எண்ணங்களில் வண்ணங்கள்
பூசி செல்கிறது உந்தன்
இதழோரப் புன்னகை
சில யதார்த்தங்கள் வழிந்து விழுந்திடும்
வியர்வைத் துளிகளாய்
கழிந்து போகிறது கால ஓட்டத்தில்
மறக்க முயற்சித்து தோற்றுப்போன
எண்ணங்களின் தொகுப்புகளில்
இன்னும் குறையாத அணிவகுப்பாய்
மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன
உன் நினைவுகள் .
ஆணிகள் எதுவுமின்றியே
அறையப்படுகிறது எனது
எதிர்பார்ப்புகள் அனைத்தும்
உன் வருகை என்னும் சிலுவைகளில் .
உயிரிழந்த தேகமாய் தினமும்
உனது உறவை தேடி தேடித்
தொலைந்துபோகிறேன் கனவுகளுக்குள்
நீ அருகில் இருக்கும்பொழுது
நொடிகளாய் கழிந்த பொழுதுகள் எல்லாம்
இன்று தீர மறுத்து வருடங்களாய் வதம் செய்கிறது .
தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள் .
உடையப் போகும் நீர் குமிழியாய்
ஒவ்வொரு நொடியும்
துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்
விரைவில் வந்து தந்துவிடு சுவாசம்
உயிர் நின்றுபோவதற்குள் ,!
இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி மற்றும் தமிழ்10-ல் குத்தவும்.
Tweet |
23 மறுமொழிகள் to மந்திரப் புன்னகை கவிதைகள் :
//ஆணிகள் எதுவுமின்றியே
அறையப்படுகிறது எனது
எதிர்பார்ப்புகள் அனைத்தும்
உன் வருகை என்னும் சிலுவைகளில் .
//உடையப் போகும் நீர் குமிழியாய்
ஒவ்வொரு நொடியும்
துடித்துக்கொண்டிருக்கிறது இதயம்
விரைவில் வந்து தந்துவிடு சுவாசம்
உயிர் நின்றுபோவதற்குள் ,!
செம...அசத்தலான கவிதை...
உயிர் நின்று போவதற்குள்ங்கறதுக்கு பதிலா... குமிழ் உடைந்து போவதற்குள்..! அப்படின்னு முடிச்சிருந்தா இன்னும் நச்சுன்னு இருக்கும்னு தோணுது..
கவிதை அருமை..
நல்லா இருக்கு சங்கர்.
அருமையான கவிதை...
கவிதை மிகவும் அருமையாக உள்ளது நண்பரே..!
ம்ம் கவிதை களை கட்டுது வழமை போலவே!!
கவிதை அழகாய் உணர்வாய் இருக்கிறது பாராட்டுக்கள்.
எண்ணங்களில் வண்ணங்கள்பூசி செல்லும் புன்னகை அழகு.
கவிதை அருமையாய் அழகாய் இருக்கிறது. வாழ்த்துக்கள்.
கவித கவித
சூப்பர் சார்
என்ன கவிஞ்சரே
கலக்குறீங்க
நல்லாருக்கு:)
/*தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள்*/
நல்ல வரிகள்
/*தனிமையில் உதிர்க்கும் புன்னகைகளில்
எல்லாம் சாயம் இழந்த
வானவில்லின் பிம்பங்கள்*/
நல்ல வரிகள்
அருமை
by mtvenkateshwar.blogspot.com
அருமை
by mtvenkateshwar.blogspot.com
சூப்பர்
எனக்காகவே எழுதி இருக்குற மாதிரி இருக்கு சங்கர். அருமை !!!
நல்லா இருக்கு
"மறக்க முயற்சித்து தோற்றுப்போன எண்ணங்களின் தொகுப்புகளில் இன்னும் குறையாத அணிவகுப்பாய் மனக்கிடங்கில் சத்தமிடுகின்றன உன் நினைவுகள்"
அருமையான வரிகள் கவிஞரே:::::::::::::
தமிழ் இனிமையா .....?பொருள் சுமக்கும் கவிவரிகள் இனிமையா....? எதைச் சொல்ல்வது
வார்த்தைகள் இல்லை கவிஞரே .....
நல்லா இருக்கு
Post a Comment