பனித்துளி சங்கரின் கவிதைகள் : சின்ன சின்ன மழைத்துளி : chinna chinna mazhai thuli (Panithuli sangar tamil kavithaigal )

நேற்றைய இரவு எதிர்பாராத மழை
உடைபட்ட வானத்தின் கீழ்
 குடையின்றி ஒரு தேகமாய்
முகம் நிமிர்த்தி கண்கள் மூடி
மழைத்துளிகளை தேகம் முழுவதும்
ஏந்திக்கொண்டதில்தான்  எத்தனை ஆனந்தம் !?
ரவு முழுவதும் நனையத் துடித்தும்
சில வினாடிகளில் கனவாகிப் போனது
அந்த அழகிய நிஜம் .!
  சில வினாடிகளே வந்து சிந்தி சென்றாலும்
இன்னும் தூரிக்கொண்டே இருக்கிறது
அந்த அழகிய நிமிடங்கள்
நிற்காத அடைமழையென என் உள்ளமெங்கும் .!
ரவுகள் விடிந்துபோகலாம்
நிமிடங்கள் கடந்துபோகலாம் 
இருப்பிடம் மாறிப்போகலாம்
ஆனால் நான் மட்டும் மீண்டும்
ஒரு மழைக்காக காத்திருக்கிறேன்
அதே ஏக்கங்களுடன் வானம் பார்த்த பூமியாய் !!!!

19 மறுமொழிகள் to பனித்துளி சங்கரின் கவிதைகள் : சின்ன சின்ன மழைத்துளி : chinna chinna mazhai thuli (Panithuli sangar tamil kavithaigal ) :

Unknown said...

நல்கவிதை.

same feeling....

பாட்டு ரசிகன் said...

மழையில் நனைய அத்தனை மனமும் ஏங்கும் தங்கள் கவிதையை படித்தபின்...

பாட்டு ரசிகன் said...

அருமையான கவிதை வாழ்த்துக்கள...

சாகம்பரி said...

மழை என்பது ஒரு குறியீடா. அப்படியெனில் உள்ளத்து வேதனைகளை கழுவி, இதமான குளிர்ச்சியை தரும் மழையை அனைவரும் வேண்டுவோம்.

Lali said...

சில வினாடிகளில் கனவாகி போன அழகிய நிஜம்.. நெஞ்சத்தை தொடுகிற உணர்ச்சிகள்..
பல விநாடிகளை நம் வாழ்க்கையில் இதே போல கடக்கிறோம், நெஞ்சம் கனக்கிறோம்..
வாழ்த்துக்கள் நட்பு! :)


http://karadipommai.blogspot.com/

Unknown said...

அழகான கவிதை வரிகள்

Sivakumar said...

எரிக்கும் கோடையில் தெறிக்கும் நீர்த்துளியாக..தங்கள் கவிதை.

Praveenkumar said...

Kodai veiyulukku manathai kulirvikkum ithamaana kavithai. Super thala.

Praveenkumar said...

Ethai paditha pin ingu naanum mazhaikaai engukiren...!

செய்தாலி said...

வரித் துளிகளில்
மழைத் துளியின் ஏக்கம்

அருமை அழகான கவிதை பாராட்டுக்கள் தோழரே

vimalanperali said...

நல்ல மழை கவிதை.நனைய வைத்துவிடுகிறது மனதை.

Bharathi said...

என்ன அழகு!! வரிகள் அருமை!! அதே மழை நாளுக்குத் தான் பலரும் காத்திருக்கிறோம்....

tamilbirdszz said...

very nice poem

சக்தி கல்வி மையம் said...

மழை அருமையாக ஒரு கவிதையை தந்திருக்கிறது.

kaanda samy said...

Kathal oru katalpola anal kathli thorthal varum kannir katalpola

Unknown said...

Nalla kavithi

Unknown said...

Wonderfullllllllll

Unknown said...
This comment has been removed by the author.
akshaya said...


MARAM VALARPOM MAZHAI PERUVOM......... VAKIYANGAL OVVONDRUM MAZHAI THULIKAGA YENNI YENGA VAITHUVITANA NANDRI.................