மறந்து போனதாய்
நினைக்கும் ஞாபகங்கள்
எல்லாம்
மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இந்த பேனாவின் இதழ்கொண்டு...
மை தீரும் பொழுதெல்லாம்
உள்ளம் துடிக்கிறது
அதில் உதிரம் ஊற்றி நிரப்ப...
தீர்ந்து போகாத
உன் நினைவுகள் ஊற்றி
நிரப்பிவிட்டேன்
இதோ மெல்லக்
கசியத் தொடங்கிவிட்டது
நம் நேற்றைய ஞாபகங்கள்
இந்த வெற்றுக் காகிதங்களில்
கவிதையென......!!

