நம்பிக்கை கவிதைகள் - வாழ்வின் ருசி - பனித்துளிசங்கர் Nambikkai kavithaigal in tamil



நாற்பது வயதில் சாய்வு நாற்காலி தேடும் 
இந்த காலத்தில்
எழுபது வயதில் 
உழைக்கவேண்டி உதிரம் துடிக்கிறது . 
விற்கக் கூடுமா பலகாரம் என்று எண்ணுவதை விட 
விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் 
வயிற்றுப் பசியிலும் ,
வாழ்க்கையின் ருசியிலும் ஊறிப்போனது. 
வகை வகையாய் பலகாரங்கள் விற்றாலும் 
தினமும் இந்த ஒரிச்சான் வயிறு பசிபோக்க 
கொஞ்சோண்டு கஞ்சிதான் 
நாளையும் இந்த தேகம் உழைக்க ஊன்றுகோல் ! 
                                                         
-பனித்துளி சங்கர்

19 மறுமொழிகள் to நம்பிக்கை கவிதைகள் - வாழ்வின் ருசி - பனித்துளிசங்கர் Nambikkai kavithaigal in tamil :

Unknown said...

மாப்ள நச்!

ஹேமா said...

வறுமையானாலும் நம்பிக்கையே பலம் !

பாலா said...

வறுமையை வெல்லும் ஒரே ஆயுதம் உழைப்பு.

rajamelaiyur said...

அருமையான கவிதை நண்பா

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

பால கணேஷ் said...

இதயம் தொட்ட கவிதை!

test said...

Super boss!

குறையொன்றுமில்லை. said...

வறுமையிலும் நம்பிக்கையே பலம்.
நல்ல கவிதை.

ரசிகன் said...

யாரை நோவது?

:(

Thooral said...

அருமையான கவிதை ...
வாழ்த்துகள்

Prem S said...

கவிதை அருமை .உங்கள் தளம் LOAD ஆக அதிக நேரம் எடுக்கிறது அன்பரே கவனிக்கவும்

பனித்துளி சங்கர் said...

வேலை பளு காரணமாக மறுமொழிகளும் பதிவுகளும் தொடர்ச்சியாக எழுத இயலவில்லை இருப்பினும் இங்கு வருகை தந்து கருத்திட்டு ஊக்கமளிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல. நன்றி..! நன்றி..! நன்றி.!!

பனித்துளி சங்கர் said...

//சி.பிரேம் குமார் said...
கவிதை அருமை .உங்கள் தளம் LOAD ஆக அதிக நேரம் எடுக்கிறது அன்பரே கவனிக்கவும்// தங்களது தகவலுக்கு நன்றி நண்பரே..!! பழைய வெர்சன்களில் மட்டுமே இந்த குறைபாடு உள்ளது. மேலும் இன்டர்நெட் என்ஸ்புளோரர் 8 மற்றும் அதற்கு மேல் உள்ளவைகளில் நன்றாக உள்ளது நண்பரே..!! பயர்பாஸ் 3க்கு மேல் உள்ளதிலும் கூகுள் குரோமிலும் நன்றாக லோட் ஆகிறது நண்பரே..! தங்களது தகவலுக்கு நன்றி.

எஸ் சக்திவேல் said...

ரொம்ம்ம்ப டச் பண்ணிட்டீங்க.

Sharmmi Jeganmogan said...

அருமையான கவிதை சங்கர்.

இந்த வயதிலும் பிச்சை எடுக்காமல் உழைத்து உண்ண நினைக்கும் இந்தப் பாட்டியின் திடம் எனக்கும் வேண்டும் கடவுளே...

சந்தானம் as பார்த்தா said...

//விற்றுத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்

Touching lines...

SURYAJEEVA said...

மக்களை பற்றி சிந்திக்கும் கவிதை... தலை வணங்குகிறேன்

Anonymous said...

ம்ம்ம்... பாவம் தான் பரிதாபம் தான் . ஆரம்பமே அட்டகாசம் . நன்று.

திவ்யா @ தேன்மொழி said...

இங்கு நான் சுவைத்த முதல்துளி..! ருசி கண்டுவிட்டேன்..! இனி, தொடர்ந்து ருசிக்க வருகிறேன்..! வலைப்பூ வடிவமைப்பு அட்டகாசம்..!:)