமையான கவிதை


வந்துட்டம்ல வறேன்

காதல் கவிதை (பாகம் 8)

middleclassmadhavi said...

மரம் வளர்ப்போம்!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மரம் வளர்த்து நாம் மனிதனாவோம்...

Anonymous said...

கலக்கிறீங்க பாஸ் ... மரம் நடுவோம் ...

Unknown said...

மரந்தான்...
மரந்தான்...
மனிதன்....
மறந்தான்...
மறந்தான்.

கடம்பவன குயில் said...

நாம் பிறந்ததிலிருந்து சாகும்வரை நமக்குப்பயன் தருவது மரங்கள். மரம் வளர்ப்போம் நம் சந்ததியினருக்கு ஆரோக்கியம் கொடுப்போம்

sankar venu said...

தங்களின் பதிவுகள் பிடித்திருக்கிறது,,,,,,,,

போளூர் தயாநிதி said...

மனிதன் மரித்து போனால் பிணம் அனால் ஒருமரம் இருந்தாலும் வீழ்ந்தாலும் மரம் மரமாவே இருந்து காலத்தால் அழியாமல் இருக்கிறது என்பதை பதிவு செய்த விதமும் மரத்தை வளர்க்க வேண்டிய தேவையையும் உணர்த்துகிறது உங்கள் ஆக்கம் பாராட்டுகள்.

vidivelli said...

நண்பரே நீண்ட நாட்களிற்கு பின் தொடர்புகொள்வதில் சந்தோசம்,
நலமாய் இருக்கிறீங்களா


நண்பரே என்ன கற்பனை!!!!!!!
அழகிய கவிதை......

.....நம்ம பக்கமும் வாங்க..............

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் சங்கர்,

குறையையும் சுட்டலாம் தானே ?
இறுதி 8 வரிகளை இன்னும் செப்பனிட்டிருக்கலாம்..

வாழ்த்துக்கள்.

மரம் வளர்ப்போம்..மழை பெறுவோம்..

நன்றி

பூஞ்சோலை said...

மரம் வளர்க்க வழியில்லை

ஆனாலும் செடி வளர்க்கிறேன்

தொட்டிகளில்....