காதல் வந்தால் - காதல் கவிதை Panithuli shankar love poem 05 +01+2011




ந்தக் காதல் வந்தால்
 உறக்கம் பறிபோகும்.,
உணவு மருந்தாகும்
கண்ணாடி காதலனவான் ,
 பனித்துளி சுடும்
வெயில் குளிரும்
கடிகாரம் எதிரியாய்த் தோன்றும் .
கண்களை திறந்துகொண்டே கனவுகளில் மிதப்பாய்
காகிதத்தில் அவனின் நினைவுகள் கவிதைகளால் நிரப்பப்படும்
அவனுக்கான காத்திருப்பின் தருணத்தில்
கைகளில் கிடைக்கும் அனைத்தும் காயம்படும் .
பிறர் கேட்கும் கேள்விகளுக்கு மவுனத்தால் மட்டுமே பதில்கள் உதிர்ப்பாய்
 சர்க்கரை கசக்கும்,
எங்கோ துரத்தல் மெல்லக் கேட்கும்
அவனது குரல் மட்டும் உனக்கு இனிக்கும் .
ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
அவன் உன் அருகில் இருக்கும் அந்த நொடி
 இறந்துபோகத் நினைப்பாய் !
அவன் அருகில் இல்லாத மறு நொடி உலகையே வெறுப்பாய்
 இதுதான் காதல் !



ந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், தமிழிஷ், உலவு.காம் மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.



28 மறுமொழிகள் to காதல் வந்தால் - காதல் கவிதை Panithuli shankar love poem 05 +01+2011 :

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பிரபல பாடகரின் பிரபலமில்லாத மறைவு - Bobby Farrel

ம.தி.சுதா said...

/////ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் ./////

அடடா இப்படியெல்லாம் நடக்குமா... ஹ..ஹ..ஹ..

Unknown said...

இது பெண் குரலாக ஒலித்த கவிதை?

ஜெயந்த் கிருஷ்ணா said...

இந்த காதல் வந்தால் நெசமாலுமே நல்லாயிருக்கும்,,,ஆனா வருமா...

Anonymous said...

அடடா இன்னொரு வைரமுத்து!!!!!

செல்வா said...

// பனித்துளி சுடும்//

நீங்க சுடுவீங்களா அண்ணா ..?

செல்வா said...

//ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் ///

அட பாவமே ..?!

Unknown said...

இதையெல்லாம் ஒரு கவிதைன்னு எழுதுற உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியலை..

sofianeelimaa@gmail.com

Anonymous said...

அனுபவமாய் அழகாய் ஒரு காதல் கவிதை...

THOPPITHOPPI said...

அருமையான காதல் வரிகள்

Unknown said...

// கல்பனா said...
அடடா இன்னொரு வைரமுத்து!!!!!//

கல்பனா அவர் வைர முத்து

Chitra said...

nice. :-)

HAPPY NEW YEAR!

செங்கோவி said...

வைரமுத்துவின் காதலித்துப் பார் கவிதை ஞாபகம் வருகிறதே..நன்று.

Prabu Krishna said...

காதலின் வரிகள்♥♥♥

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Unknown said...

அருமையான காதல் வரிகள்

உங்களுக்கு புண்ணியமா போகும் இந்த பதிவப்பாருங்க

>>>>>

உதவுங்கள்...http://vikkiulagam.blogspot.com/2011/01/help.htmlகாத்திருக்கிறேன்.........

சேலம் தேவா said...

@செங்கோவி

ஆம்..!! எனக்கும்..!! நன்றாக உள்ளது.

Jana said...

வரும்போதும் வலியுடனும், போகும்போதும் வலியுடனும்... வந்துபோவது காதல் மட்டும்தான் போல???

Unknown said...

very nice

Indujan said...

நானும் காதலித்திருக்கிறேன், இதைவிட..... காதலிப்பேன். நன்றி நன்பா

ரேவா said...

ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
உண்மைதான்... அழகான காதல்...
வாழ்த்துக்கள் நண்பரே!!!

Look4Reality said...

ஜோடி திரைப்படத்தில் வைரமுத்து சொன்ன கவிதை நினைவுக்கு வருகிறது. இருப்பினும் நன்றாகவே உள்ளது. வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

அழகான வரிகள் நண்பா

Anonymous said...

ஜெய் அண்ணாபனித்துளி கூட வைர முத்து தான்

Unknown said...

//பனித்துளி சுடும்
வெயில் குளிரும்//
சகோதரர் பனித்துளி சங்கர் அவர்களின் வரிகள் அருமையாக உள்ளது

போளூர் தயாநிதி said...

ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
உண்மைதான்... அழகான காதல்...
வாழ்த்துக்கள்.
parattugal

போளூர் தயாநிதி said...

ஆயிரம் மைல்கள் தொலைவு கூட
அவன் அருகில் இருந்தால்
நடந்தே கடக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் .
உண்மைதான்... அழகான காதல்...
வாழ்த்துக்கள்.
parattugal

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் பெற்றுக்கொள்ளவும்
http://pirashathas.blogspot.com/2011/01/blog-post_07.html