அனைத்து அன்பின் உறவுகளுக்கும் இந்த பனித்துளி சங்கரின் வணக்கங்கள் நீண்ட இடைவெளிக்குப்பிறகு உங்கள் அனைவரையும் மீண்டும் இன்று ஒரு தகவலின் வாயிலாக சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி . இன்று ஒரு காலத்தில் இந்த உலகைய மிரள செய்த ஒரு ஒரு இரும்பு மனிதனையும் வியக்க வைத்த ஒரு சரித்திர நாயகனின் ஒரு சிறிய சந்திப்பை பற்றியதே இந்த தகவல் ! நிச்சயம் உங்கள் அனைவரையும் இந்த தகவல் வியப்பில் ஆழ்த்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பேன் . சரி இனி நாம் தகவளுக்குள் செல்லலாம்
நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற பொது ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டார் . ஹிட்லருடைய ஆட்கள் ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .
ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்..
கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள் “ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…
ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கிடையாது ” என்று கேட்டார்.
நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திர போசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது” என்றார்…!
Tweet |
0 மறுமொழிகள் to இன்று ஒரு தகவல் - ஹிட்லர் கண்டு பயந்த ஒரு மனிதர் - Hitler with Subhash chandra bose Histry :
Post a Comment